Krishnagiri

News April 17, 2024

திமுக மாவட்ட செயலாளர் இறுதி கட்ட பரப்புரை

image

கல்லாவி பேருந்து நிலையம் அருகே கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் பேரணி சென்று கடை வியாபாரிகளிடம் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடம் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்துக்கு ‘கை’ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். உடன் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டார்கள். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

News April 17, 2024

டூவீலரில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

image

மோகனப்பள்ளியை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மனைவி கங்கம்மா (43). இவர்கள் கடந்த 7ஆம் தேதி அகரம் அருகே டூவீலரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது கங்கம்மா எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார். படுகாயமடைந்த அவரை பெங்களூரு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில்  சிசிச்சைப்  பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். ராயக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News April 17, 2024

தீயணைப்பு சார்பில் போலி ஒத்திகை நிகழ்ச்சி

image

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தீயணைப்பு நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பேருந்து நிலையம், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் தீ விபத்து குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் போலி ஒத்திகை பயிற்சியை போச்சம்பள்ளி தீயணைப்பு வீரர்கள் நேற்று (ஏப்.16) செய்து காட்டினர். மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

News April 16, 2024

போச்சம்பள்ளி தீயணைப்பு சார்பில் போலி ஒத்திகை நிகழ்ச்சி

image

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தீயணைப்பு நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பேருந்து நிலையம், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் தீ விபத்து குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் போலி ஒத்திகை பயிற்சிகள் போச்சம்பள்ளி தீயணைப்பு வீரர்கள் இன்று (ஏப்-16) செய்து காட்டினார். மேலும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

News April 16, 2024

ஓசூரில் தேர்தலை புறக்கணிக்கும் மக்கள்

image

ஓசூர், கேசிசி நகர் பகுதியில் கடந்த 3 மாதங்களாக அப்பகுதி குடியிருப்பு மக்களுக்கு தண்ணீர் வழங்காத காரணத்தால், பல்வேறு தரப்பு சார்பாக மாவட்ட நிர்வாகத்திடமும், பேரூராட்சி நிர்வாகத்திலும் கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் தற்பொழுது நடைபெறும் மக்களவைத் தேர்தலில் அப்பகுதி மக்கள் யாரும் வாக்களிக்க மாட்டோம் என தங்களது வீடுகளில் பதாகைகளை வைத்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News April 16, 2024

வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பு பணிகள் ஆய்வு

image

மக்களவை பொதுத் தேர்தலையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ஓசூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படவுள்ள, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இருப்பறை பாதுகாப்பு பணிகளை தேர்தல் பொதுப் பார்வையாளர் கிரண் குமாரி பாசி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.

News April 16, 2024

கிருஷ்ணகிரி: பெண்கள் அனல் பறக்கும் பிரச்சாரம்

image

கிருஷ்ணகிரி எம்பி தொகுதி பாஜக வேட்பாளர் சி.நரசிம்மனை ஆதரித்து போச்சம்பள்ளி அருகே காட்டாகரம், சந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தாமரைச் சின்னத்திற்கு பர்கூர் தெற்கு ஒன்றிய தலைவர் ஜெ.எம்.ரமேஷ் தலைமையில் பாஜகவினர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதில் நேற்று ஏராளமான பெண்கள் தாமரைச் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.

News April 15, 2024

100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பார்வையற்றோர், காதுகேளாதோர் நல சங்கம் சார்பாக, அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு இன்று நடைபெற்றது. இதையடுத்து பிரெய்லி முறையில் பேலட் தாள்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம், வரிசை எண் அச்சடிக்கப்பட்ட விவரங்களை வாசித்து காட்டும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சரயு இன்று துவக்கி வைத்தார்.

News April 15, 2024

வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

image

மக்களவைப் பொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்ப கல்லூரியில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எம்.சரயு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டனர்.

News April 15, 2024

மாட்டு வண்டியில் வாக்குப்பதிவு விழிப்புணர்வு

image

போச்சம்பள்ளியில் தேர்தலையொட்டி 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி குள்ளம்பட்டி கிராமத்தில் கலெக்டர் சரயு தலைமையில் வேளாண்மை துறை சார்பில் மாட்டு வண்டி மூலம் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. இந்த மாட்டு வண்டி போச்சம்பள்ளி பஸ் நிலையம் மற்றும் சந்தைப் பகுதியில் விழிப்புணர்வு  பேனருடன் வலம்வந்தது. அப்போது சந்தைக்கு வந்த வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

error: Content is protected !!