Krishnagiri

News April 25, 2024

கணவர் மீது தாக்குதல்: மனைவி- மகன் கைது

image

கிருஷ்ணகிரி அடுத்த கும்மனூர் பகுதியை சேர்ந்தவர் மாதையன்(63), டிரைவர். இவரது மனைவி பூங்கொடி(50), மகன் முரளி(32). மாதையனிடம் சொத்தை எழுதி தரும்படி மனைவியும், மகனும் அடிக்கடி தகராறு செய்து வந்த நிலையில் கடந்த 22-ஆம் தேதி இரவும் கேட்டு தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த அவர் மருத்துவமயைில் சிகிச்சை பெற்றுவருகிறார். இது குறித்த புகாரின் பேரில் மனைவி, மகனை போலீசார் கைது செய்தனர்.

News April 25, 2024

காட்டு வீர ஆஞ்சிநேயர் கோவிலின் நம்பிக்கை

image

கிருஷ்ணகிரியில் அமைந்துள்ளது காட்டு வீர ஆஞ்சிநேயர் கோவில். மலையை குடைந்து அமைக்கப்பட்டுள்ள இக்கோவிலில் கர்ப்ப கிரகத்தில் 2500 ஆண்டுகள் பழமையான ஆஞ்சிநேயர் சிலை உள்ளது. பக்தர்களுக்கு சிவப்பு நிற துணிப்பை இக்கோவிலில் தரப்படுகிறது. பிரார்த்தனை செய்து விட்டு மீண்டும் கோவிலில் ஒப்படைக்க வேண்டும்.பின் 3 மாதங்களுக்கு பின் பையை அப்புறப்படுத்துவார்கள்.இதற்குள் அவர்கள் பிரார்த்தனை நிறைவேறுவதாக நம்பப்படுகிறது

News April 25, 2024

2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி

image

ஊத்தங்கரை அடுத்த காட்டேரி பகுதியில் நேற்று மதியம் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து வந்த ஊத்தங்கரை போலீசார் பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் தர்மபுரி மாவட்டம் சந்திராபுரம் பகுதியை சார்ந்த ராஜா என்பது தெரியவந்தது. இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News April 25, 2024

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசகூடும் என்பதால் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, அரியலூர் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிறபகல் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்கமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளது.

News April 24, 2024

கிருஷ்ணகிரியில் தொடரும் பறக்கும்படை சோதனை

image

தமிழகத்தில் மக்களவை தேர்தல் (ஏப்.19) முடிவடைந்த நிலையிலும் 13 மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. அண்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அவற்றை ஒட்டியுள்ள எல்லையோர மாவட்டங்களில் மட்டும் பறக்கும் படைகளும், நிலைக்குழுக்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுவருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கண்காணிப்பு தொடர்கிறது.

News April 24, 2024

கிருஷ்ணகிரியில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக, 2023-2024ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு பயின்ற மாணாக்கர்களுக்கு கல்லூரிக் கனவு தொடர்பான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு நேற்று (ஏப்ரல் 22) துவக்கிவைத்தார். உடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News April 24, 2024

வாக்களிக்க வந்தவர்கள் திரும்ப முடியாமல் கடும் அவதி

image

மக்களவைத் தேர்தலுக்கு வாக்களிக்க பெங்களூருவிலிருந்து தமிழகத்திலுள்ள சொந்த ஊருக்கு வந்தவர்கள் கடந்த 3 நாளாக போதுமான பஸ்கள் இல்லாததால் அவதிப்படுகின்றனர். தர்மபுரியில் பஸ்கள் நிரம்பிவிடுவதால் பாலக்கோடு, ஜிட்டாண்டஅள்ளி, ராயக்கோட்டை போன்ற பஸ் நிறுத்தங்களில் நிறைய பயணிகள் காத்து நிற்கின்றனர். எனவே தர்மபுரி, பாலக்கோடு, ஓசூர் போன்ற டிப்போக்களிலிருந்து கூடுதல் பஸ்களை இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News April 24, 2024

அஞ்செட்டி அருகே மலை கிராம மக்கள் அவதி

image

அஞ்செட்டியைச் சுற்றி 100-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளது. இந்த நிலையில் அஞ்செட்டி அருகே உள்ள தொட்டியூர், ஓதிபுரம், தக்கட்டி, அர்த்தக்கல் உள்ளிட்ட மலை கிராமங்களில் செல்போன் கோபுரங்கள் இணைப்பை பெறமுடியாமல் பள்ளி மாணவர்கள் முதல் அனைத்து தரப்பினரும் அவதிப்படுவதாக கூறுகின்றனர். மின் இணைப்புகள் துண்டிக்கப்படும்போது செல்போன் டவர்களும் செயல்படுவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

News April 24, 2024

கிருஷ்ணகிரி: 30 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்

image

ஓசூர் அருகே உள்ள கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை மும்முரமாக நடைபெறுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. அதன் அடிப்படையில் போலீசார் கஞ்சா விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில் கெலமங்கலம் போலீசார்
தடிகல் அருகே உள்ள கொடியூர் கிராமத்தை சேர்ந்த முருகேஷ் மற்றும் அவர்கள் நண்பர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.

News April 21, 2024

கிரிக்கெட் விளையாடும் போது மயங்கி விழுந்து பலி

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ஆலத்தியூர் பகுதியை சேர்ந்த சேகர் மகன் முனுசாமி (33) என்பவர் தனியார் பால் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் ஊத்தங்கரை அருகே கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கும் போது வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் விளையாட்டு மைதானத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

error: Content is protected !!