India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாயனூர் கதவணைக்கு இன்றைய நிலவரப்படி 5359 கனஅடி நீர் காவிரியில் வந்து கொண்டிருக்கிறது. காவிரி ஆற்றில் 4509 கன அடி நீரும், தென்கரை பாசன வாய்க்காலில் 400 கன அடி நீரும், கட்டளைமேட்டு வாய்க்காலில் 200 கன அடி நீரும், புதிய கட்டளைமேட்டு வாய்க்காலில் 250 கன அடி நீரும் விவசாயத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில நாட்களாகவே தண்ணீர் வரத்து அதிகமாக வருகிறது.
பஞ்சப்பட்டி, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் +2 பயிலும் தினேஷ் என்ற மாணவன் காற்று உந்து விசையில் இயங்கும் *Reusable Rocket Model* செய்து, காற்று அழுத்தம் கொடுத்து இயக்கினார். 20 அடி உயரம் சென்று ராக்கெட் உந்து விசையில் செயற்கைக்கோள் ராக்கெட்டில் இருந்து பிரிந்தது. பாராசூட் உதவியுடன் ராக்கெட் மாதிரியை மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் அற்புதமான செயல்விளக்கத்தை செய்துகாட்டினார்.
➤குளித்தலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை அமைச்சர் செந்தில் பாலாஜி துவங்கி வைத்தார். ➤ஜன.19 ஆம் தேதி கரூரில் குதிரை பந்தயம் நடைபெறவுள்ளது: வெல்பவருக்கு ரூ.1.5லட்சம் பரிசு
➤ MGR-பிறந்தநாளை முன்னிட்டு நாளை அதிமுக சார்பில் மரியாதை ➤தென்கொரிய கணவருடன் பொங்கலை கொண்டாடிய கரூர் பெண் ➤ஆர்.டி மலை ஜல்லிக்கட்டு போட்டியில், காளை முட்டி பார்வையாளர் ஒருவர் உயிரிழப்பு.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆர்.டி மலை ஜல்லிக்கட்டு போட்டியில், காளை முட்டி பார்வையாளர் ஒருவர் உயிரிழநதுள்ளர். காளை முட்டியதில் பலத்த காயமடைந்த, குழுமணி அருகே சமுத்திரத்தை சேர்ந்த குழந்தைவேலு (67) என்பவர், சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்த நாளையொட்டி கரூர் மாவட்ட திமுக சார்பில் ஜன 19 ஞாயிறு மாபெரும் குதிரை எல்கை பந்தயம் நடைபெறுகிறது. பெரிய குதிரைக்கு 10மைல் தூரம், சிறிய குதிரைக்கு 8 மைல், புதிய குதிரைக்கு 6மைல் தூரமாகும். மொத்த பரிசாக ரூ.1.80 லட்சம். போட்டிகளை முத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்து பரிசுகளும் வழங்குகிறார். போட்டியில் பங்கேற்க முன்பதிவிற்கு 99445 28767
மாயனூர் கதவணைக்கு இன்றைய நிலவரப்படி 5359 கனஅடி நீர் காவிரியில் வந்து கொண்டிருக்கிறது. காவிரி ஆற்றில் 4509 கன அடி நீரும், தென்கரை பாசன வாய்க்காலில் 400 கன அடி நீரும், கட்டளைமேட்டு வாய்க்காலில் 200 கன அடி நீரும், புதிய கட்டளைமேட்டு வாய்க்காலில் 250 கன அடி நீரும் விவசாயத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில நாட்களாகவே தண்ணீர் வரத்து அதிகமாக வருகிறது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆர்.டி மலையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று காலை 7 மணி முதல் போட்டியை தொடங்கி வைக்கிறார். இந்த போட்டியில் சிறந்த காளையாக முதலிடம் பெறும் காளை உரிமையாளருக்கு ஒரு கார் மற்றும் இரண்டாவது சிறந்த காளை உரிமையாளருக்கு ஒரு பைக் தனது சொந்த நிதியிலிருந்து பரிசாக வழங்க உள்ளதாக செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
கரூர் ஜவஹர் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் கால்நடை அலங்கார பொருட்கள், ரூ 100 முதல், 500 வரை விற்பனை செய்யப்பட்டு விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இதில் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக, மாட்டு பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மேலும் கால்நடைகளை குளிப்பாட்டி, பல வண்ணங்களில் மூக்காணங்கயிறு, தும்பு கயிறு, மணி சங்கு, திரு காணி, சாட்டைகள், கழுத்து மணி ஆகிய விற்பனை செய்யப்படுகிறது.
உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் உற்சாகத்துடன், உவகையுடன் கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில், நம் மக்களின் வாழ்வில் நலமும் வளமும் பெருகி, அமைதியும் இன்பமும் நிலைக்கட்டும் என்று வாழ்த்தி, எனது அன்பிற்குரிய மக்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.
கரூரில் தன்மானத் தமிழர் திருநாளாம், வருடம் முழுக்க தனக்கு ஈடு கொடுத்து உழைத்திடும் மாடுகளுக்கும், வாழ்நாள் முழுக்க சூடு கொடுத்து காத்திடும் உதயசூரியனுக்கும் நன்றி தெரிவிக்க தமிழர்களின் கொண்டாடும் தவத்திருநாளாம், செங்கரும்பாய் தித்திக்க, அனைவரின் உள்ளத்திலும் மகிழ்ச்சி பொங்கட்டும், அனைவரின் இல்லங்களிலும் இன்பம் பெருகட்டும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.