India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேட்டு மகாநாதபுரம் கட்டளை மீட்டு வாய்க்கால் கரைஓரத்தில் இன்று தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த அடையாளம் தெரியாதா ஆண் பிணம் கிடந்தது. தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் உடலை கைப்பற்றினர். பின்பு பிரதேபரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அரவக்குறிச்சி பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி காளிதாஸ் என்பது தெரியவந்தது. குளித்தலை டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் மாதத்தில் 3வது வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இம்மாதத்திற்கான வேலை வாய்ப்பு முகாம் வெண்ணைமலையில் வரும் 20ஆம் தேதி 10 – 2 மணி வரை நடைபெறுகிறது. கடல்சார் வாரியத்தின் கீழ் செயல்படும் L & D கப்பல் நிறுவனத்திற்கு பயிற்சியுடன் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 18-25 வயதுடைய பிட்டர்ஸ், வெல்டர் பங்கேற்கலாம்.
கரூர் மாவட்ட வெண்ணைமலையில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1, 2, 4 போன்ற வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன. இது டிசம்பர் 31-ம் தேதி தங்களது சுயவிவர குறிப்புகளுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலரை வேலை நாட்களில் நேரில் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் மாதத்தில் 3வது வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இம்மாதத்திற்கான வேலை வாய்ப்பு முகாம் வெண்ணைமலையில் வரும் 20ஆம் தேதி 10 – 2 மணி வரை நடைபெறுகிறது. கடல்சார் வாரியத்தின் கீழ் செயல்படும் L & D கப்பல் நிறுவனத்திற்கு பயிற்சியுடன் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 18-25 வயதுடைய பிட்டர்ஸ், வெல்டர் பங்கேற்கலாம்.
கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு இன்று தற்போது நிலவரப்படி 10160 கன அடி நீர் காவிரியில் வந்து கொண்டிருக்கிறது. காவிரி ஆற்றில் 9660 கன அடி நீரும், தென்கரை பாசன வாய்க்காலில் 200 கன அடி நீரும் கட்டளை மேட்டு வாய்க்காலில் 200 கன அடி நீரும் புதிய கட்டளைமேட்டு வாய்க்காலில் 100 கன அடி நீரும் விவசாயத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில நாட்களாகவே தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது.
குளித்தலை அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வர் திருக்கோவில் ஐந்தாவது கடைசி சோமவார திருவிழாவில் தனது குடும்ப உறுப்பினர்களுடன் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் இரா.மாணிக்கம் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். ரெத்தினகிரீஸ்வர் திருக்கோவிலில் அமைக்கப்பட்டுள்ள ரோப் காரில் தனது குடும்ப உறுப்பினர்களுடன் பயணம் செய்தார்.
கரூர் மாநகராட்சி கூட்டத்தில் ஆணையர், அதிகாரிகளிடம் சரமாரி கேள்விகளை மேயர் கவிதா கேட்டுள்ளார். இக்கூட்டத்தில் குறைந்த செலவிலான அடிப்படை வசதிகள் அதிகாரிகள் செய்து தரவில்லை, திட்ட அறிக்கைகளை தயார் செய்ய அதிகாரிகள் தாமதம் செய்வதாகவும் குடிநீர், மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகளுக்கு நிதி நிலைமையை காரணம் காட்டுவதாகவும் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா அவர்கள் கேள்விகளை எழுப்பி உள்ளார்.
அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியம் தடா கோவில் பகுதியில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் வழங்கப்பட்ட தினசரி நாள்காட்டியை பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ அவர்கள் வழங்கினார். பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தினசரி நாட்காட்டியை பெற்றுக் கொண்டனர்.
கரூர் மாவட்டத்தில் வருகின்ற டிசம்பர் 21 மற்றும் 22 தினங்களில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் மற்றும் மருத்துவ கண்காட்சி சரஸ்வதி வெங்கட்ராமன் மஹாலில் நடைபெற உள்ளது. முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், இலவச ஆயுர்வேத சிகிச்சை, பாரம்பரிய உணவு கண்காட்சி, அரிய வகை மூலிகை கண்காட்சி, யோகாசன பயிற்சி போன்றவை நடைபெற உள்ளது.
கரூர் மாநகராட்சி மண்டலம் 3 காந்திகிராமம், சணப்பிரட்டி மற்றும் மண்டலம் 4 தான்தோன்றிமலை, ராயனூர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமான கட்டளை தலைமை நீரேற்று நிலையத்தில், அமராவதி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் குடிநீர் குழாய்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால், குழாய்களை சீரமைக்கும் பணி நடைபெறுகிறது. எனவே சுமார் 5 நாட்களுக்கு பிறகு குடிநீர் வழங்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.