Karur

News September 29, 2025

கரூர்: BE பட்டதாரிகளுக்கு சூப்பர் சம்பளம்!

image

கரூர் பட்டதாரிகளே…, மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு கழகத்தில் காலியாக உள்ள ’Trainee Officer’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.40,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்புவர்கள் <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. விண்ணப்பிக்க கடைசி நாள் அக்.17ஆம் தேதி. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 29, 2025

கரூரில் மரண எண்ணிக்கை 41ஆக உயர்வு!

image

கரூர் மாவட்டத்தை சேர்ந்த சுகுணா (65) என்ற பெண்மணி தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக பெண்கள் 18 பேர், ஆண்கள் 13, சிறுமிகள் 5, சிறுவர்கள் 5 என பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது

News September 29, 2025

கரூரில் 40 பேர் பலி காரணம் இதுதான்!

image

கரூரில் விஜய் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது.தற்போது உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறாய்வு செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.இது குறித்து தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர் ராஜகுமாரி கூறுகையில் உடற்கூறாய்வு அறிக்கையில்,பெரும்பாலானோர் இறப்பிற்கு முக்கியக் காரணம் மூச்சுத்திணறல் என உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

News September 29, 2025

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு: கரூரில் 7,369 பேர் பங்கேற்பு

image

கரூர் மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 28, 2025) நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 முதல்நிலை எழுத்துத் தேர்வை 7,369 பேர் எழுதினர். கரூர் மாவட்ட நிர்வாகத்தால் இதற்காக அமைக்கப்பட்டு இருந்த 27 தேர்வு மையங்களில் இந்தத் தேர்வு நடைபெற்றது. தேர்வு அமைதியாகவும், எந்தவித சிரமும் இன்றி நடந்ததாக மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்தார்.

News September 28, 2025

கரூர்: ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை!

image

கரூர், வேலுச்சாமிபுரத்தில் நடந்த துயரச் சம்பவம் குறித்து, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணையத்தின் விசாரணை இன்று தொடங்கியது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஆணையத்தின் தலைவராக இருந்த அருணா ஜெகதீசன், அப்பகுதி மக்களிடமும், காவல்துறை அதிகாரிகளிடமும் என்ன நடந்தது என்று விசாரணை மேற்கொள்கிறார்.

News September 28, 2025

கரூரில் பலியான இடத்தில் வனத்துறையினா் ஆய்வு

image

கரூரில் விஜய் பரப்புரையின்போது உயிரிழப்புகள் ஏற்பட்ட இடத்தில், வனத்துறையினர் இன்று ஆய்வு செய்தனர். மரத்தில் இருந்து முறிந்து விழுந்த கிளைகளையும், மரங்களையும் டேப் மற்றும் பெயிண்ட் மூலம் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். கிளைகள் எவ்வளவு உயரத்தில் இருந்து விழுந்தன என்பதைக் கணக்கிட்டு, விபத்துக்கான காரணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.

News September 28, 2025

குழந்தை இறப்பு சசிகலா கண்ணீருடன் ஆறுதல்!

image

கரூர், வேலுச்சாமிபுரம் இந்திரா நகரைச் சேர்ந்த வாய் பேச முடியாத, காது கேளாத விமல் – மாதேஸ்வரி தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை குரு விஷ்ணு, நேற்று த.வெ.க. கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறி உயிரிழந்தது. முன்னாள் முதல்வர் வி.கே. சசிகலா இன்று குழந்தையின் வீட்டிற்கு நேரில் சென்று, கண்ணீருடன் அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

News September 28, 2025

2குழந்தைகள் பலி சலவைத் தொழிலாளர்கள் கடையடைப்பு

image

கரூர், தமிழக வெற்றிக் கழகம் கூட்ட நெரிசலில் சலவைத் தொழில் செய்யும் குடும்பங்களைச் சேர்ந்த 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த சுகன்யா மற்றும் பசுபதிபாளையத்தைச் சேர்ந்த ரித்திக் என இருவரும் பலியாகினர். இதற்கு இரங்கல் தெரிவித்து, கரூர் மாவட்ட சலவைத் தொழிலாளர்கள் இன்று ஒருநாள் கடையடைப்பு நடத்தினர்.

News September 28, 2025

கரூரில் சிஎம்., மு.க ஸ்டாலின் ஆலோசனை கூட்டம்

image

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இன்று (செப்.28) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவம் குறித்து ஆய்வு செய்தார். மேலும், காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் தேவையான உதவிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள் பங்கேற்றனர்.

News September 28, 2025

BREAKING: கரூர் துயரம்.. அண்ணாமலை குற்றச்சாட்டு!

image

“கரூரில் நடந்த துயர் சம்பவத்தில் 40 அப்பாவி உயிர்களை பறிகொடுத்துள்ளோம். உடனடியாக சிபிஐ விசாரணை தேவை. விஜய் பரப்புரை சம்பவத்தில் பல குளறுபடிகள் நடந்துள்ளது. சதிச்செயல் நடந்துள்ளதா என விசாரிக்க வேண்டும். விஜய் தான் முதல் குற்றவாளி என்பதை ஏற்றுக்கொள்ளமாட்டேன். ஒரு கூட்டத்துக்கு அனுமதி கொடுத்தால் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசின் கடமை”என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.

error: Content is protected !!