Karur

News December 11, 2024

கரூர் கரும்பு விவசாயிகள் எதிர்பார்ப்பு

image

தமிழர்களின் முக்கிய திருவிழாவான பொங்கல் திருவிழா வரும் ஜனவரி 14 போகியுடன் தொடங்குகிறது. பொங்கல் விழாவை ஒட்டி தமிழக அரசு பொங்கல் பரிசு வழங்கி வருகிறது. அதில் கரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் செங்கரும்புகளை பயிரிடுவது வழக்கம். ஒரு மாதமே உள்ள நிலையில் பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிடவில்லை. எனவே கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் அரசின் அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

News December 11, 2024

கரூரில் எஸ் பி அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு கூட்டம்

image

கரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம், குற்ற ஆவண காப்பகம், குற்ற பிரிவு, கைரேகை பிரிவு, புகைப்படப் பிரிவு, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு, சைபர் கிரைம், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் திருச்சிராப்பள்ளி சரக காவல்துறை துணை தலைவர் மனோகர் IPS வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். உடன் எஸ்.பி. பெரோஸ் கான் அப்துல்லா கலந்து கொண்டார்.

News December 11, 2024

4 யூனிட் மணல் கடத்தி வந்த லாரி பறிமுதல்

image

கரூர் மாவட்டம் வெள்ளப்பட்டி கிராமம் விஏஓ இராஜகேசவன் நேற்று பாரப்பட்டியில் தனது உதவியாளருடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அவ்வழியே வந்த லாரியை சோதனை செய்தபோது எம்.சாண்டுக்கான உரிமம் பெற்று மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. விஏஓ புகாரின் பேரில் கன்னியாகுமரி மாவட்டம் சிற்றார் அணையை சேர்ந்த பிரசாந்த் மீது தோகைமலை போலீசார் நேற்று வழக்கு பதிந்து 4 யூனிட் மணலுடன் லாரி பறிமுதல் செய்தனர்.

News December 11, 2024

கரூரில் மானிய விலையில் தானியங்கி பம்புசெட்

image

கரூர் மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் செல்போன் மூலம் இயங்கும் தானியங்கி பம்ப்செட் கருவி 50 சதவீதம் மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கரூர் மற்றும் குளித்தலை உள்கோட்டங்களுக்கு உட்பட்ட விவசாயிகள் உதவி செயற்பொறியாளரை (வே.பொ) 9443404531 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News December 11, 2024

கரூர்: வாகனங்கள் பொது ஏலம்

image

கரூர் மாவட்ட மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 26 டூவீலர் வாகனங்களை, ஆயுதப்படை வளாகத்தில் வைத்து 13.12.24-ம் தேதி, காலை 11 மணிக்கு பொது ஏலம் விடப்படும். இதில் தங்களது ஆதார் கார்டு நகல் அல்லது ரேஷன் கார்டு நகலுடன் காப்பு தொகையாக ரூ.5000 செலுத்தி, 12.12.24-ம் தேதி மாலை 5 மணிக்குள், தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 11, 2024

கரூர் ஆட்சியர் விவசாயிகளுக்கு வேண்டுகோள்

image

கரூர் மாவட்ட விவசாயிகளுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரபி பருவத்தில் வாழை, மரவள்ளி, தக்காளி, வெங்காயம், மிளகாய் போன்ற பயிர்களுக்கு காப்பீடு செய்யப்படும். இதற்கு விவசாயியின் புகைப்படம், ஆதார், சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை கூட்டுறவு சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் இ-சேவை மையத்தில் பதிவு செய்யலாம் என ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News December 10, 2024

கரூர்: இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

➤ஆண்களுக்கான குடும்பக்கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கி வைத்த ஆட்சியர் ➤சிபிஐ சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் ➤ வெள்ளாடு வளர்ப்பு குறித்து நாளை மறுநாள் இலவச பயிற்சி ➤தாந்தோன்றிமலையில் குடும்பத் தகராறில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை ➤ பத்திரிக்கையாளர் எனக்கூறி பொதுமக்களிடம் மோசடி செய்தால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை ➤ அமராவதி தடுப்பணைக்கு நீர்வரத்து குறைவு

News December 10, 2024

கரூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

image

கரூர் மாவட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில், ஒரு சில போலியான நபர்கள், பல்வேறு அரசு சாராத இயக்கங்களை சார்ந்தவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் ஆகியோர், தங்களுக்கு உயர் அலுவலர்களை தெரியும் எனக்கூறி, உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறேன் என்று பொதுமக்களிடம் மோசடி செய்வதாக புகார் வந்துள்ளது. இதுபோன்ற மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் ஆட்சியர் எச்சரித்துள்ளார். 

News December 10, 2024

TNPL சார்பில் நாளை மருத்துவ முகாம்

image

கரூர்,TNPL சார்பில் 299ஆவது இலவச மருத்துவ முகாம் நாளை நடைபெற உள்ளது. அதன்படி ஞானப்பரப்பு, கந்தசாமி பாளையம், நல்லியம்பாளையம், சொட்டையூர், மூலிமங்கலம், பழமாம்புரம், மசக்கவுண்டனூர், குறுக்குப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 8 மணி முதல் மதியம் 1மணி வரை இலவச மருத்துவ முகாம் நடக்கிறது. மருத்துவ முகாமை கிராம மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என TNPL நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News December 10, 2024

விளைச்சல் குறைவால் பூக்கள் விலை உயர்வு

image

நொய்யல், காளிபாளையம், குளத்துப்பாளையம், வேட்டை மங்கலம், குந்தாணி பாளையம் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் நேற்று மாலை பூக்களை ஏலம் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்தனர். இதில் குண்டுமல்லி கிலோ ரூ.1600க்கும், சம்பங்கி பூ ரூ.160க்கும், அரளிப்பூ ரூ.300க்கும், ரோஜாப்பூ ரூ.220க்கும், முல்லைப்பூ ரூ.1100க்கும் விற்பனையானது. விளைச்சல் குறைவால், பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

error: Content is protected !!