India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஓசூரில் ஜூலை 12 முதல் 23ஆம் தேதி வரை 13-வது புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது. மாவட்டத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த புத்தக திருவிழாவை பார்வையிட்டு அரிய தகவல்களுடன் கூடிய புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டும் என்று தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரியில் 2024 – 2025ஆம் ஆண்டில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வருகிற 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், உயிர்வேதியியல், புள்ளியியல், கணினி அறிவியல் உள்ளிட்ட அனைத்து பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்தவர்கள் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது குறித்த ஆலோசனை கூட்டம், கிருஷ்ணகிரி அணை செயற்பொறியாளர் அறிவொளி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 48 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. தற்போது அணைக்கு 250 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது முதல்போக சாகுபடிக்கு போதுமானதாக இருப்பதால், அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறு மற்றும் குறு நிறுவனங்கள் சார்பாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ்,பயனாளிகள் தொழில் துவங்குவதற்கான ஆணைகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்ரபாணி ஆகியோர் வழங்கினர். இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
பத்தாம் வகுப்பு துணை தேர்வு ஜூலையில் நடக்க உள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் ஜூன் 24ம் தேதி பிற்பகல் முதல், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதளத்தில் தேர்வு எண், விண்ணப்ப எண், பிறந்த தேதியை குறிப்பிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளி கல்வித்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று
(ஜூன் 22) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 22 மாவட்டங்களுக்கு இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாக கள்ளச்சாராயம் மற்றும் சட்டவிரோதமான மதுவிற்பனை மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்து காவல்துறை, வருவாய்த்துறை, கல்வித்துறை, கல்லுாரி, உணவு பாதுகாப்புத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு துறை அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப. தலைமையில் நேற்று நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் அக்னிவீர் வாயு இந்திய விமானப்படை தேர்விற்கு இணையதளம் வாயிலாக 08.07.2024 முதல் 28.07.2024 வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு தெரிவித்துள்ளார். இத்தேர்வுக்கு 03.07.2004 முதல் 03.08.2008 வரை பிறந்த, திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் https://agnipathvayu.cdac.in வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.
ஊத்தங்கரை காவல் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக காவல் துறையின் எச்சரிக்கை மீறி தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்த 26 கடைகளுக்கு நேற்று ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் முத்துக்குமார், முத்து மாரியப்பன், ராஜசேகர் உள்ளிட்டோர் கடைகளுக்கு சீல் வைத்தனர்.
காவேரிப்பட்டணம் போலீசார் மலையாண்டஅள்ளி ஜங்ஷன் சாலையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகம்படும்படி நின்ற 3 பேரை போலீசார் பிடித்து சோதனை செய்ததில் அவர்கள் 1 கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் காவேரிப்பட்டணம் பூமாலை நகரை சேர்ந்த தங்கவேலு(22), மதன்குமார் (22), கோவிந்த செட்டி தெரு அறிவழகன்(21) என தெரியவந்தது. போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.