India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி வழியாக ஆந்திராவிலிருந்து மதுரைக்கு கஞ்சா கடத்துவதாக மாவட்ட எஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. எனவே அவரின் உத்தரவின் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதில் ஓசூர் அருகே வந்த கண்டெய்னர் லாரியை பிடித்து சோதனை செய்ததில் லாரியில் 20 கிலோ கஞ்சா கடத்தியது தெரிந்தது. எனவே லாரியில் இருந்து 2 பேரையும் கைது செய்து லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த காந்திக்குப்பம் உள்ள தனியார் பள்ளியில் தேசிய மாணவர் படைத்தலைவர் பணியாற்றி வந்த காவேரிப்பட்டிணம் பகுதியை சேர்ந்த சிவராமன்(32) என்பவர் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதையடுத்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த கந்திகுப்பம் போலீஸார் தலைமறைவான சிவராமனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஓசூர் தமிழ்நாடு ஓட்டல் விடுதிகள் மற்றும் உணவகங்களின் செயல்பாடுகள் மற்றும் கட்டிடங்கள் மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு, ஓசூர் எம்.எல்.ஏ.ஒய்.பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோர் உடன் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஒதுக்கிய பிரதமர் வீட்டு வசதி திட்ட நிதியில் முறைகேடு செய்யப்பட்ட விவகாரத்தில் 13 அரசு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது. மேலும் கையாடல் செய்யப்பட்ட பணத்தை அரசு அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
சென்னை தரமணியில் உள்ள ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி கல்லூரியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த 10, 12ஆம் வகுப்பில் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ மாணவிகள் தாட்கோ மூலம் சேர்ந்து பயன் பெறலாம் எனவும் இப்பயிற்சியில் சேர்வதற்கு www.tahdco.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும் எனவும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு நேற்று அறிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 கிடைக்க பெறாதவர்கள் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் மனு வழங்கலாம் என கடந்த 2 நாட்களாக வாட்ஸ் ஆப் மூலமாக தவறான செய்தி பொதுமக்களிடம் பரப்பப்பட்டு வருகிறது. இச்செய்தி முற்றிலும் தவறானது. பொய் தகவல் பரப்புபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சரயு அறிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் 2024-25ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான எம்ஏ (தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல்) எம்.எஸ்சி. (கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல்) ஆகியவற்றிற்கு இணையவழியில் விண்ணப்பித்தவர்களுக்கு ஆக 20ஆம் தேதி முதுநிலை பொது கலந்தாய்வு நடைபெறவுள்ளதாக கல்லூரி முதல்வர் அனுராதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தேன்கனிக்கோட்டை தாலுகாவில் உள்ள தாலி குக்கிராமம் பல்வேறு மலை வாசஸ்தலங்களால் சூழப்பட்டுள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 1000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கிலாந்தின் தட்பவெப்பநிலையை நினைவூட்டும் சிறந்த வெப்பநிலையைக் கொண்டுள்ளது, எனவே இது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் போது “லிட்டில் இங்கிலாந்து” என்று அழைக்கப்பட்டது. இந்த பகுதியை காண ஓசூர், பெங்களூரு பகுதியில் உள்ள மக்கள் அதிகளவில் வருகின்றனர்.
தமிழ்நாடு தேசிய பண்டிகை விடுமுறை சட்டம், உணவு நிறுவன சட்டம், மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டம், விதிகளின்படி, தேசிய விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 26 கடைகள், நிறுவனங்கள், 26 உணவு நிறுவனங்கள், 6 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 58 நிறுவனங்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை தொடரப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தது. அண்மையில் பெய்த மழையால், குடியிருப்பு பகுதிகளில் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. இன்று கனமழை பெய்யும் என்பதால், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. இன்று மழை பெய்யுமா?
Sorry, no posts matched your criteria.