Krishnagiri

News June 10, 2024

குரூப் 4 தேர்வு 9376 பேர் ஆப்சென்ட்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், குரூப் – 4 தேர்வு நேற்று நடந்தது. மாவட்டம் முழுவதும் மொத்தம், 41,219 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். கிருஷ்ணகிரி, அஞ்செட்டி, பர்கூர், ஓசூர், போச்சம்பள்ளி, சூளகிரி, தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை வட்டங்களில் 131 மையங்களில் இத்தேர்வு நடந்தது. இதில்31473 பேர் மட்டுமே தேர்வெழுதினர் 9376 தேர்வு எழுத வரவில்லை.

News June 10, 2024

கிருஷ்ணகிரி: சூதாட்டம் ஆடிய 3 பேர் கைது

image

சூளகிரி போலீசாருக்கு காருபாலா பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் ஆடுவதாக வந்த தகவலின்பேரில் போலீசார் அந்தப் பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சூதாட்டம் ஆடிக் கொண்டிருந்த கொட்டாவூரை சேர்ந்த ராஜேந்திரன் (28), சவுரி (34), வீராசாமி (50) ஆகிய 3 பேரை கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து ரூ.500 பறிமுதல் செய்யப்பட்டது.

News June 9, 2024

தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.8.59 லட்சம் மோசடி

image

ஒசூா் பேகேபள்ளி, கோவிந்த அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சரவணன் (46). இவரது சமூகவலைதள கணக்கிற்கு மாா்ச் 23ம் தேதி வந்த குறுந்தகவலில் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக வருவாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதை நம்பி ரூ.8.59 லட்சத்தை முதலீடு செய்தாா். அதன்பிறகு எவ்வித பணப்பரிமாற்றமும் இல்லாததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சரவணன் கடந்த 7ம் தேதி இணைய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

News June 9, 2024

ஓசூர் அருகே சிறுத்தை நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை

image

தேன்கனிக்கோட்டையை அடுத்த பென்னாங்கூா், அடவிசாமிபுரம், இஸ்லாம்பூர் ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாள்களுக்கும் மேலாக சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறி மக்கள் வெளியேவர அச்சமடைந்துள்ளனா். கடந்த ஜூன் 7 இரவு அடவிசாமிபுரம் பகுதியில் ஆடு ஒன்றை சிறுத்தை கொன்றதற்கான அடையாளம் தென்பட்டது. இதையடுத்து வனத்துறையினா் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

News June 9, 2024

கிருஷ்ணகிரியில் மக்கள் நீதி மன்றம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 1,587 வழக்குகளில் ரூ.6.11 கோடி மதிப்புக்கு தீா்வு காணப்பட்டது. இதில்
கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, ஒசூா், தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதி நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள குடும்பநல வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், வங்கி கடன் வழக்குகள், நிதி நிறுவன வழக்குகள், காசோலை வழக்குகள், பாகப்பிரிவினை வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

News June 8, 2024

கிருஷ்ணகிரி சுற்று வட்டார பகுதிகளில் மழை

image

கிருஷ்ணகிரி சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. காலை முதல் கிருஷ்ணகிரி அதன் சுற்று வட்டாரங்களில் வெயிலின் தாக்கத்தால் வெப்பம் அதிகரித்திருந்த நிலையில் இன்று மாலை 5 மணி அளவில் மேகம் சூழ்ந்து மழை பெய்து தொடங்கியது. அரை மணி நேரம் மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News June 8, 2024

பத்ரகாளியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா

image

போச்சம்பள்ளி அடுத்த கோடிப்புதூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அருள்மிகு பத்ரகாளி அம்மன் கோவிலில் 114 ஆம் ஆண்டு மகா பிரம்மோற்சவ விழா வருகின்ற ஜூன் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு கேட்டதை கொடுக்கும் பழமை வாய்ந்த பத்ரகாளி அம்மன் அருள் பெற கோவில் நிர்வாகம் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News June 8, 2024

ஒசூர் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

image

ஒசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஜூன்10 பள்ளிகள் திறப்பதாலும் , தேர்தல் விதிமுறைகள் முடிவடைந்ததாலும் ஏராளமான வாகனங்கள் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

News June 8, 2024

நாளை மறுநாள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 6-ந் தேதியுடன் முடிவடைந்தது. எனவே வரும் திங்கட்கிழமை முதல் மாவட்ட கலெக்டர் தலைமையில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாதந்தோறும் தாலுகாக்களில் நடைபெறும் உங்களை தேடிஉங்கள்ஊரில் திட்டம், கலெக்டரின் மக்கள் தொடர்புதிட்டமுகாம் ஆகியவை நடைபெறும். என்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

News June 8, 2024

கிருஷ்ணகிரி: குரூப் 4 தேர்வில் 41,325 பேர் பங்கேற்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு நாளை(ஜூன் 9) நடைபெறுகிறது. மாவட்டத்தின் 8 தாலுகாக்களில் உள்ள 131 மையங்களில் 41,325 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு தொடர்பான பணிகளை கண்காணிக்க அனைத்து தாலுகாவிலும் துணை கலெக்டர் நிலையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தேர்வு மையங்களிலும் மின்வசதி, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!