Karur

News September 9, 2025

கரூர்: வாய்க்காலில் விழுந்து முதியவர் பலி!

image

கரூர்: வேலாயுதம்பாளையம், கோலகவுண்டனூரைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (68). இவர் நேற்று(செப்.8) பழத்துறை ராஜா வாய்க்கால் பாலத்தின் தடுப்பின் மேல் உட்கார்ந்து இருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வாய்க்காலில் கீழே விழுந்து நீரில் மூழ்கி பலியானார். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News September 9, 2025

கரூர்: கணவனுக்கு வேலை போனதால் மனைவி தற்கொலை

image

கரூர்: குளித்தலை அருகே வாத்திகவுண்டனூரைச் சேர்ந்தவர் சங்கப்பிள்ளை. இவரது மனைவி ராஜேஸ்வரி(38). இவர் தாசில் நாயக்கனூர் பகுதியில் அங்கன்வாடியில் வேலை பார்த்து வந்துள்ளார். தனது கணவர் ஊராட்சி செயலாளராக வேலை பார்த்து கடந்த 7 மாதங்களாக பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் மன விரக்த்தியில் ராஜேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News September 9, 2025

கரூர்: ரூ.12,000 ஊக்கத்தொகை பெறுவது எப்படி?

image

▶️தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் படித்த, வேலையில்லாத இளைஞர்களுக்கு ஊக்கத் தொகையுடன் பயிற்சி வழங்கப்படுகிறது.

▶️இந்தப் பயிற்சிகள் உங்கள் ஊரிலேயே நடைபெறும்

▶️மேலும், சில பயிற்சிகளுடன் கூடிய நிச்சய வேலை வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

▶️பயிற்சியின் போது இதர செலவுகளுக்கு ரூ.12,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.

▶️இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக்.

News September 9, 2025

கரூர்: கனரா வங்கி நிறுவனத்தில் வேலை வேண்டுமா..?

image

திண்டுக்கல்: இந்திய பொதுத்துறை வங்கியான கனரா வங்கியிந்துணை நிறுவனமான கனரா வங்கி செக்யூரிடீஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள sales, Marketing(Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்தால் போதுமானது. ரூ.22,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்.<<>> அக்.6ஆம் தேதியே இதற்கு கடைசி நாள். உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 8, 2025

கரூர் மக்களே உஷார்! காவல்துறை எச்சரிக்கை…

image

கரூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.”செல்போன் டவர் அமைக்க இடம் தேவை” என்ற பெயரில் சிலர் குறுஞ்செய்தி அனுப்பி ஏமாற்றி வருகிறார்கள். இது போன்ற சைபர் மோசடிகளில் ஏமாறாதீர்கள். உங்கள் நிலத்தை தரும் முன் சரிபார்க்கவும். ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் உடனே சைபர் குற்றம் உதவி எண் 1930-ஐ தொடர்புகொள்ளவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கவும். (SHARE IT)

News September 8, 2025

கரூர்: அரசு அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்!

image

கரூரில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம், <>www.tnpds.gov.in<<>> இணையதளம் மூலம் மின்னணு அட்டை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்களை ஆன்லைனில் அப்லோடு செய்தால், 30-40 நாட்களுக்குள் விண்ணப்ப நிலை குறித்து அரசு தகவல் வழங்கும். இதன் மூலம் நேரமும் பணமும் மிச்சப்படுத்த முடியும். இதை பற்றி தெரியாதவர்களுக்கு இதை SHAER பண்ணுங்க.

News September 8, 2025

கரூரில் வைரஸ் காய்ச்சலா? செய்ய வேண்டியவை!

image

கரூர் மக்களே.., வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேகங்களை வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு, பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு ‘104’ என்ற எண்ணைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம். அதில் காய்ச்சலுக்கு நீங்கள் எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். இதை உடனே SHARE பண்ணுங்க!

News September 8, 2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கரூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கின் வாராவாரம் திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தங்கள் குறைகளை உடனடியாக தீர்வு காண மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில் ஏராளமான மனுக்கள் பெறப்பட்டன.

News September 8, 2025

ஸ்டாலினை வரவேற்ற செந்தில் பாலாஜி!

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாடு பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்துக்கு சென்று தமிழகம் திரும்பினார். இந்நிலையில், அவரை கரூர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கரூர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எம்எல்ஏ நேரில் சென்று வரவேற்றார். அவருடன் கழக நிர்வாகிகளும் உடன் சென்றனர்.

News September 8, 2025

அய்யர்மலையில் நாளை முதல் ரோப்கார் இயக்கம்

image

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு ஒரு நல்ல செய்தி. பழுதடைந்திருந்த ரோப்கார் வசதி சரிசெய்யப்பட்டு, நாளை முதல் மீண்டும் செயல்படும் என செயல் அலுவலர் தங்கராஜ் தெரிவித்துள்ளார். 1017 படிகள் உள்ளதால், இது பக்தர்களுக்கு ஒரு பெரிய உதவியாக இருக்கும்.

error: Content is protected !!