Karur

News July 10, 2025

ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் வரை காப்பீடு (2/2)

image

▶️ ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்யும் வசதி
▶️ விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகள் (உள்நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.1,00,000 வரை)
▶️ விபத்தினால் மரணம்/ நிரந்தர முழு ஊனம்/நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) கல்வி செலவுகளுக்கு ரூ.1,00,000.
▶️ விபத்தினால் உயிரிழக்க நேரிட்டால், ஈமச்சடங்கு செய்ய ரூ.5000 வரை.

News July 10, 2025

கரூரில் 2வது திருமணம் செய்த நபருக்கு 6 ஆண்டுகள் சிறை

image

கரூர் மாவட்டம், சின்னமுத்தான்பட்டியை சேர்ந்த பாலமுருகன் முதல் மனைவியை ஏமாற்றி திண்டுக்கல்லை சார்ந்த வேறு ஒரு பெண்ணை 2 ஆவது திருமணம் செய்துள்ளார். இது குறித்து முதல் மனைவி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் மீது வழக்குப்பதிந்து குளித்தலை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் பாலமுருகனுக்கு 6 வருடம் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஹரி ராம் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

News July 10, 2025

தனிமனை அங்கீகாரம் இனி ஆன்லைனில் மட்டுமே

image

கரூரில் தனிமனையாக வாங்கிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில் www.onlineppa.tn.gov.in இணைய முகவரி மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.மலையிடப் பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படா மனைப்பிரிவுகளை வரன் முறைப்படுத்துவதற்கான விண்ணப்பங்களை www.tnhillarealayoutreg.in என்ற இணையதளத்திற்கு பதிலாக 30/11/2025 வரை <>www.tcponline.tn.gov.in<<>> என்ற இணையதளம் வாயிலாகவே விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.SHAREit

News July 10, 2025

இந்த மெசேஜ் வந்தா தொட்டுடாதீங்க மக்களே

image

கரூர்: கடந்த சில நாள்களாக ரூ.7000க்கு கீழ் உள்ள போக்குவரத்து அபராதங்கள்(Traffic Fines) ரத்து செய்யப்படும் என கூறி ஒரு மெசேஜ் பரவி வருகிறது. அந்த லிங்கை கிளிக் செய்தால், உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் பறிக்கப்படும் வாய்ப்புள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு, இந்த போலி லிங்க்களை திறக்காமல் தவிர்க்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News July 9, 2025

இளைஞர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி!

image

கரூரில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் மற்றும் பள்ளி/கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு உதவ, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். 18 முதல் 35 வயதுக்குள் உள்ள, வேலை தேடும் இளைஞர்களுக்கு தொழில்துறை சான்றிதழுடன் கூடிய இலவச குறுகிய கால திறன் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த <>லிங்கை கிளிக்<<>> செய்யவும்.

News July 9, 2025

ஆதரவற்ற பெண்களுக்கு ரூ.50,000 திருமண உதவி!

image

தமிழக அரசு சார்பில், பெற்றோரில்லாத பெண்களுக்காக, அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், திட்டம் 1-ல் ரூ.25,000, திட்டம் 2-ல் ரூ.50,000 உதவித்தொகையோடு, தாலி செய்வதற்காக 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க, கரூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திற்கு சென்றோ அல்லது இ-சேவை மையங்களிலோ விண்ணப்பிக்கலாம். SHARE IT <<17007892>>(தொடர்ச்சி 1/2)<<>>

News July 9, 2025

திட்டத்திற்கான தகுதிகள் என்ன?

image

▶️அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவி திட்டம் – 1 இன் கீழ் உதவித்தொகை (ரூ.25,000) பெற கல்வித் தகுதி தேவையில்லை ▶️ திட்டம் – 2 இன் கீழ் உதவித்தொகை (ரூ.50,000) பெற டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் ▶️ விண்ணப்பதாரர் பெற்றோர்களால் கைவிடப்பட்ட அல்லது பெற்றோர்களை இழந்தவராக இருக்க வேண்டும் ▶️ திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பாகவே விண்ணப்பிக்க வேண்டும்.

News July 9, 2025

கரூர் வழியாக செல்லும் ரெயில் சேவையில் மாற்றம்

image

ரெயில்வே தண்டவாளங்கள் புதுப்பிக்கும் பணிகள் நேற்று முன்தினம் தொடங்கின. இந்த பணிகள் வருகிற 31-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதன் காரணமாக கோயம்புத்தூர் – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16322) கோவையில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் இந்த ரயில், ஆகஸ்ட் 31 வரை கரூர் வழியாக திண்டுக்கல் வரை மட்டுமே செல்லும். திண்டுக்கல் – நாகர்கோவில் இடையேயான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

News July 9, 2025

உள்ளூர் வங்கியில் வேலை ரூ.85,000 வரை சம்பளம்

image

கரூர்: பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. விண்ணப்பதார்கள் தமிழ் மொழி பேச, எழுத மற்றும் படிக்க கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். கடைசி நாள் 24.7.25 ஆகும். SHARE பண்ணுங்க.

News July 9, 2025

கிருஷ்ணராயபுரத்தில் போதை ஊசி கும்பல் சிக்கியது

image

கிருஷ்ணராயபுரம் அருகே தென்கரை வாய்க்கால் பகுதியில் 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 22), ராயனூரை சேர்ந்த ஹரிஹரன் (22), திருமாநிலையூரை சேர்ந்த நித்திஷ் (22), மணவாடியை சேர்ந்த சித்தி குமரன் (19) என்பதும் போதை ஊசி செலுத்தி போதையில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!