India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர் அருகே காக்காவாடி பகுதியை சேர்ந்த சிவசாமி, இவரது மனைவி ரேவதி (40) சுக்காலியூர் தனியார் வங்கியில் கிளர்க்காக பணி செய்து வருகிறார். பணி முடிந்து காக்காவாடி சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, கடவூரைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர் அவரது தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றார். சுதாரித்துக்கொண்ட ரேவதி சத்தம் போட்டதால் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.
தோகைமலை வருவாய் குறுவட்டத்திற்குட்பட்ட கல்லடையை சேர்ந்த சந்தானகுமார் என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்து நீதிமன்ற தீர்ப்புரையின்படி நேற்று கிராமம் புல எண்கள் 438, 439 என வகைப்படுத்தி நில அளவை செய்து அத்து காண்பிக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதில் தாசில்தார் இந்துமதி தலைமையில் வருவாய் துறையினர் குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
1.தனியார் பள்ளி வேன் சாலையில் கவிழ்ந்து விபத்து
2.காய்ந்து போன கரும்புடன் கலெக்டர் அலுவலகத்தில் மனு
3.மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெற்ற 512 மனுக்கள்
4.நீதிமன்றத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
5.அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலை வெள்ளி விழா
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, வங்கிக் கடன்கள், பட்டா மாறுதல், ஜாதி சான்று உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் 512 மனுக்கள் பெற்றனர். இக்கூட்டத்தில் அனைத்து அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
முருங்கை செடியில் நவ., டிச., மாதங்களில் கவாத்து செய்வது அவசியம் எனவும் அதன் நன்மைகள் குறித்து அரவக்குறிச்சி வட்டார வேளாண் அலுவலர் கண்ணன் ஆலோசனை கூறியுள்ளார். கவாத்து என்பது பக்க கிளைகளை வெட்டி ஒழுங்குபடுத்துவது, கவாத்து செய்வதால் புதிய கிளைகள், பூ, மொட்டுகளை துளிர்க்க வைக்கலாம். இதனால் காய்ப்பு தன்மை அதிகரிக்கும். காய்கள் தரம் உயரும். பூ வைத்த பிறகு கவாத்து செய்யக்கூடாது என அவர் கூறியுள்ளார்.
1. பசுபதிபாளையம் வகுப்பறை கட்டுமான பணியினை ஆய்வு செய்த ஆணையர்
2.தவெக., சார்பில் பால், முட்டை, ரொட்டி வழங்கல்
3.ஆயுர்மேளா நிகழ்ச்சி 2 நாள் நிகழ்வுகள்
4.ரவுடி கொலை வழக்கில் 4ஆவது குற்றவாளி கைது
5.அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மக்களை சந்திக்கும் எம்.பி.
கரூர் மாநகராட்சி மண்டலம்-1 பாலம்மாள்புரம் வார்டு-11ல் எஸ் எப் சி – பள்ளி மேம்பாட்டு மானியம் 2024-2025 திட்டத்தின் கீழ் பாலம்மாள்புரம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் நடைபெறும் கட்டுமான பணிகளை இன்று (22/12/2024) கரூர் மாநகராட்சி ஆணையர் சுதா ஆய்வு செய்தார். உடன் கரூர் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்ட மைய நூலகத்தில், திருக்குறள் டிச.27ஆம் தேதி பேச்சுப் போட்டியும், டிச.30ஆம் தேதி திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியும், டிச.31ஆம் தேதி வினாடி-வினா போட்டியும் நடைபெறும். இதில் பங்கேற்க விரும்புவோர் தங்களது பெயரை மாவட்ட மைய நூலகத்தில் நேரிலோ அல்லது 04324-263550 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொண்டு வரும் 24ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
1.சிபிஐஎம் , காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
2.வெண்ணைமலை பாலசுப்ரமணிய கோவில் இடத்தில் ஆக்கிரமிப்பு -சீல்.
3.மாயனூர் பகுதியில் வீடுகளை சூழ்ந்த மழைநீர்
4.ஆயுர்வேத முகாமில் கலந்து கொண்ட அமைச்சர்
5.கரூர் மாவட்டத்தில் 143.70 மி.மீ மழைப்பொழிவு
கரூர் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளுக்கு சீல் வைக்கும் பணியானது இன்று தொடங்கியது. வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமிக்கு 526 ஏக்கர் இடம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட காவல்துறை பாதுகாப்புடன் ஆக்கிரப்பு இடங்களை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கடைகள் ஏடிஎம் உள்ளிட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகின்றது.
Sorry, no posts matched your criteria.