India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர் மாவட்டம் தாந்தோணி கிழக்கு ஒன்றியம் காக்காவாடி ஊராட்சியில் உள்ள மன்ற அலுவலகத்தில் 76வது குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமி சுந்தரி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். உடன் தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகுநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்டத்தில் 76வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கூட்டுறவுத் துறையில் சிறப்பாக பணியாற்றிய துணைப்பதிவாளர் பிச்சைவேலு, கூட்டுறவு சார்பதிவாளர் ஆசைத்தம்பி, கனிமொழி மற்றும் சதீஸ்குமார் ஆகியோர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். உடன் மாவட்ட எஸ் பி பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்ட திட்ட செயலாக்கம் சார்பில இளம் வல்லுனர் பணிக்கு வரும் 31க்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். இதற்கு இளங்கலை பொறியியல், புள்ளியில் அதற்கு இணையான பட்டங்கள் பெற்றிருக்க வேண்டும். மாதம் மதிப்பூதியமாக ரூ.50000 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9445458080, 04324256504 அழைக்கலாம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் (21.01.25 முதல் 25.01.25 )வரை பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான பாரதியார் தின மற்றும் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஜூடோ போட்டி நடைபெற்றது. இதில் கரூர் மாவட்ட கேலோ இந்தியா ஜூடோ பயிற்சி மைய ( KARUR DISTRICT KHELO INDIA JUDO TRAINING CENTRE ) வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டும் மொத்தம் 7 தங்க பதக்கம், 5 வெண்கலம் பதக்கம் வென்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
நாளை (ஜன.26) குடியரசு தினத்தை முன்னிட்டு உங்கள் ஊரில் கிராம சபைக் கூட்டங்கள் மற்றும் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் குடியரசு தின விழா கொடியேற்ற நிகழ்ச்சிகளும், நடைபெற உள்ளன. இந்த நிகழ்வுகளை வே2நியூஸில் பதிவிட்டு, உங்கள் ஊர் செய்திகளை அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள். எப்படி அனுப்புவது என்று தெரியலையா? இந்த லிங்கை க்ளிக் பண்ணுங்க.
குளித்தலை அருகே வடசேரி பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி (50). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகின்றார். இன்று மாலை நாவல் நாயக்கன்பட்டி கிராமத்தில் மின்தடை ஏற்பட்டதாக அங்கிருந்த மின் கம்பத்தில் ஏரி பழுது பார்த்துள்ளார். எதிர்பாராத விதமாக கம்பத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த ரத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே சுப்பிரமணி பலியானார். தோகைமலை போலீசார் விசாரணைமேற்கொண்டனர்.
தேசிய அளவில் நடந்த வீர் கதா 4.0 போட்டியில் கரூர் மாவட்டம் குளித்தலை செயின்ட் டோமினிக் சேவியோ மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி சத்யஸ்ரீ தேர்வு செய்யப்பட்டுள்ளார். வீர தீர செயல்களுக்கான கேலன்ட்ரி விருது பெற்ற மேஜர் சரவணன் பற்றிய கட்டுரை எழுதி தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். குடியரசு தின விழா அணி வகுப்பில் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றுள்ளார்.
இன்று கரூர் மாவட்டத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் தமிழ் மொழியை காக்க தங்கள் இன்னுயிர் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு அவர்களின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி வீரவணக்கம் செலுத்தினார்கள். உடன் எம்ஜிஆர் இளைஞர் செயலாளர் முத்துக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தேசிய அளவில் நடந்த வீர் கதா 4.0 போட்டியில் கரூர் மாவட்டம் குளித்தலை செயின்ட் டோமினிக் சேவியோ மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி சத்யஸ்ரீ தேர்வு செய்யப்பட்டுள்ளார். வீர தீர செயல்களுக்கான கேலன்ட்ரி விருது பெற்ற மேஜர் சரவணன் பற்றிய கட்டுரை எழுதி தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். குடியரசு தின விழா அணி வகுப்பில் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றுள்ளார்.
இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று உயிர்நீத்த நூற்றுக்கணக்கானோரின் தீரத்தை நினைவுகூரும் வகையில் தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, தமிழ் என்பது வெறும் மொழியல்ல, நமது இனத்தின் அடையாளம்.அன்னைத் தமிழை காக்க, தங்கள் இன்னுயிர் ஈந்த தியாகத் தீச்சுடர்களுக்கு எனது வீர வணக்கங்கள். தமிழ் வாழ்க என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.