India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்ட எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்களுக்கான மாதாந்திர குறைதீர் நாள் கூட்டம் ஜூன் 24 மாலை 4 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர் நாள் கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் நுகர்வோர்கள் தங்களது குறைகளை நேரடியாக தெரிவித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 14,644 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. இதில் பர்கூர், மத்தூர், காவேரிப்பட்டிணத்தில் மட்டுமே 10,600 ஹெக்டேரில் சாகுபடியாகிறது . தற்போது தென்னையில் கருந்தலைப்புழு தாக்கம் அதிகமாக உள்ளதால் அவற்றின் அறிகுறிகள், மேலாண்மை பற்றி கிருஷ்ணகிரி தோட்டக்கலை சார்பில் வழங்கப்படும் வழிமுறைகளை பின்பற்றி விவசாயிகள் பயன்பெற மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
கெலமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணி தலைமையில் இளநிலை உதவியாளர் சீனிவாசன், துப்புரவு மேற்பாா்வையாளா்கள் கெலமங்கலம் பேருந்து நிலையம், கடைவீதி, மளிகை கடைகள், காய்கறி கடைகள்,ஓட்டல்கள், பாஸ்ட் புட் கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர் . அதில் 2 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களுக்கு ரூ.2000 அபராதம் விதித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த லக்கசந்திரம் கிராமத்தில் எழுந்த நிலையில் உள்ள ஸ்ரீ அருள்மிகு ஊர் மாரியம்மன் கோவிலில் இன்று உலக மக்கள் நன்மைக்காக சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. விழாவில் கிராம மக்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடனுக்காக ஆடு கோழிகளை பலியிட்டு வழிபட்டனர். காலை முதல் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாமி தரிசனம் செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரியில் ஜூன் மாதத்திற்கான ‘உங்களை தேடி, உங்கள் ஊரில்’ திட்டம் இன்று நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு தெரிவித்துள்ளார். மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். கிருஷ்ணகிரி வட்டத்தில் இன்று(ஜூன் 19) காலை 9 மணி முதல் 20ஆம் தேதி காலை 9 மணி வரை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.
ஒசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முத்துராமன் ஜிபி மற்றும் சின்ன எலசகிரி பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ஜி.இ.இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதி ரூ.8 லட்சம் மதிப்பின் கீழ் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் கட்டி முடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த மையத்தை மேயர் எஸ்.ஏ.சத்யா திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி, பர்கூர் பேரூர் ஜெகதேவி ரோடு துரைஸ் மஹாலில் வடிவேல் ஆடைகள் விற்பனை செய்ய மண்டபத்தில் இருப்பு வைத்திருந்தார். இந்நிலையில், மஹாலில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஆடைகள் முழுவதும் எரிந்து சேதமாகின. இதை அறிந்த பர்கூர் எம்எல்ஏ மதியழகன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு வடிவேலுக்கு ஆறுதல் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் போலீசார் கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா என்று கண்காணித்தனர். அந்தவகையில் ஓசூர், மத்திகிரி, பாகலூர், பேரிகை, நல்லூர், சூளகிரி பகுதிகளில் கஞ்சா வைத்திருந்ததாக ஓசூர் பாரதிதாசன் நகரை சேர்ந்த பழனி (30), அப்சல் (23), முருகன் (20), மூக்கண்டப்பள்ளி தினேஷ் (22) உள்ளிட்ட 9 பேரை கைதுசெய்தனர். அவர்களிடம் இருந்து 4,700 ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக பாயும் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை முற்றிலும் நின்றுள்ளது. இந்நிலையில், கெலவரப்பள்ளி அணையிலிருந்து தண்ணீர் தென்பெண்ணையில் திறந்துவிடப்படுவதால், கிருஷ்ணகிரி அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி, திங்கள்கிழமை காலை 7 மணி நிலவரப்படி 328 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 46.85 அடியாக தற்போது உள்ளது.
கிருஷ்ணகிரி: தொடர்மழையால் காய்கறி விளைச்சல் குறைந்து விட்டதால், மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்து வெகுவாக குறைந்தது. இதனால் காய்கறி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தக்காளி கிலோ ₹20ஆக இருந்தது, தற்போது ₹40ஆக உயர்ந்துள்ளது. கத்தரிக்காய் ₹28ல் இருந்து ₹30 ஆகவும், பீன்ஸ் ₹100ல் இருந்து ₹140 ஆகவும், இதேபோல் அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.