Karur

News November 25, 2024

கரூரில் எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்

image

கரூர் மாவட்டத்தில் இன்று (25.11.2024) கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பிற்பகல் 4 மணியளவில் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.எனவே எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News November 25, 2024

கரூர்: ஆட்சி மாறியும் காட்சி மாறாத நிலை

image

கரூர் அருகே, வெங்கமேடு பெரிய குளத்துப்பாளையம், கரூர் டவுன் எம்.ஜி. சாலையை இணைக்கும் வகையில், கடந்த அதிமுக ஆட்சியின்போது, ஈரோடு ரயில்வே வழித்தடத்தில் குகை வழிப்பாதை கட்டப்பட்டது. ரயில்வே குகை வழிப்பாதையில் ஊற்றெடுத்து தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், ரயில்வே குகை வழிப்பாதையில் நடந்துகூட செல்ல முடியாமல், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். ஆட்சி மாறியும் காட்சி மாறாத அவல நிலையாக தொடர்கின்றது.

News November 25, 2024

கரூர்: சிறுமியை திருமணம் செய்தவர் போக்சோவில் கைது

image

குளித்தலை அருகே ஆர்.டி.மலையை சேர்ந்த சக்திவேல் என்பவரது மகன் சண்முகம் (21); எலக்ட்ரீஷியன். இவர் 2022 ஜூலையில் 15 வயதுடைய சிறுமியை, புதுக்கோட்டை, விராலிமலை முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்டார். தற்போது, 8 மாத கர்ப்பிணியாக உள்ள சிறுமி, திருச்சி அரசு மருத்துவமனையில் ரத்த குறைபாட்டால் சிகிச்சை பெற்று வருகிறார். கரூர் மகளிர் போலீசார் சண்முகம் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News November 24, 2024

கரூர் தலைப்புச் செய்திகள்

image

1.கரூர் மாவட்டத்தில் இன்று அனைத்து வார்டுகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்றது.
2.கரூர் விஷன் 2030 கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.
3.உப்பிடமங்கலம் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
4.புகையிலை விற்றவர் கைது: 240 கிராம் பறிமுதல்
5.கரூரில் மாபெரும் மராத்தான்: செந்தில் பாலாஜி துவக்கிவைப்பு

News November 24, 2024

கரூரில் புகழ்பெற்ற மலை புகழிமலை

image

புகழிமலை கோயில் புகழூர் அருகில் உள்ள வேலாயுதம்பாளையத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் கரூரில் இருந்து 17கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள சிறிய மலையின் மீது சுவாமி சுப்பிரமணியர் வீற்றிருக்கிறார். இங்கு அமைந்துள்ள சமணர்படுக்கை மற்றும் சிற்பங்கள் மிகவும் புகழ்பெற்றவையாகும். கரூர் மாவட்டத்தின் வட மேற்கு பகுதியில் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த மலை சிறப்பை COMMENT பண்ணுங்க மக்களே..

News November 24, 2024

மாயனூர் கதவணைக்கு வரும் 1871 கன அடி நீர்

image

மாயனூர் கதவணைக்கு இன்று காலை நிலவரப்படி 1871 கன அடி நீர் காவிரியில் வந்து கொண்டிருக்கிறது. காவிரி ஆற்றில் 651 கன அடி நீரும், தென்கரை பாசன வாய்க்காலில் 500 கன அடி, கட்டளை மேட்டு வாய்க்காலில் 300 கன அடி, புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் 400 கன அடி நீரும் பாசனத்திற்காக திறந்து விடப்படுகிறது. அணைக்கு சில நாட்களாகவே 3000 கன அடி நீர் குறைவாக வருகிறது.

News November 24, 2024

கரூரில் மாபெரும் மராத்தான்: செந்தில் பாலாஜி துவக்கிவைப்பு

image

கரூரில் இன்று 73 சங்கங்கள் இணைந்து மாபெரும் மராத்தான் 2030 போட்டியை நடத்தினர். இந்தப் போட்டியை மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி இன்று கொடியை அசைத்து போட்டியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

News November 24, 2024

கரூரில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான பிரச்சாரம்

image

கரூரில் பெண்களுக்கான பாலின வளமையங்களை கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, கடவூர் மற்றும் தோகைமலை வட்டார இயக்க மேலாண்மை அலகுகளில் நாளைமுதல் (நவ.25) தொடங்கப்படவுள்ளது. மேலும் பாலின பாகுபாடு மற்றும் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம் ஊராட்சி / வட்டாரம் / மாவட்ட அளவில் 25.11.2024 முதல் 23.12.2024 வரை நடத்தப்படவுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News November 23, 2024

கரூர் தலைப்புச் செய்திகள்

image

1.கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
2.கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டுசாவடி மையங்களில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்றது.
3.கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பைரவர் கோயில்களில் தேய்பிறை அஸ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது.
4.குளித்தலையில் விவசாயிகள் 17 பேர் கைது
5.பள்ளி மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்திய அமைச்சர் செந்தில்பாலாஜி

News November 23, 2024

கரூர் கலெக்டர் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம்

image

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, தான்தோன்றி ஊராட்சி ஒன்றியம், வெள்ளியணை ஊராட்சியில், குமாரபாளையம் பகுதியில் அமைந்துள்ள நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ளாட்சிகள் தினம் தொடர்பான சிறப்பு கிராம சபை கூட்டம் வெள்ளியணை பஞ்சாயத்து தலைவர் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் தங்கவேல் கலந்து கொண்டு பொதுமக்களிடம் உரையாற்றினார்.

error: Content is protected !!