India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர் மாவட்டத்தில் கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் குளித்தலையில் ஆதிநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் க. பரமத்தியில் தென்னிலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகள் விடுதிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. உண்மையில் நடந்த குழந்தைகள் தின விழாவில் கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பரணிதரனுக்கு கல்வித்துறை அமைச்சர் விருது வழங்கினார்.
கரூர், மாயனூர் கதவணைக்கு இன்று காலை நிலவரப்படி 5729 கன அடி நீர் காவிரியில் வந்து கொண்டிருக்கிறது. காவிரி ஆற்றில் 4509 கன அடி நீரும், தென்கரை பாசன வாய்க்காலில் 500 கன அடி, கட்டளை மேட்டு வாய்க்காலில் 300 கன அடி, புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் 400 கன அடி நீரும் பாசனத்திற்காக திறந்து விடப்படுகிறது. அணைக்கு சில நாட்களாகவே 2000 கன அடி நீர் குறைவாக வருகிறது.
கரூரில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விரும்பும் வாக்காளர்கள், ஆதார் எண் இணைப்பவர்கள், பெயர் நீக்கம், பெயர், வயது, பாலினம், கதவு எண், முகவரி முதலிய பதிவுகளில் திருத்தம் செய்வதற்கும், தொகுதிக்குள்ளேயே வசிப்பிடம் மாற்றுதல் போன்ற பணிகளுக்கு தங்கள் பகுதியில் உள்ள ஓட்டுசாவடிகளில் இன்று நடைபெறும் சிறப்பு முகாம்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
கரூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதியில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அரவக்குறிச்சி, ஆணைபாளையம், பரமத்தி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், பஞ்சப்பட்டி, மயிலம்பட்டி, கடவூர், பாலவிடுதி, வெஞ்சமாங்கூடலூர், மலைக்கோவிலூர், பள்ளப்பட்டி, சின்னதாராபுரம், கல்லுமடை, மணவாடி, வெள்ளியணை, வாங்கல் ஆகிய பகுதிகளில் இன்று லேசான மழையும்.
கரூர் மாவட்டம், காக்காவாடி, குள்ளம்பட்டி, கீழ் பசுபதிபாளையம் கிராமத்தில் இன்று(16.11.24) காலை 5 மணி முதல் லேசான சாரல் மழை தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான காற்றுடன் மழை செய்வதால் குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகியது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வேலைக்கு செல்வோர் மற்றும் கல்லூரி செல்வோர் ஆகியோரின் வசதிக்காக கரூர் மாவட்டத்திலுள்ள 1055 வாக்குச்சாவடி மையங்களில் எதிர்வரும் 16.11.2024 (சனிக்கிழமை), 17.11.2024 (ஞாயிற்றுகிழமை), 23.11.2024 (சனிக்கிழமை) மற்றும் 24.11.2024 (ஞாயிற்றுகிழமை) ஆகிய 4 நாட்களில் சிறப்பு முகாம்கள் அந்தந்த வாக்குச்சாவடியில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தகவல் அறிவித்துள்ளார்.
1.கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களில் அன்னாபிஷேக பூஜை விமர்சையாக நடைபெற்றது.
2. பசுபதிபாளையத்தில் பட்டப் பகலில் திருட்டு – திருடனுக்கு தர்ம அடி
3. கோடங்கிப்பட்டி பிரிவு சாலையில் லாரிகள் மோதி விபத்து
4.கரூரில் தொழில் தொடங்க விரும்புவோருக்கு அறிவிப்பு
5.அமராவதி தடுப்பணைக்கு 329 கன அடி நீர்வரத்து
கரூரில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மாற்றுத் திறனாளிகளில் சிறந்த பணியாளர்/சுயதொழில் புரிபவர்/பொதுக்கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடையற்ற கட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விருது பெற்றிட விண்ணப்பங்கள் https://awards.tn.gov.in”என்ற இணையதளத்தில் நவ.18ஆம் தேதி கடைசி நாளாக மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் அளித்துள்ளார்.
கரூரில் புதிதாக தொழில் தொடங்க தொழில்மனைகளை வாங்க விரும்புவோர் https://www.tansidco.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மேலும் தமிழ்நாடு சிட்கோவிற்கு சொந்தமாக அமைந்துள்ள தொழிற்பேட்டைகளின் காலி மனைகள் விபரங்கள் மேற்கண்ட இணையதளத்தின் வாயிலாகவே தெரிந்து கொண்டு தேவையானவற்றை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளனர். இதில் Whatsapp குரூப்பில் SBI rewardz என்னும் இணையதள மோசடி செய்தி பகிரப்பட்டு வருகிறது. இந்த APKயை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும், மேலும் இதனை நம்பி உங்கள் வங்கி கணக்கு மற்றும் சுய விவரங்களை பதிவு செய்ய வேண்டாம் என்று கரூர் மாவட்ட எஸ் பி பெரோஸ் கான் அப்துல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.