India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர், மன்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூரில் உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி முகாம் டிச.12ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் நேரடியாக வந்து கலந்து கொள்ளலாம் என மையத்தின் தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கமும் இணைந்து, 16.12.2024 முதல் 05.01.2025 வரை, 21 நாட்களுக்கு, அனைத்து பசு மற்றும் எருமையினங்களுக்கும் இலவசமாக தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், கோமாரி நோய் தடுப்பூசி 6வது சுற்று போடும் பணி அந்தந்த கால்நடை மருத்துவமனைகளில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட, 27.12.1956 ஆம் நாளினை, நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஆட்சிமொழிச் சட்ட வாரமாக, கொண்டாட வேண்டும் என்று அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி, கரூர் மாவட்டத்தில் தமிழ்வளர்ச்சித்துறை சார்பில், 18.12.2024 முதல் 27.12.2024 வரை, ஆட்சிமொழிச் சட்டம் வாரம் கொண்டாடப்பட உள்ளது என, மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.
கரூர், லாலாபேட்டை அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணகி 37. இவர் கடந்த 6ம் தேதி, வீட்டில் இருந்தார். அப்போது அங்கு கிளி கூண்டுடன் வந்த நபர், வீட்டில், பில்லி, சூனியம் இருப்பதாக கூறியதோடு, கழுத்தில் இருந்த செயினை, செம்பு தண்ணீரில் போட்டு, பரிகாரம் செய்ய வேண்டும் என ஏமாற்றி, 26 கிராம் எடையுள்ள செயினுடன், தப்பி சென்று விட்டார். புகாரின் பேரில் லாலாபேட்டை போலீசார் நேற்று வழக்குபதிவு செய்துள்ளனர்.
கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், டிச.14ம் தேதி முதல், தேசிய மக்கள் நீதிமன்றம் கூட்டரங்கில், மக்கள் நீதிமன்றம், பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை, நடைபெறும். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தொலைப்பேசி எண்: 04324 296570 தொடர்புக் கொள்ளலாம் என, மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.
கரூர் நொய்யல் பகுதியில் நாட்டுக்கோழி சந்தை இன்று நடைபெற்றது. கடந்த வாரம் 500 ரூபாய்க்கு விற்பனையான நாட்டுக்கோழி இன்று கிலோ ரூபாய் 400 விலை போனது, பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள் கடந்த வாரம் கிலோ 350 க்கும், இன்று கிலோ 300-க்கும் விற்பனையானது. சண்டைக்கு வளர்க்கப்படும், சேவல்கள்1000 முதல் 5000 வரை விற்பனையானது. தற்போது கார்த்திகை மாதம் என்பதால் விலை குறைவாகவே போனது.
கரூர் மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக கீழ்கண்ட துணை மின் நிலையங்களில் நாளை (10.12.24) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரவக்குறிச்சி, கருங்கல்பட்டி, காவல்காரன்பட்டி, பள்ளப்பட்டி, செல்லிவலசு, புலியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்.
➤அண்ணமலையை விமர்சித்த அமைச்சர் செந்தில்பாலாஜி ➤பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்ற அமைச்சர் ➤முதல்வர் தான் எனது ரோல் மாடல் அமைச்சர் பேச்சு ➤கரூர் மாவட்டத்தில் இறைச்சி விலை நிலவரம் ➤ தீயணைப்பு துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி ➤முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு ➤கரூரில் கொட்டித் தீர்த்த மழை.
10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு வரும் ஜனவரி மாதம் 25ஆம் தேதி நடைபெறும் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் 1000 பேர் தேர்வு செய்யப்பட்டு, அதில் 500 மாணவர் மற்றும் 500 மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கப்படும். http://dge.tn.gov.in எனும் இணையதளத்தில் நவ., 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
கரூர் சட்டமன்ற தொகுதி மற்றும் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வார்டுகளில், நாளை (டிச.8), (வார்டு எண்கள் 13, 14, 15, 16, 36, 37, 39, 40, 41, 42, 43, 44, 45, 46 ,47 & 48) பகுதிகளில் மதுவிலக்கு, மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற உள்ளார். மேலும் பொதுமக்கள் அனைவரும் கோரிக்கை மனுக்களை கொடுத்துப் பயன்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.