Karur

News November 4, 2024

அரிவாளுடன் பிறந்த நாள் கொண்டாடிய 3 பேர் கைது

image

கரூர்: குளித்தலை அடுத்த கீரனுார் பஞ். வெள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கதிரவன். இவர் வெள்ளப்பட்டி பொது தெருவில் தனது பிறந்த நாளை கொண்டாட நண்பர்களுடன் நின்றிருந்தார். அவர்கள் போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும், கையில் பெரிய அரிவாளுடன், ஆபாச வார்த்தைகளில் பேசிக்கொண்டிருந்தனர். தகவலறிந்து வந்த தோகைமலை போலீசார், கதிரவன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.

News November 3, 2024

கரூர் தலைப்புச் செய்திகள்

image

1.கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் 2ஆம் நாள் கந்தசஷ்டி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
2.பனை மரங்கள் உற்பத்தி செய்ய விவசாயிகள் எதிர்பார்ப்பு
3.வஸ்திர ரத்னா விருது பெற்றவருக்கு பாராட்டு
4.அரவக்குறிச்சியல் 31.00 மி.மீ. மழை பதிவு
5.கடவூரில் கணவனை தாக்கிய மனைவி, மகன் மீது வழக்கு

News November 3, 2024

குளித்தலையில் இருந்து கொசூருக்கு புதிய பஸ் தொடக்கம்

image

கரூர்: குளித்தலையில் இருந்து மேலக்கம்பேஸ்வரம் வழியாக கொசூருக்கு புதிய வழித்தடத்தில் பஸ் இயக்க தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் கலந்து கொண்டு புதிய வழித்தட பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். இந்த பஸ் குளித்தலை பஸ் நிலையத்தில் இருந்து மாலை 4.50 மணிக்கு புறப்படும் . பின்னர் கொசூரில் இருந்து அதே வழித்தடத்தில் குளித்தலைக்கு செல்லும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

News November 3, 2024

கரூர்: சாலையில் காத்திருக்கும் ஆபத்து

image

கரூர், லைட்ஹவுஸ் கார்னர் அமராவதி ஆற்று பாலத்தில், சென்டர் மீடியன் கான்கிரீட் கற்கள் சாய்ந்துள்ளது. இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவதால், விபத்து ஏற்படும் ஆபத்து காத்திருக்கிறது. குறிப்பாக, டூவீலர்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கற்களில் மோதி விழும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, விபத்துகளை தடுக்க சென்டர் மீடியனை முறையாக பராமரிப்பு பணி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

News November 2, 2024

கரூர் தலைப்புச் செய்திகள்

image

1.கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் கந்தசஷ்டி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
2.கரூர் மாவட்டத்தில் கல்லறை திருநாள் நடைபெற்றது.
3.வெள்ளியணையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
4.கரூர் மாவட்டத்தில் 25 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவானது.
5.இணுங்கூர் விதைப்பண்ணையில் வேளாண் கல்லூரி அமைக்க விவசாயிகள் கோரிக்கை

News November 2, 2024

கரூரில் சில பகுதிகளில் மழை வர வாய்ப்பு

image

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, ஆணைபாளையம், பரமத்தி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், பஞ்சப்பட்டி, மயிலம்பட்டி, கடவூர், பாலவிடுதி, வெஞ்சமாங்கூடலூர், மலைக்கோவிலூர், பள்ளப்பட்டி, சின்னதாராபுரம், வாங்கல் ஆகிய இடங்களில் லேசான மழையும், சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என இன்று வானிலை அறிக்கை மையம் அறிவித்துள்ளது.

News November 2, 2024

கரூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

image

கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, கரூர் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் நேற்று குளித்தலை, க.பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நல்ல மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

News November 2, 2024

மாநில போட்டிக்கு கரூர் மாணவர்கள் தேர்வு

image

மாநில யூத் வாலிபால் போட்டியில் விளையாடுவதற்கு கரூர் மாவட்ட வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கரூர் மாவட்ட கையுந்து பந்து சங்க புரவலர் விஎன்சி பாஸ்கர், இன்டிகுஷ் பெயிண்ட் நிறுவனம் சார்பில் டி-ஷர்ட் வழங்கப்பட்டது. அவற்றை விளையாட்டு வீரர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் வழங்கி வாழ்த்தினார். இதில் கையுந்து பந்து துணைத்தலைவர் சரண், செயலாளர் முகமது கமாலுதீன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

News November 1, 2024

கரூர் தலைப்புச் செய்திகள்

image

1.க.பரமத்தியில் 10.60 மில்லி மீட்டர் மழை பதிவு ஆனது.
2.அமராவதி தடுப்பணையின் நீர் நிலை மட்டம் நீர் இருப்பு 3772.35 டி.எம்.சி.யாக உள்ளது.
3.தான்தோன்றிமலை வெளுத்து வாங்கிய கனமழை
4.கரூர் மாநகராட்சியில் தேங்கி கிடக்கும் குப்பை அகற்றும் பணி தீவிரம்
5.மாயனூர் கதவணைக்கு 13,433 கனஅடி நீர் வரத்து
6. கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா தொடங்குகிறது.

News November 1, 2024

கரூர்: நெடுஞ்சாலையில் நாய்கள் தொல்லை

image

கரூர் மாநகராட்சி மட்டுமின்றி, புறநகர் பகுதிகளில் நாளுக்கு நாள் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. கரூரில் இருந்து சேலம், மதுரை, திருச்சி ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில் கூட்டம் கூட்டமாக நாய்கள் சுற்றித் திரிகின்றன. இவை சாலையில் குறுக்கிடுவதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

error: Content is protected !!