Karur

News January 4, 2025

ஆதரவற்ற பெண்களுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்க முடிவு

image

விதவை, ஆதரவற்ற பெண்களின் வாழ்வாதாரத்திற்காக மானியத்தில் கோழிக்குஞ்சுகள் வழங்க கால்நடை பராமரிப்பு துறை முன்வந்துள்ளது. நான்கு வார வயது உடைய 40 அசில் இனக் கோழிக்குஞ்சுகளை 50 % சதவீத மானியத்தில் வழங்குகிறது. இதுகுறித்து கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள அந்தந்த கால்நடைத் துறையை அணுகி கூடுதல் விவரங்கள் தெரிந்து கொள்ளலாம்.

News January 4, 2025

கரூரில் EB ஆபிஸ் இடமாற்றம் செஞ்சுருக்காங்க

image

கரூர் மேற்கு மின்வாரிய அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டது குறித்து SE சிவக்குமார் கூறியிருப்பதாவது: கரூர் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் காத்தலும் இயக்கலும், இளமின் பொறியாளர் அலுவலகம் நேற்று முதல் கரூர் ராமானுஜம் நகர் தெற்கு, கதவு எண் 244 என்ற வாடகை கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவை சாலை,காந்திபுரம், வையாபுரி நகர், பாரதி நகர், ராமானுஜம் நகர்,LGB நகர் பகுதிக்கான மின்கட்டணம் செலுத்தலாம்.

News January 4, 2025

மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி துவக்கம்

image

இன்று கரூர் மாவட்டத்தில் திமுக கட்சியின் சார்பில் மாவட்ட அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்காண விளையாட்டு போட்டியை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் நடைபெற்றது. இதில் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமி சுந்தரி மற்றும் மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

News January 4, 2025

கிரிக்கெட் அணிக்கு கரூர் மாணவர் தேர்வு

image

கரூர் ஸ்ரீ விஜயலட்சுமி வித்யாலயா இன்டர்நேஷனல் பள்ளியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவர் எஸ்.இலக்ஷித். இவர் மாவட்ட, மாநில அளவில் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் மூலம் கரூர் மாவட்டத்திலிருந்து 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தேர்வு செய்யப்பட்டார். இதில் நிர்வாகக் குழு தலைவர் சிவசுப்பிரமணியம் மற்றும் முதல்வர் முனைவர் கார்த்திகா லட்சுமி ஆகியோர் நேற்று பாராட்டினார்கள்.

News January 3, 2025

கரூர் எம்.பி., நாளை நன்றி தெரிவிக்கும் பகுதிகள்

image

இந்தியா கூட்டணி-காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ. ஜோதிமணி எம்.பி. இரண்டாவது முறையாக மகத்தான வெற்றியடையச் செய்த கரூர் நாடாளுமன்ற தொகுதி மக்களின் பேரன்பிற்கும், பேராதரவிற்கும்நன்றி தெரிவிக்கும் விதமாய் கரூர் சட்டமன்ற தொகுதி, கரூர் மாநகராட்சி. வார்டு 11-48 கோடங்கிபட்டி முதல் ராமானுஜர் நகர் வரை நாளை அவர் நன்றி தெரிவிக்கிறார்.

News January 3, 2025

மாவட்ட ஆட்சியர் நாளை கலந்து கொள்ளும் நிகழ்ச்சி

image

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நாளை (04.01.2025) காலை 07.35 மணி அளவில் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டிமாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில்சைக்கிள் போட்டியினை தொடங்கி வைக்க உள்ளார்கள். விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

News January 3, 2025

யானை தந்தம் கடத்திய 5 பேர் கைது

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வை.புதூர் பகுதியில் யானைத்தந்தம் கடத்தி வந்த ஐந்து பேர் கரூர், திருச்சி மற்றும் மதுரை வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இதில் 1.840 கிலோ கிராம் எடையுள்ள உடைந்த ஒரு யானைத் தந்தம் பறிமுதல் செய்தனர். மேலும் பெருமாள், நாகராஜ், ராஜா, நடராஜன் மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட ஐந்து பேரை இன்று கைது செய்து கரூர் சிறையில் அடைத்தனர்.

News January 3, 2025

வேலு நாச்சியார் பிறந்ததினம்: அமைச்சர் வாழ்த்து

image

ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதமேந்தி போராடிய முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்ததினம் இன்று அஞ்சாத துணிவும், அடங்காத நெஞ்சுரமும் கொண்டு ஆங்கிலேயரை வென்று நல்லறத்துடன் சிவகங்கைச் சீமையை ஆட்சி செய்த அவரின் வீரத்தையும் தீரத்தையும் போற்றி வணங்குவோம் என மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்தி வி.செந்தில்பாலாஜி வாழ்த்து கூறியுள்ளார்.

News January 3, 2025

கரூர் மாவட்டத்தில் 9,391 மி.மீ. மழை

image

கரூர் மாவட்டத்தில் 2024 ஆண்டில் மொத்தம் 9,391 மி.மீ மழை பெய்துள்ளது. சராசரியாக 138 மி.மீ பெய்துள்ளது. கரூரில் 893 மி.மீ, அரவக்குறிச்சியில் 753.60 மி.மீ, அணைப்பாளையத்தில் 881.40 மி.மீ, க.பரமத்தியில் 958 மி.மீ, குளித்தலை 701 மி.மீ, தோகைமலையில் 729.40 மி.மீ, மாயனூரில் 966 மி.மீ, கடவூரில் 496 மி.மீ, பாலவிடுதியில் 577 மி.மீ, மைலம்பட்டியில் 432 மி.மீ, பஞ்சப்பட்டியில் 1,079 மி.மீ என பெய்துள்ளது.

News January 3, 2025

கட்டபொம்மன் பிறந்த நாள்: முன்னாள் அமைச்சர் வாழ்த்து

image

கரூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளை போற்றுவோம் என்று புகழாரம் சூட்டி சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். மேலும் வெள்ளையனே வெளியேறு என்ற முழக்கத்தை முழங்கிய வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு என் புகழ் வணக்கம் என்று கூறினார்.

error: Content is protected !!