Karur

News December 24, 2024

கரூர் தலைப்புச் செய்திகள்

image

1.கரூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் பெரியார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
2.காற்றாலை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
3.அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் – கரூர் எம்பி பேட்டி
4.உலக சாதனை: மாணவர் கட்சி தலைவரிடம் வாழ்த்து
5.கரூரில் பாமக கண்டன ஆர்ப்பாட்டம்

News December 24, 2024

உலக சாதனை: மாணவர் கட்சி தலைவரிடம் வாழ்த்து

image

கரூர் தனியார் பொறியியல் கல்லூரியில் பயில்பவர் குரு பிரசாத். இவர் பொன்னர் சங்கர் வாழ்வியலை 18 மணி நேரம் இடைவெளியின்றி தனி நபராக நடித்துக் காட்டி உலக சாதனை படைத்துள்ளார். இதற்காக அவருக்கு உலக சாதனை நிகழ்வு சான்றிதழ் வழங்கப்பட்டது. அரவக்குறிச்சி வந்த கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன், துணைப்பொதுச் செயலாளர் நடராஜ் ஆகியோரிடம் மாணவர் குரு பிரசாத் வாழ்த்து பெற்றார்.

News December 24, 2024

கரூர் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி

image

புகழூரில் மாவட்ட அளவில் மாணவ- மாணவிகளுக்கான கராத்தே போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 14 வயதுக்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விளையாடி போட்டியில் வெற்றி பெற்றவர்கள் வருகிற ஜனவரி 4, 5 தேதிகளில் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான கராத்தே போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். மேலும் வெற்றி பெற்றவர்களை கராத்தே சங்கத்தின் தலைவர் கியோஷிசரவணன், செயலாளர் ரெசின் செந்தில்குமார் நேற்று பாராட்டினர்.

News December 24, 2024

கரூரில் வங்கி ஊழியரிடம் செயின் பறிக்க முயற்சி

image

கரூர் அருகே காக்காவாடி பகுதியை சேர்ந்த சிவசாமி, இவரது மனைவி ரேவதி (40) சுக்காலியூர் தனியார் வங்கியில் கிளர்க்காக பணி செய்து வருகிறார். பணி முடிந்து காக்காவாடி சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, கடவூரைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர் அவரது தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றார். சுதாரித்துக்கொண்ட ரேவதி சத்தம் போட்டதால் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 24, 2024

நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றம்

image

தோகைமலை வருவாய் குறுவட்டத்திற்குட்பட்ட கல்லடையை சேர்ந்த சந்தானகுமார் என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்து நீதிமன்ற தீர்ப்புரையின்படி நேற்று கிராமம் புல எண்கள் 438, 439 என வகைப்படுத்தி நில அளவை செய்து அத்து காண்பிக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதில் தாசில்தார் இந்துமதி தலைமையில் வருவாய் துறையினர் குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News December 23, 2024

கரூர் தலைப்புச் செய்திகள்

image

1.தனியார் பள்ளி வேன் சாலையில் கவிழ்ந்து விபத்து
2.காய்ந்து போன கரும்புடன் கலெக்டர் அலுவலகத்தில் மனு
3.மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெற்ற 512 மனுக்கள்
4.நீதிமன்றத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
5.அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலை வெள்ளி விழா

News December 23, 2024

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெற்ற 512 மனுக்கள்

image

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, வங்கிக் கடன்கள், பட்டா மாறுதல், ஜாதி சான்று உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் 512 மனுக்கள் பெற்றனர். இக்கூட்டத்தில் அனைத்து அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

News December 23, 2024

முருங்கையில் கவாத்து அவசியம் : வேளாண் அலுவலர் ஆலோசனை

image

முருங்கை செடியில் நவ., டிச., மாதங்களில் கவாத்து செய்வது அவசியம் எனவும் அதன் நன்மைகள் குறித்து அரவக்குறிச்சி வட்டார வேளாண் அலுவலர் கண்ணன் ஆலோசனை கூறியுள்ளார். கவாத்து என்பது பக்க கிளைகளை வெட்டி ஒழுங்குபடுத்துவது, கவாத்து செய்வதால் புதிய கிளைகள், பூ, மொட்டுகளை துளிர்க்க வைக்கலாம். இதனால் காய்ப்பு தன்மை அதிகரிக்கும். காய்கள் தரம் உயரும். பூ வைத்த பிறகு கவாத்து செய்யக்கூடாது என அவர் கூறியுள்ளார்.

News December 22, 2024

கரூர் தலைப்புச் செய்திகள்

image

1. பசுபதிபாளையம் வகுப்பறை கட்டுமான பணியினை ஆய்வு செய்த ஆணையர்
2.தவெக., சார்பில் பால், முட்டை, ரொட்டி வழங்கல்
3.ஆயுர்மேளா நிகழ்ச்சி 2 நாள் நிகழ்வுகள்
4.ரவுடி கொலை வழக்கில் 4ஆவது குற்றவாளி கைது
5.அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மக்களை சந்திக்கும் எம்.பி.

News December 22, 2024

பாலம்மாள்புரம் கட்டுமானப் பணியை பார்வையிட்ட ஆணையர்

image

கரூர் மாநகராட்சி மண்டலம்-1 பாலம்மாள்புரம் வார்டு-11ல் எஸ் எப் சி – பள்ளி மேம்பாட்டு மானியம் 2024-2025 திட்டத்தின் கீழ் பாலம்மாள்புரம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் நடைபெறும் கட்டுமான பணிகளை இன்று (22/12/2024) கரூர் மாநகராட்சி ஆணையர் சுதா ஆய்வு செய்தார். உடன் கரூர் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!