India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக உருவெடுத்து, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இன்று மாலைக்குள் புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதுதவிர கரூர் மாவட்டத்தில் இன்று சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு ஊரில் மழையா கமெண்ட் பண்ணுங்க.
1.கரூரில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆய்வு
2.கரூர் பகுதியில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது
3.எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கை ரத்து செய்ய மறுப்பு
4.கரூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது
5.சிவ ஸ்தோத்திரம் பாடி தியானம் செய்த ரஷ்யர்கள்
கரூரில் தேர்தல் நடத்தல் விதிமீறலை வீடியோ எடுத்த தேர்தல் அதிகாரியை மிரட்டியதாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது கடந்த ஏப்ரல் மாதம் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டது. இதனை அடுத்து இந்த வழக்கை ரத்து செய்ய முன்னாள் அமைச்சர் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. எனவே இன்று தேர்தல் அதிகாரியை மிரட்டிய வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்தது.
TAMILNADU AMATEUR BODY BUILDING அசோஸியேஷன் கரூர் மாவட்டத்தில் வருகின்ற 15.12.2024 அன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஜி ஆர் திருமண மண்டபத்தில் கரூர் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற இருப்பதால் பொதுமக்கள் மற்றும் பாடி பில்டர்ஸ் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அறிக்கை அறிவித்துள்ளது. மேலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு உண்டு என்று கூறியுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று காலை 11 மணியளவில் கலெக்டர் தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. எனவே கரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் தவறாது விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
1.கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் பிரதோஷ பூஜை நடைபெற்றது.
2.தானியங்கி பம்புசெட் மானியத்தில் வாங்க கலெக்டர் அழைப்பு
3.கரூரில் நாளை மறுநாள் முதல் ‘க்யூ-ஆர்’ கோடு மூலம் மது விற்பனை
4.குறைந்த வாடகையில் ‘ட்ரோன்’ கரூர் கலெக்டர் தகவல்
5.பணம் வைத்து சூதாடிய 40 பேர் கைது
கரூர் மாவட்ட விவசாயிகளுக்கு, வேளாண் பொறியியல் துறை மூலம் மொபைல் போன் மூலம் இயங்கும் தானியங்கி பம்புசெட் கருவி மானிய விலையில் வழங்கப்படுகிறது என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். மேலும், கரூர் மற்றும் குளித்தலை உபகோட்டங்களுக்கு உட்பட்ட விவசாயிகள் உதவி செயற்பொறியாளரை 9443404531 மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் ரபி பருவத்தில் சாகுபடி செய்யும் பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடு செய்யலாம். இதில், ஹெக்டருக்கு பிரீமியத் தொகையாக தக்காளிக்கு ரூ.1,768, வெங்காயத்திற்கு ரூ.2,060, மிளகாய்க்கு ரூ.1,220 என பிரீமியம் தொகையை வரும் 2025 ஜனவரி 31க்குள்ளும், வாழைக்கு ரூ.3,460, மரவள்ளிக்கு ரூ.4,082 பிப்.28க்குள் செலுத்த வேண்டும் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் கூடுதல் பணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில், கரூரில், ‘க்யூ- ஆர்’ கோடு மூலம் மது விற்பனை முறை, நாளை மறுநாள் முதல் தொடங்கப்படுகிறது. நாளை மறுநாள் முதல் ( நவ.,30) டாஸ்மாக் கடைகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்காக மாவட்டத்தில், 87 டாஸ்மாக் கடைகளுக்கு, இரண்டு நாட்களாக, ‘க்யூ-ஆர்’ கோடு ஒட்டப்பட்ட மது பாட்டில்கள் அனுப்பும் பணி நடந்து வருகிறது.
கரூர் மாவட்டத்தில் கூடுதல் பணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில், கரூரில், ‘க்யூ- ஆர்’ கோடு மூலம் மது விற்பனை முறை, நாளை மறுநாள் முதல் தொடங்கப்படுகிறது. நாளை மறுநாள் முதல் ( நவ.,30) டாஸ்மாக் கடைகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்காக மாவட்டத்தில், 87 டாஸ்மாக் கடைகளுக்கு, இரண்டு நாட்களாக, ‘க்யூ-ஆர்’ கோடு ஒட்டப்பட்ட மது பாட்டில்கள் அனுப்பும் பணி நடந்து வருகிறது.
Sorry, no posts matched your criteria.