India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கெலமங்கலத்திலுள்ள கிராம தேவதை பட்டாளம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 7-ம் தேதி அம்மனை எல்லையை விட்டு வெளியேற்றும் நிகழ்ச்சியுடன் ஆரம்பம் ஆனது. அதனை தொடர்ந்து தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மே 14-ம் தேதி தான வீர சூர கர்ணன் நாடகமும், மே 15-ம் தேதி பாட்டுக்கச்சேரியுடன் அலங்கரித்த பல்லக்கில் பட்டாளம்மன் திரு வீதி உலா நடக்கிறது.
கிருஷ்ணகிரி அரிமா சங்கம் சார்பில், முதலாமாண்டு இலவச கால்பந்தாட்ட கோடைக்கால பயிற்சி முகாம் கடந்த ஏப்ரல் 20ல் தொடங்கியது. கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இலவச பயிற்சி முகாமில், 6 வயது முதல், 17 வயது வரை உள்ள 255 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். நேற்றைய (12.05.2024) நிறைவு விழாவில் கிருஷ்ணகிரி அரிமா சங்க தலைவர் வெங்கடேசன் கால்பந்தாட்ட பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
கிருஷ்ணகிரி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் 13ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு குந்தாரப்பள்ளி
தாதா நகர் பகுதியில் வருகின்ற மே 16ஆம் தேதி மாபெரும் கன்றுவிடும் விழா நடைபெற உள்ளது. விழாவில் முதல் பரிசு 33,333 மேலும் 100 பரிசுகள் வழங்கப்பட உள்ளன. 1500 ரூபாய் நுழைவு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள காளை வளர்ப்போர் தங்களது கன்றுகளை விழாவிற்கு கொண்டு வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மத்திகிரி அருகே ராயல் ஆர்கேட் குடியிருப்பு பகுதியில் சதீஷ், நாகராஜன் ஆகிய இருவரும் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இந்நிலையில் இருவரும் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு மீண்டும் வீட்டை வந்து பார்க்கும்போது முன் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 75 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் கெலமங்கலம் மேற்கு ஒன்றியம் பெட்டமுகிலாளம் ஊராட்சிக்குட்பட்ட கல்லியூர் கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியில் இருந்த விலகி ஒசூர் மாநகராட்சி, தளி சாலையில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக ஒசூர் M.L.A பிரகாஷ் முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டனர். தொடர்ந்து எம்எல்ஏ அனைவருக்கும் வாழ்த்து கூறினார்.
கோவையில் இருந்து சென்னை வரை இருக்கும் அனைத்து மாவட்ட மக்களும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை மே.14 வரை வெறும் கண்ணால் பார்க்கலாம் என அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளனது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் மே.12 அன்று காலை 4.14, இரவு 7.07, மே.13 இல் காலை 5.00, மே.14 இல் காலை 4.15 மணிக்கு காணலாம்.
கிருஷ்ணகிரி புத்தக பேரவை அமைப்பின் சார்பாக இன்று மாலை 4.30 மணிக்கு கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புத்தக பேரவை கூட்டம் நடைபெற்றது. ஆசிரியர் ரவி அவர்கள் கலந்துக்கொண்டு திப்புசுல்தான் குறித்த வரலாற்று நிகழ்வுகளை பேசினார். கூட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கான நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. இதில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கிருஷ்ணகிரி புத்தக பேரவை அமைப்பின் சார்பாக இன்று மாலை 4.30 மணிக்கு கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புத்தக பேரவை கூட்டம் நடைபெற்றது. ஆசிரியர் ரவி அவர்கள் கலந்துக்கொண்டு திப்புசுல்தான் குறித்த வரலாற்று நிகழ்வுகளை பேசினார்.
கூட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கான நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. இதில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் கெலமங்கலம் மேற்கு ஒன்றியம் பெட்டமுகிலாளம் ஊராட்சிக்குட்பட்ட கல்லியூர் கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியில் இருந்த விலகி ஒசூர் மாநகராட்சி, தளி சாலையில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக ஒசூர் M.L.A பிரகாஷ் முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டனர். தொடர்ந்து எம்எல்ஏ அனைவருக்கும் வாழ்த்து கூறினார்.
ஊத்தங்கரை அடுத்துள்ள காரப்பட்டு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி 0ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ளனர். இந்த பள்ளி மாணவி பூவிதா 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அதே பள்ளியில் மாணவன் தினேஷ் 490 மதிப்பெண்களும், மாணவி கலையரசி 483 மதிப்பெண்களும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். சாதனை படைத்த மாணவர்களையும், பாராட்டினார்.
Sorry, no posts matched your criteria.