Karur

News September 2, 2025

கால்நடை ஆராய்ச்சி மையத்தில் இலவச பயிற்சி

image

கரூர்: பண்டுதகாரன்புதுார், அரசு கால்நடை பல்கலைக்கழக பயிற்சி (ம) ஆராய்ச்சி மைய வளாகத்தில் வரும் 4ஆம் தேதி இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. இந்தத் தகவலை, பயிற்சி மையத்தின் தலைவரும், பேராசிரியருமான அமுதா தெரிவித்துள்ளார். ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’ என்ற தலைப்பில்,கால்நடை துறை பேராசிரியர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர். இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடையலாம்.

News September 2, 2025

கரூர்: ஆவின் பால் கடை வைக்க ஆசையா? சூப்பர் திட்டம்!

image

கரூர் மக்களே.., தமிழக அரசின் தாட்கோ(TAHDCO) ஆவின் பாலகம் மானியத் திட்டம் மூலம் உங்கள் ஏரியாவில் நீங்களும் பாலகம் அமைக்கலாம்.
▶️இதற்கு அரசு சார்பாக ரூ.90 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.
▶️இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
▶️இதில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க உரிய ஆவணங்கள் வைத்திருத்தல் அவசியம். இந்த சூப்பர் வாய்ப்பை பயன்படுத்த <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க.(SHARE)

News September 2, 2025

கரூர் மாணவி கபாடி போட்டியில் சாதனை

image

கரூர்: தனியார் பள்ளியில் படிக்கும் பதினொன்றாம் வகுப்பு மாணவி விசாலினி பஞ்சாபில் நடைபெற்ற தேசிய அளவிலான கபாடி போட்டியில், தமிழ்நாடு 17 வயதிற்கு உட்பட்ட அணிக்காக சிறப்பாக விளையாடி SGFI போட்டிக்கு தேர்வாகியுள்ளார். அவருக்கு பலரும் பாராட்டி வருகின்றனர்.

News September 2, 2025

கரூர்: நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை நடைபெற உள்ளது. இதில் பெரிய குளத்து பாளையம் ஊராட்சி நடுநிலைப் பள்ளி, பள்ளப்பட்டி சுல்தார் ஹபிபுல்லா மஹால், தலவாபாளையம் மலையம்மன் திருமண மண்டபம், நொய்யல் அம்மையப்பர் மஹால், காக்காவாடி ஊராட்சி மன்றம் மற்றும் லாலாபேட்டை சிவசக்தி திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் திட்டம் நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்கள் பங்கேற்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

News September 2, 2025

கரூர்: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

கரூர் மாவட்டம் தோகைமலை வட்டாரத்தைச் சேர்ந்த சின்னையம்பாளையம், கழுகு பகுதியில் செப்டம்பர் 3, புதன்கிழமை காலை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் PLF கட்டிடம், அ.உடையாபட்டி அருகே நடைபெற உள்ளது. இதில் கலைஞர் உரிமைத்தொகை, பட்டா மாற்றம், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட பல அரசு சேவைகளுக்கு பயனாளர்கள் மனு அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News September 1, 2025

கரூர்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கரூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் இந்த <>லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 1, 2025

கரூர்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

image

▶️கரூரில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.▶️ வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. ▶️உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். ▶️இதை SHARE பண்ணுங்க.

News September 1, 2025

கரூர்: மத்திய அரசு வேலை வேண்டுமா?

image

கரூர் மக்களே பவர்கிரிட் நிறுவனத்தில் கள பொறியாளர் & மேற்பார்வையாளர் பணிக்கு 1,543 காலியிடங்கள் உள்ளது. இதற்கு BE / B.Tech / B.Sc படித்தவர்கள் விண்ணபிக்கலாம். சம்பளமாக ரூ.23,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். https://www.powergrid.in/en/job-opportunities என்ற இணையதளத்தில் விண்ணபிக்கலாம். எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் பின் பணி வழங்கப்படும்.SHARE பண்ணுங்க!

News September 1, 2025

கரூர் மக்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

image

▶️மாநில கட்டுப்பாட்டு அறை – 1070
▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 1077
▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04324-257510
▶️குழந்தைகள் பாதுகாப்பு – 1098
▶️பேரிடர் கால உதவி – 1077
▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091
▶️முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டம் – 1800 425 3993
▶️முதியோர் உதவி எண் – 1800-180-1253, 044-24350375. SHARE பண்ணுங்க..!

News September 1, 2025

கரூர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

கரூர் மாவட்டத்தில் வேளாண் பட்டதாரிகளை தொழில்முனைவோராக மாற்றும் வகையில் 15 இடங்களில் உழவர் நல சேவை மையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 30 சதவீதம் மானியமாக, ரூ.3 லட்சம் முதல் 6 லட்சம் வரை உழவர்களுக்கு தேவையான இடுபொருட்கள் விற்பனை செய்வதோடு ஆலோசனைகள் வழங்கப்படும். மேலும் கடன் பெற https://www.tnagrisnet.tn.gov.in/ விண்ணப்பிக்கலாம் என கரூர் மாவட்ட வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!