India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மாவட்டத்தில் வாழும் சிறுபான்மையின முஸ்லீம் மாணவ-மாணவியர்களுக்கு வெளிநாட்டில் முதுகலைப்படிப்பு பயில்வதற்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.www.bcmbcw.tn.gov.in/welfschemes_minorities.htm என்ற இணையதளத்தில் 31.10.2025 தேதிக்குள் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலச மஹால் பாரம்பரிய கட்டிடம் முதல் தளம் சேப்பாக்கம், சென்னை-600 005. என்ற விலாசத்தில் அனுப்புமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.

கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா உத்தரவின் பெயரில் கரூர் மாவட்ட காவல்துறை சார்பாக வாகனத்தில் அதிவேகமாக சென்றால் உயிரை இலக்க நேரிடும் என்ற புகைப்படத்தை சமூக வலைதளங்களில் இன்று வெளியிட்டனர். மேலும் கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் விபத்து நடந்தாலும் உடனடியாக 9498100780 (100) அல்லது (108) இந்த எண்ணிற்கு அழைக்கும் என அறிவிப்பு செய்துள்ளனர்.

கரூர் மக்களே தமிழக அரசின் அன்பு கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தில் ஆதவரற்ற குழந்தைகளுக்கு ரூ.2000 வழங்கப்படுகிறது. தாய், தந்தை பிரிந்து வாழும் குழந்தைகளுக்கு 18வயது வரை வழங்கப்படுகிறது. இதற்கு குடும்ப அட்டை, ஆதார், வங்கி கணக்கு உள்ளிட்ட நகலுடன் உங்களுடன் ஸ்டாலின் முகாம், கலெக்டர் ஆபீஸ், குழந்தைகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<

கரூர் மக்களே, தமிழில் எழுத படிக்க தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர், இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<

கரூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (19ம் தேதி) இன்று மாற்றுத்திறனாளி மூன்று சக்கர ஸ்கூட்டருக்கு நேர்முகத் தேர்வு தேவையான ஆவணம் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, யூடிஐடி கார்டு, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, இரண்டு புகைப்படம் நேர்முகத் தேர்வு எடுத்துச் செல்லவும். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை முகாம் என மாற்றுத்திறனாளித்துறை நல அலுவலர் அறிவித்துள்ளார்.

கரூர் மக்களே.., மத்திய அரசின் மின்னனு கழகமான ECIL நிறுவனத்தில் காலியாக உள்ள 160 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E, B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.31,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே<

கரூர், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட லாலாப்பேட்டை, கருப்பத்தூர், கள்ளப்பள்ளி, சிந்தலவாடி பகுதிகளில் விளைந்த வாழைத்தார் அறுவடை செய்யப்பட்டு, லாலாப்பேட்டை கமிஷன் மண்டிகளில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. இன்று பூவன் வாழைத்தார் ரூ.250-க்கும், ரஸ்தாளி ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.150-க்கும் ஏலம் போனது. இந்த விலை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் வெண்ணைமலை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று (செப்.19) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 25-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு, 200க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப உள்ளன. 10 முதல் பட்டப்படிப்பு வரை இந்த முகாமில் பங்கேற்கலாம். காலை 10மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும். இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு: 04324 223555.

கரூர் மக்களே நீங்கள் ஆதார் கார்ட் திருத்தங்கள் மற்றும் அப்டேட்களுக்கு ஈ-சேவை, ஆதார் சேவை, தபால் சேவை மையங்களை நாடிய காலம் மலையேறிவிட்டது. இசேவை மையங்களுக்கு நேரடியாக செல்லாமல் பெயர், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்டவைகளை மாற்ற முடியும். ஆதார் விவரங்களை வீட்டில் இருந்தே திருத்த m-Aadhaar என்ற மொபைல் செயலியை<

குளித்தலை ராஜேந்திரம் வாலாந்தூரைச் சேர்ந்த சண்முகவேல் மற்றும் அவரது நண்பர் கார்த்திகேயன் ஆகியோர் பைபாஸ் சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்த சென்ற போது, ஏற்பட்டவாய் தகராறில், திம்மாச்சிபுரத்தைச் சேர்ந்த கிருபானந்தன் உள்ளிட்ட 5 பேர் கும்பல், இருவரையும் பீர் பாட்டில். இரும்பு கம்பியால் தாக்கியதில், இருவரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து 5 பேரையும் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.