Karur

News October 20, 2024

கரூரில் பிரதமர் கல்வி உதவித்தொகை

image

கரூரில் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (https://scholarships.gov.in) விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிய மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை (https://socialjustice.gov.in) பதிவு செய்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News October 20, 2024

டிஎன்பிஎல் சார்பில் இலவச மருத்துவ முகாம்

image

கரூர் மாவட்டம் புகழூரில் அமைந்துள்ள டிஎன்பிஎல் சார்பில், 297ஆவது இலவச மருத்துவ முகாம் அக்.23ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே, ஓனவாக்கல் மேடு, நாணப்பரப்பு, கந்தசாமிபாளையம், நல்லியாம்பாளையம், சொட்டையூர், மூலிமங்கலம், பழமாபுரம், மசக்கவுண்டன்புதுார், குறுக்குப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் இந்த முகாமைப் பயன்படுத்திக் கொள்ள டிஎன்பிஎல் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 19, 2024

எஸ்பி தலைமையில் காவல்துறை தயார்

image

கரூர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு பகுதிகளில், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மீட்பு பணியில் ஈடுபட உள்ள பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற கரூர் மாவட்ட ஆயுதப்படை காவலர்கள், ஊர் காவல் படையினர் மற்றும் மீட்பு உபகரணங்களையும் இன்று கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா கரூர் ஆயுதப்படை மைதானத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

News October 19, 2024

கரூரில் கணவன், மனைவிக்கு போலீஸ் வலை

image

கரூர், காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சுதாகர். பிரின்டிங் பிரஸ் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் பிறந்த நாள் விழா நடந்தது. அப்போது, அலமாரியில் இருந்த 13 பவுன் தங்க நகை, ரூ.7 லட்சம் காணவில்லை. இதுகுறித்து, கரூர் டவுன் போலீசார் நடத்திய விசாரணையில், திருடியது உறவினர்கள் பார்த்திபன், அவரது மனைவி சங்கரி என தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

News October 19, 2024

கரூரில் குடும்ப அட்டைதார்களுக்கு சிறப்பு முகாம்

image

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று 19.10.24 காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை பொது விநியோகத் திட்டத்தின் சிறப்பு முகாம் நடக்க இருக்கின்றது. அத்தருணத்தில் குடும்ப அட்டைதாரர்கள் பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல், புது குடும்ப அட்டை கோருதல் போன்ற சம்பந்தமான மனுக்களை கொடுக்கலாம் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார்.

News October 18, 2024

 மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

image

கரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை கிடைக்கப் பெறாத மாற்றுத்திறனாளிகள் பயன் பெற வட்டார வாரியாக சிறப்பு மருத்துவ முகாம்கள் 22,23 புகழுரிலும் 24,25, கோவ குளம், கிருஷ்ணராயபுரம் அரசு மருத்துவமனை 26,29 குளித்தலை அரசு மருத்துவமனையில் 05,06,07.11.24 ஆகிய மூன்று நாட்களும் முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு செய்தார்.

News October 18, 2024

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம்

image

கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று பிற்பகல் 2.45 மணி அளவில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் குழு தலைவர் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் மற்றும் கரூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.

News October 18, 2024

விருது பெற்ற மாணவனுக்கு எம்.எல்.ஏ வாழ்த்து

image

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா பஞ்சப்பட்டி, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் +2 பயிலும் தினேஷ் என்ற மாணவன் காற்று உந்து விசையில் இயங்கும் Reusable Rocket Model செய்து, காற்று அழுத்தம் கொடுத்து இயக்கி காண்பித்தார். குளித்தலை எம்.எல்.ஏ மாணிக்கம் நேரில் நேற்று பாராட்டி, வாழ்த்தினார். மேலும் இளம் விஞ்ஞானி இந்தியா 2024 விருது பெற்ற மாணவனை பாராட்டி சாதனை மலரை வழங்கினார்.

News October 18, 2024

கரூரில் ஆதரவற்ற பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்

image

கரூரில் நாளை காலை 10.00 மணியளவில் கரூர், கோவை பைபாஸ் ரவுண்டானா அருகே உள்ள சிவ் முருகா ஹோட்டலில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள ஆதரவற்ற பெண்கள், விதவைப் பெண்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.

News October 18, 2024

கரூரில் சீர்மரபினர் உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்

image

கரூரில் சீர்மரபினர் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையினை அதிகப்படுத்துதல், நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்களை பெறுதல் தொடர்பாக 24.10.2024 அன்று முற்பகல் 11.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை உறுப்பினர்கள் சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான முகாம் கடவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளது. சீர்மரபினர் இனத்தை சார்ந்தவர்கள் மேற்படி முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!