India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஓசூர் பகுதியில் இருந்து சேலம் அருகே உள்ள தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு முட்டைகோஸ் ஏற்றி சென்ற வாகனம் கொத்தாம்பாடி என்ற இடத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வாகனத்தின் அடியில் சிக்கிய ஓட்டுனர் உட்பட 2 பேர் லேசான காயத்துடன் மீட்கப்பட்டனர். இந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (மே.24) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரியில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரியில் பிறந்த சுதந்திர போராட்ட வீரரான இராஜகோபாலாச்சாரியின் நினைவாக அவரின் இல்லத்தை தமிழக அரசு நினைவகமாக அறிவித்துள்ளது. இதில் தன் அரை நூற்றாண்டு காலத்தை பொது வாழ்வில் ஈடுபடுத்திக்கொண்ட, அவரின் வரலாறு பற்றிய குறிப்புகளும், அரிய புகைப்படங்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவகம் கிருஷ்ணகிரி ஒசூர் நெடுங்சாலையில் அமைந்துள்ளது.
தமிழகத்தில் முகூர்த்தம், வார விடுமுறை நாள்களை முன்னிட்டு 1,460 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அதிவிரைவு போக்குவரத்துக் கழகம் அளித்துள்ளது. அதன்படி இன்று (மே 24) மற்றும் நாளை (மே 25) ஆகிய தேதிகளில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக பெங்களூருவுக்கு 130 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
ஊத்தங்கரை விளையாட்டு அரங்கில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.49 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் இறகு பந்து உள் விளையாட்டு அரங்க கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம், சந்திரப்பட்டி ஊராட்சி, வேடப்பட்டியில் இருளர் இன மக்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், ரூ.48 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 11 வீடுகள் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே. எம். சரயு இ.ஆ.ப. இன்று 23.05.2024 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அதிகாரிகள் உடனிருந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் சேலம் சாரதா கல்லுாரி, தர்மபுரி விஜய் வித்யாலயா கல்லுாரி, ஊத்தங்கரை அதியமான் கல்லுாரிகளை சேர்ந்த வரலாற்றுத்துறை மற்றும் தமிழ்த்துறை மாணவியர் 40 பேருக்கு 15 நாட்கள் தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் பயிற்சி நேற்று துவங்கியது. மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுத்தலைவர் நாராயணமூர்த்தி இப்பயிற்சியை துவக்கி வைத்தார்.
ஓசூர்: டாடா எலக்ட்ரானிக்ஸ் தனது ஐபோன் அசெம்பிளி யூனிட்டை ஓசூரில் உள்ள புதிய தளத்தில் மேலும் விரிவுபடுத்த உள்ளது. ஏற்கனவே முன்மொழியப்பட்ட விரிவாக்கத்துடன் மேலும் விரிவாக்கம் செய்ய முடிவுசெய்துள்ளனர்.
இங்கே கிட்டத்தட்ட 2 லட்சம் ஐபோன்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் கிளஸ்டர் இங்கே உருவாக்கப்படுகிறது. உலகிலேயே பெரிய ஐபோன் தொழிற்சாலைகளில் ஒன்றாக இது இருக்கும் என்கிறார்கள்.
சூளகிரி அருகே அத்தி முகாம் பகுதியில் உள்ள சிவன் கோவிலில் கடந்த 16ம் தேதி இரவு வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது. இது தொடர்பாக பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் கொள்ளையர்கள் தாங்கள் திருடிய பொருட்களை கோவில் முன்பு இன்று அதிகாலை வைத்து விட்டு சென்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
ஓசூர் மாநகராட்சி தோட்டகிரி சாலையில் மணிவாசகன் (36) என்பவர் குடும்பத்துடன் வசித்துவந்தார். இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார். மனைவி, பிள்ளைகள் ஊருக்கு சென்றிருந்த நிலையில் நேற்றிரவு மணிவாசகம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஓசூர் அட்கோ போலீசார் உடலை கைப்பற்றி நடத்திய விசாரணையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடன் பிரச்சனையால் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.