India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர் மாவட்ட விவசாயிகளுக்கு, வேளாண் பொறியியல் துறை மூலம் மொபைல் போன் மூலம் இயங்கும் தானியங்கி பம்புசெட் கருவி மானிய விலையில் வழங்கப்படுகிறது என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். மேலும், கரூர் மற்றும் குளித்தலை உபகோட்டங்களுக்கு உட்பட்ட விவசாயிகள் உதவி செயற்பொறியாளரை 9443404531 மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
வயல்களுக்கு மருந்து தெளிப்பதற்காக, இரு ட்ரோன்கள் குறைந்த வாடகையில் கிடைக்கிறது என கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார். வடசேரி பஞ்சாயத்தில் மக்கள் சந்திப்பு முகாம் நேற்று நடந்தது. விவசாயிகளுக்கு தேவையான வேளாண் கருவிகள் குறைந்த வாடகையிலும், வயல்களுக்கு மருந்து தெளிப்பதற்காக 2 ட்ரோன்கள் குறைந்த வாடகையில் கிடைக்கிறது. இதை பயன்படுத்தி விவசாயிகள் தங்களுடைய மகசூலை அதிகப்படுத்த அறிவுறுத்தியுள்ளார்.
உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, அணையின் நீர் மட்டம் உயர்ந்தது. இந்நிலையில் நேற்று மதியம் அணை அதன் முழுகொள்ளளவை எட்டி நிரம்பியது. அணை நிரம்பியதால், உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக கரூர் மாவட்ட ஆற்றோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. உங்கள் ஊரில் மழையா கமெண்ட் பண்ணுங்க.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளனர். வருவாய்த் துறையில் பணியிடங்களை பாதுகாத்திட பலமுறை கோரிக்கையாக வலியுறுத்தியும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வருகின்ற 29.11.2024 அன்று மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 11 மணி அளவில் நடைபெற உள்ளது. மேலும் விவசாயிகள், விவசாய பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூரில் உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் கறவை மாடு வளர்ப்பு குறித்து ஒருநாள் இலவச பயிற்சி முகாம் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் 28ஆம் தேதி காலை 10.30 மணிக்குள் வந்து பயிற்சியில் பங்குகொள்ளுமாறு கால்நடை பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் அமுதா கேட்டுக்கொண்டுள்ளார்.
1.கரூரில் CMஐ கண்டித்து பாமகவினர் ஆர்ப்பாட்டம்
2.குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தில் திரண்ட அனைத்து கட்சியினர்
3.கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் TNROA வேலைநிறுத்தம்
4.அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம்: 34 பேர் கைது
5.பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயற்சி இருவருக்கு மாவு கட்டு
கரூர் மாவட்டத்தில் சாம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் நவ.30க்குள் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து பயன் பெறலாம் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். மேலும், ஏற்கனவே பதிவு செய்த விவசாயிகள் மீண்டும் பதிவு செய்ய வேண்டாம். பதிவு செய்யும்போது விண்ணப்பத்துடன் நடப்பு சாகுபடி அடங்கல், பேங்க் பாஸ்புக் நகல், ஆதார் நகல் ஆகியவற்றை இணைத்து, பிரீமியம் தொகை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக கீழ்கண்ட துணை மின் நிலையங்களில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பஞ்சப்பட்டி, பாலவிடுதி, கோசூர், சிந்தாமணிப்பட்டி, மாயனூர், பணிக்கம்பட்டி, வல்லம், நாச்சலூர், தோகமலை, அய்யர்மலை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்.
1.கரூரில் எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்
2.மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்
3.மாயனூர் கதவணைக்கு வரும் 1659 கன அடி நீர்
4.கரூர்: சிறுமியை திருமணம் செய்தவர் போக்சோவில் கைது
5.தேங்காய் விலை இரு மடங்காக உயர்வு
Sorry, no posts matched your criteria.