Krishnagiri

News August 1, 2024

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் 981.56 கோடி ரூபாய் வசூல்

image

கடந்த 5 ஆண்டுகளில் எல்&டி கிருஷ்ணகிரி தோப்பூர் சுங்கச்சாவடியில் 1,124.19 கோடி ரூபாய் அளவிற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் 981.56 கோடி ரூபாய் அளவிற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று ராஜ்யசபாவில் மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

News July 31, 2024

வேறு நாளில் கூட்டம்: மேயரை சந்தித்து கடிதம் 

image

ஒசூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சத்யா தலைமையில் இன்று மாமன்ற கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தை துணை மேயர் ஆனந்தய்யா தலைமையில் 19 கவுன்சிலர்கள் புறக்கணித்து தனியார் ஓட்டலில் கூட்டத்தை நடத்தினர். இந்நிலையில், ஆனந்தய்யா தலைமையில் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் மேயரை நேரில் சந்தித்து வேறு நாளில் கூட்டத்தை நடத்த கடிதம் வழங்கியுள்ளனர்.

News July 31, 2024

கிருஷ்ணகிரி – பெங்களூரு வழித்தடத்திற்கு புதிய பேருந்துகள்

image

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, எண்ணேகொள்புதூர், போடரஅள்ளி வழியாக சாப்பர்த்தி வரையிலான போக்குவரத்து வழித்தடத்தை நீட்டித்தும், கிருஷ்ணகிரி – பெங்களூரு வழித்தடத்திற்கான புதிய பேருந்துகளை கொடியசைத்தும் அமைச்சர் சக்கரபாணி இன்று துவக்கி வைத்தார்.

News July 31, 2024

கிழங்கு சாப்பிட்டவர் உடல் வீங்கி உயிரிழப்பு

image

ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த மணிகண்டன், வீரியம் மிக்க காட்டு கருணைகிழங்கு வகை கிழங்கு ஒன்றை ஆரோக்கியத்திற்கு நல்லது என நினைத்து வேகவைக்காமல் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது முகம் மற்றும் வயிறு வீங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News July 31, 2024

மாநகர கூட்டத்தை புறக்கணித்த துணை மேயர் 

image

ஒசூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகர மேயர் சத்யா தலைமையில் இன்று மாநகர கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தை புறக்கணித்த துணை மேயர் ஆனந்தய்யா, 13 திமுக மாமன்ற உறுப்பினர்களுடன் ஒசூர் – பாகலூர் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் தனியாக ரகசிய கூட்டம் நடத்தி உள்ளார். மாநகர கூட்டத்தை நடத்துவதை தடுக்க இந்த கூட்டம் நடத்தப்பட்டதா? மாநகர மேயர் சத்யா மீதான அதிருப்தியால் நடத்தப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

News July 31, 2024

3 பேரைக் கொன்ற மக்னா காட்டு யானை பிடிபட்டது

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான ஆனைக்கல் அடுத்துள்ள பன்னார்கட்டா தேசிய பூங்காவை ஒட்டி உள்ள கிராமப்பகுதிகளில் மக்னா காட்டு யானை ஒன்று சுற்றித்திரிந்து வந்தது. பொதுமக்களையும், விவசாயிகளையும் அச்சுறுத்தி வந்த இந்த மக்னா காட்டு யானை, அந்த பகுதியில் அடுத்தடுத்து 3 பேரை தாக்கிக் கொன்றது. இதையடுத்து நேற்று கும்கி யானை உதவியுடன் வனத்துறையினர் காட்டு யானையை பிடித்தனர்.

News July 31, 2024

கிருஷ்ணகிரியில் அமைச்சர் சுற்றுப் பயணம்

image

உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி இன்று கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் பல்வேறு அரசு விழாக்களில் கலந்து கொள்ள உள்ளார். காலை 10 மணிக்கு குருபரபள்ளி, சிக்காரிமேட்டில் நரிக்குறவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியும், காலை 10.30 மணிக்கு, கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் புதிய பேருந்துகளை இயக்கி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

News July 31, 2024

கிருஷ்ணகிரியில் வங்கி கடன் குறித்த விழிப்புணர்வு முகாம்

image

கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில் இந்தியன் வங்கி சார்பில் ஆட்டோ டிரைவர்கள், வியாபாரிகள் , மகளிர்க்கான சிறு, குறு தொழில் வங்கிக்கடன் குறித்து விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. இதில், சிறு, குறு தொழில்கள், மகளிர்க்கான குழு கடன்கள் அனைத்து வங்கிகளிலும் ரூ. 25 லட்சம் வரை பெற முடியும் என வங்கி மேலாளர் மோகன் கூறினார். இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் , வியாபரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

News July 30, 2024

கிருஷ்ணகிரி பெயர்க் காரணம் தெரியுமா?

image

கிருஷ்ணா என்பது கருப்பு என்றும், கிரி என்பது மலை என்றும் பொருள். கறுப்பு கிரானைட் மலைகளுடன் அமைந்துள்ளதால் கிருஷ்ணகிரி என பெயர் வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. கிருஷ்ணதேவராயர் ஆட்சியின் கீழ் இப்பகுதி வந்ததால், இம்மன்னர் பெயரிடப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. உங்களுக்கு கிருஷ்ணகிரியை பிடிக்குமா? கமெண்ட் செய்யவும்

News July 30, 2024

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிறந்த மாபெரும் தலைவர்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டம் தொரப்பள்ளியில் மூதறிஞர் ராஜாஜி பிறந்தார். இந்தியாவின் கடைசி தலைமை ஆளுநராக இவர்தான் இருந்தார். முதல் முறையாக பாரத ரத்னா விருது பெற்றவர்களில் ராஜாஜியும் ஒருவர். சென்னை மாகாண முதலமைச்சராகவும் இருந்துள்ளார். பல சாதனைகளை புரிந்துள்ள மூதறிஞர் ராஜாஜி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிறந்தது தனிச் சிறப்பாகும். ராஜாஜியை உங்களுக்கு பிடிக்குமா??

error: Content is protected !!