India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தானியங்கி இயந்திரங்களில்(ஏடிஎம்) பணம் எடுக்கும் பொதுமக்கள், தங்களது ரகசிய எண்ணை (ATM PIN) அருகில் இருப்பவரின் முன்னிலையில் உள்ளிடவோ அல்லது வேறு யாருடனோ பகிரக்கூடாது என கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. நூதன மோசடி செய்பவர்களிடமிருந்து பாதுகாக்க மாவட்ட காவல்துறை எக்ஸ் தளத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி, ஓசுர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை, அஞ்சட்டி, தளி, சிங்காரப்பேட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் முதல் நிலைக் காவலர்கள், தலைமைக் காவலர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 206 பேர் பணியிட மாற்றம் செய்யப்படுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்று (ஜூலை 17) கடைசி நாளாகும். இந்து மதத்தை பின்பற்றும் 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் இத்திட்டத்திற்கு HRCE இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிருஷ்ணகிரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 19ம் தேதி நடைபெற உள்ளது. இம்முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சரயு அறிவித்துள்ளார். இந்த முகாமில் 8ம் வகுப்பு முதல் பிளஸ் 2 தோ்ச்சி,பட்டதாரிகள்,ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டம் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பாக, பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு மற்றும் பள்ளியில் சேராத குழந்தைகளை கண்டறிய திட்டமிடல் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுந்தராஜ் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
சகி என்ற ஒருங்கிணைந்த சேவை மையத்தில் மைய நிர்வாகி, ஆலோசகர் மற்றும் வழக்கு அலுவலர்கள் ஆகிய பதவிகளில் பணிபுரிய தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உரிய சான்றிதழ்களுடன் 26.07.2024 மாலை 5 மணிக்குள் அறை எண்:21 மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், கிருஷ்ணகிரி என்ற முகவரியில் நேரடியாக விண்ணப்பம் செய்திடலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
அஞ்சல் துறையில் 44,228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை வழங்கப்படவுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பாக, 6 பயனாளிகளுக்கு ரூ.36 ஆயிரத்து 720 மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு நேற்று வழங்கினார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) பன்னீர் செல்வம் , மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பத்மலதா உள்ளிட்ட பலர் உள்ளனர்.
தமிழில் முன்னணி Short News செயலியான Way2News-ல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உங்களை சுற்றி நடக்கும் உள்ளூர் நிகழ்சிகள், புகார்கள், கோரிக்கைகள், அரசியல், ஆண்மிக நிகழ்வுகளை செய்திகளாக பதிவேற்றி நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
Sorry, no posts matched your criteria.