India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் வெறுப்பு அடைய வைக்கும் . கரூர் மக்களே.. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை SAVE செய்து உடனே மற்றவருக்கு ஷேர் பண்ணுங்க.

1. முதலில், http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். (SHARE பண்ணுங்க)

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <

கரூர் மாவட்டம், வடக்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளர் வடிவேல் மற்றும் செல்வம் ஆகியோர் நேற்று திமுகவிலிருந்து விலகினர். பின்னர் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வின் போது ஏராளான நிர்வாகிகளுடன் இருந்தனர்.

கரூரில் ஆட்டோ தொழிலை பெரிதும் பாதிக்கும் பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும் . தமிழக அரசே ஆட்டோ தொழிலாளா்களுக்கான தனி ஆன்லைன் செயலியை உருவாக்க வேண்டும். உயா்த்தப்பட்ட எப்.சி, இன்சூரன்ஸ் கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும். நல வாரியத்தில் ஆட்டோ தொழிலாளா்களுக்கான ஓய்வூதியத்தை ரூ. 3,000 ஆக உயா்த்தி வழங்க வேண்டும். வீடு கட்ட ரூ. 4 லட்சம் வழங்க வேண்டும் என சிஐடியு ஆட்டோ தொழிலாளா் சங்கம் கோரிக்கை

சட்டசபை தேர்தலை முன்னிட்டு கரூர் எஸ்.பி., ஜோஷ் தங்கையா 11 ஏட்டுகளை இடமாற்றம் செய்தார். அதன்படி, மோகன்ராஜ் (க.பரமத்தி), கதிர்வேல் (பசுபதிபாளையம் – வேலாயுதம்பாளையம்), ராமலிங்கம் (வாங்கல் – சின்னதாராபுரம்), சர்க்கரை பாவா (டவுன் – அரவக்குறிச்சி), கோவிந்தசாமி (டவுன் – வெள்ளியணை), சக்திவேல் (வெள்ளியணை – டவுன்), கதிர்வேல் பாண்டியன் (சின்னதாராபுரம் – தென்னிலை), அரவிந்த் (அரவக்குறிச்சி – தான்தோன்றிமலை)

கரூர் மாவட்டத்தில் (மார்ச்.8) இரவு 10 மணி முதல், இன்று (மார்ச்.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

கரூர் மக்களே வங்கிகளில் உங்களுக்கு ஊழியர்கள் முறையாக பதிலளிக்கவில்லையா? பணப்பரிவர்த்தனையின் போது கூடுதல் கட்டணம் கேட்கிறார்களா? கவலை வேண்டாம். இது போன்ற புகார்களை <
Sorry, no posts matched your criteria.