Karur

News January 22, 2025

நொய்யல் பகுதியில் வாழைத்தார் விலை வீழ்ச்சி 

image

கரூர் மாவட்டம் நொய்யல், தவுட்டுப்பாளையம், நஞ்சை புகலூர், தோட்டக்குறிச்சி பகுதிகளில் அறுவடை செய்யும் வாழைத்தார்கள் தினசரி ஏல மார்க்கெட்டில் விற்க்கப்படுகிறது. பூவன் வாழைத்தார் ரூ.500, ரஸ்தாலி ரூ.400, பச்சை நாடான் ரூ.350, மொந்தன் ஒரு காய் ரூ. 6க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை விட தார் ஒன்றிற்க்கு ரூ.50 முதல் ரூ.100 வரை விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

News January 22, 2025

கரூர் எஸ்பி முக்கிய அறிவிப்பு

image

கரூர் மாவட்டத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்கவும், அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்குவோரின் ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். மேலும் அறையில் தங்குவோரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டால், உரிமையாளர், மேலாளர்கள், காவல்நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என, கரூர் எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

News January 21, 2025

நாளை மக்களுடன் முதல்வன் திட்டம் அமைச்சர் கலந்து கொள்கிறார்

image

நாளை (22.01.2025) காலை 10.00 மணி முதல் வாங்கல் ,சோமுர், காதப்பாறை, மன்மங்கலம், குப்பிச்சிபாளையம் ,கீழ்கண்ட இடங்களில் நடைபெற உள்ள மக்களுடன் முதல்வர் முகாமில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை பெற்று நடவடிக்கை மேற்கொள்ள உள்ளார்கள்.

News January 21, 2025

குளித்தலையில் மாபெரும் அதிமுக பொதுக்கூட்டம்

image

எம்ஜிஆரின் 108வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நாளை (22.01.2025) குளித்தலை, சுங்ககேட் பகுதியில் மாலை 6 மணி முதல் நடைபெற உள்ளது. அதிமுக குளித்தலை நகர கழக செயலாளர் சி.மணிகண்டன் தலைமை தாங்குகின்றார். குளித்தலை நகர மன்ற உறுப்பினர் ஆர். கணேசன் வரவேற்புரை வழங்குகின்றார். நிகழ்ச்சியில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

News January 21, 2025

கரூரில் 157 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

image

கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் வருகிற (26-ந்தேதி குடியரசு தினத்தன்று) மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2025-26ஆம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சித் திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல் சம்பந்தமாக கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கிராம ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் கிராமசபை கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News January 21, 2025

கரூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையத்தில் வரும் 24ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.  25-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, 200-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளனர். மேலும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, முகாமில் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News January 21, 2025

கரூரில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்!

image

கரூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதன்படி இன்று காலை 9 மணி முதல், மாலை வரை, அறவக்குறிச்சி சுற்றுவட்டாரப்பகுதிகள், பொம்மநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, சாந்தைப்பேட்டை, பண்ணைப்பட்டி, புலியூர், மேலப்பாளையம், வடகுபாளையம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News January 20, 2025

 மாற்றுத்திறனாளிக்கான குறைதீர்க்கும் கூட்டம்

image

கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் ஜனவரி 22ம்தேதி புதன் கிழமை அன்று மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெறுகிறது. எனவே மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை மனுவில் குறிப்பிட்டு தக்க ஆதாரங்களுடன் விண்ணப்பங்களை நேரில் அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News January 20, 2025

வாகன பிரச்சாரம் தொடங்கி வைத்த ஆட்சியர்

image

கரூர் உட்பட்ட கலெக்டர் வளாகம் முன்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன பிரச்சார கலை நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து வாகன பிரச்சாரம் கலை நிகழ்ச்சி பஸ் ஸ்டாண்ட், தான்தோன்றி மலை பள்ளி வளாகம் தொடர் பிரச்சாரத்தை செய்தனர். ஏற்பாடுகளை டமண்ட் டிரஸ்ட் கலைச்செல்வி டிரஸ்ட் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

News January 20, 2025

சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் 

image

கரூர் மாவட்டம் மூக்கனாங்குறிச்சி ஊராட்சி கந்தசாரப்பட்டி ரேஷன் கடையில், பெரும்பாலானவர்கள் பொங்கல் பரிசு வாங்கவில்லை ‘இன்னும் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காமல் உள்ளீர்கள் வரும் காலங்களில் அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு தகுதி இல்லாமல் போய்விடும்’ என, வாட்ஸ் ஆப் குரூப்பில் பதிவிடப்பட்டது. இது குறித்து வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேஷ் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்தார்.

error: Content is protected !!