India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டில் திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்க மாவட்ட எஸ்பி உத்தரவிட்டார். அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் மாவட்டத்தில் திருடு போன ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 50 செல்போன்களை மீட்டனர். இதை எஸ்பி நேற்று உரியவர்களிடம் ஒப்படைத்தார். மேலும், தொலைந்து போன செல்போன் தொடர்பான புகார்களுக்கு www.ceir.gov.in என்ற வலைதளத்தில் புகாரளிக்கலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து காவலர்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊத்தங்கரை – 9498170295, பருகூர் – 9498106530, கிருஷ்ணகிரி – 9444602728, ஓசூர் – 9498185796, 9842788031, தேன்கனிக்கோட்டை – 9498178425. அவசர உதவிக்கு இந்த எண்களை அழைக்கலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
பர்கூர் கரீம் சாகிப் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ்(70) மனைவி பாலம்மாள்(65). இவர்கள் 2 பேரும் தனது மகளின் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு 2 பேரும் வீட்டின் மாடியில் உள்ள அறையில் ரத்தக்கறையுடன் உயிரிழந்து கிடந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மோற்கொண்டதில் நாகராஜ் தாக்கியதில் பாலம்மாள் உயிரிழந்ததும், அதனை தொடர்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது.
ஒசூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 2024- 25 ஆம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான இறுதி வாய்ப்பு ஆக 16 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் அனைவரும் ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கையில் கலந்துகொண்டு பயன் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த
சீர்மரபினர் சமூகத்தை சேர்ந்தவர்கள் கல்விக்கான அதிகாரமளித்தல், சிறப்பு காப்பீடு திட்டம், நிலம் மற்றும் வீடு கட்ட நிதி அளித்தல் திட்டத்தில் பயன்பெற மத்திய அரசின் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும், ஆட்சியர் அலுவலக அறை எண்11ல் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.
கெலமங்கலம் அருகே காமையூரைச் சேர்ந்த விவசாயிக்கு 17 வயது மகள் இருந்தார். அவரை வெங்கட் ராஜ் என்பவர் கடத்தி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளியே வந்த அவர் மீண்டும் நேற்று முன்தினம் சிறுமியை கடத்த முயன்றார். அதை தடுக்க முயன்ற தந்தையை கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளார். அவரை கெலமங்கலம் போலீசார் நேற்று கைது செய்து சிறுமியை மீட்டனர்.
சூளகிரி ஒன்றியம் சாமனப்பள்ளி கிராமத்தில் கடந்த 5.8.2021 அன்று முதலமைச்சர் ஸ்டாலின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்து நேற்று 4ஆம் ஆண்டு விழா நடந்தது. இதில் ஆட்சியர் பேசுகையில் இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 5 லட்சத்து 43 ஆயிரத்து 162 பேர் சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர் என்றார். இதில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் உடன் இருந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்றிரவு 2 மணி வரை ரோந்து பணி மேற்கொள்ளும் காவலர்களின் விவரம்.
ஊத்தங்கரை – 949816822, போச்சம்பள்ளி – 9498175515, கிருஷ்ணகிரி – 9498104224, 9498102065, ஓசூர் – 9787733968, 9842788031, தேன்கனிக்கோட்டை – 949816367 பொதுமக்கள் தங்கள் அவசர தேவைக்கு மேற்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கலைஞர் கருணாநிதியின் 6-ஆம் ஆண்டு நினைவு நாள் வரும் புதன்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது. அன்று கிருஷ்ணகிரி மாவட்ட திமுக அலுவலகத்தில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் கழக நிர்வாகிகள் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக, மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் நான்காம் ஆண்டு தொடக்கவிழா நடைபெற்றது. இதி, சிறப்பாக பணியாற்றிய இடைநிலை சுகாதார பணியாளர்கள், பெண் சுகாதார தன்னார்வலர்கள் (ம) சுகாதார ஆய்வாளர்கள், இயன்முறை சிகிச்சையாளர்கள், நோய் ஆதரவு சிகிச்சையாளர்கள், தொற்றுநோய் செவிலியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.