Karur

News December 27, 2024

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு: கரூர் எம்பி இரங்கல்

image

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு கரூர் எம்பி ஜோதிமணி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், மன்மோகன் சிங் நவீன இந்தியாவின் பொருளாதாரச் சிற்பியாகவும், சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தார். 1991ஆம் ஆண்டு மன்மோகன் சிங் கொண்டு வந்த திட்டத்தின் மூலம் இந்திய பொருளாதாரம் வலிமை அடைந்தது. இந்த துயரமான நேரத்தில் மன்மோகன்சிங் குடும்பத்தாருக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

News December 27, 2024

BREAKING: கரூரில் திடீர் ஒத்திவைப்பு

image

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்தும், திமுக அரசின் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும் கரூர் மாவட்ட அஇஅதிமுக சார்பில் – கரூர் தலைமை தபால் நிலையம் அருகில் இன்று (27.12.2024) நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கண்டன நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என என கரூர் அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

News December 26, 2024

ஊழியர்களுக்கு நிலம் வழங்கிய பள்ளி நிர்வாகம்

image

கரூர் மாவட்டம், சின்னாண்டாங்கோவில் சாலையில் உள்ள, சங்கரா வித்யாலயா பள்ளியில், நேற்று ஆண்டு விழா நடைபெற்று முடிந்த நிலையில், அங்கு பத்து வருடங்களுக்கு மேல் பணியாற்றிய ஊழியர்களுக்கு, 1800 சதுர அடி முதல் 2800 சதுர அடி வரை, நிலங்கள் வழங்கப்பட்டது. பத்திர செலவையும் பள்ளி நிர்வாகமே ஏற்று கொள்வதாக கூறியுள்ளது. 6.5 கோடி மதிப்புள்ள நிலங்களை பள்ளி நிர்வாகம் 11 ஊழியர்களுக்கு வழங்கியது.

News December 26, 2024

கரூர் மாநகராட்சி பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

கரூர் காந்திகிராமம், சணப்பிரட்டி மற்றும் தான்தோன்றிமலை, ராயனூர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் குடிநீர் குழாய்கள்புலியூர் பகுதியில் ஏர்டெல் நிறுவனம் Trenchless method முறையில் கேபிள் பதிக்கும் பணிகள் மேற்கொண்ட பொழுது 8க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் குழாய்கள் பழுது அடைந்துள்ளதால் பிரதான குடிநீர் குழாய்களை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாக கரூர் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

News December 26, 2024

அய்யர்மலையில் ரோப்கார் சேவை நிறுத்தம்

image

குளித்தலை அடுத்த அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த மலைக்கோவில் செங்குத்தாக 1,017 படிகளை கொண்டது. ரோப்கார் சேவை வசதியை மூன்று மாதங்களுக்கு மேலாக பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப்கார் சேவை வரும் 28,29 /12/2024 ஆகிய இரண்டு நாட்கள் நிறுத்தப்படுகிறது என கோவில் செயல் அலுவலர் தங்கராஜீ கூறியுள்ளார்.

News December 26, 2024

கரூர் எம்.பி அறிக்கை வெளியீடு

image

கரூர் எம்.பி ஜோதிமணி இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. கல்வி பயிலும் இடங்களிலே மாணவிகளுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிச்சயம் அச்சுறுத்த கூடியது . பாலியல் குற்றவாளியின் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும், அப்பொழுதுதான் பெண்கள் பாதுகாப்பு உணர முடியும் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News December 26, 2024

பள்ளபட்டியில் இறகுபந்துபோட்டி: 80 அணிகள் பங்கேற்பு

image

பள்ளபட்டியில் மாவட்ட அளவிலான இறகுபந்துப் போட்டி நடைபெற்றது. இரண்டு பிரிவுகளாக நடந்த போட்டியில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட அணிகள் விளையாடின. குளித்தலையைச் சேர்ந்த ஹரி நவீன் ஆகியோர் முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பை ரொக்க பணம் பரிசாக வழங்கப்பட்டது. மற்ற அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் பதக்கம் வழங்கப்பட்டது.

News December 26, 2024

கரூரில் சிக்கிய ‘கல்யாண’ ராணி!

image

புஞ்சை காலக்குறிச்சியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கும் கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த ரேணுகா என்பவருக்கும் டிச.12ம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில் ரேணுகாவிற்கு ஏற்கனவே புதுக்கோட்டையைச் சேர்ந்த மெய்யர், கோவையைச் சேர்ந்த லோகநாதன் ஆகியோருடன் திருமணம் நடந்திருப்பது தெரிய வந்தது. உடனடியாக ரமேஷ் அனைத்து மகளிர போலீசில் புகாரளித்தார். இதன்பேரில் ரேணுகாவை போலீசார் கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.

News December 25, 2024

கரூர்: இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

➤ திருச்சி – கரூர் இடையே புதிய முன்பதிவில்லா சிறப்பு ரயில் ➤ தந்தையுடன் சென்ற சிறுமி விபத்தில் உயிரிழப்பு ➤ குளித்தலை அருகே செம்மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் ➤ கரூரில் அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் ➤ அமராவதி தடுப்பணைக்கு 361 கன அடி நீர் வரத்து ➤ கரூரில் வாஜ்பாய் பிறந்த நாள் கொண்டாட்டம் ➤ தவெக சார்பில் வேலு நாச்சியாருக்கு நினைவஞ்சலி ➤ இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் உயிரிழப்பு ➤

News December 25, 2024

கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த கரூர் எம்.பி.

image

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்கள் தனது தொகுதிக்குட்பட்ட பொதுமக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை இன்று தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களில் “அன்பு, கருணை, மன்னிப்பை போதித்த இயேசு கிறிஸ்துவின் பிறந்ததினமான இன்று (25/12/2024) அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!