India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர் என்ற பெயர், தெய்வீக இசை திருவிழாவை பாடிய 9 பக்தர்களில் ஒருவரான கருவூர் தேவர் பெயரில் இருந்து பெறப்பட்டிருக்கலாம். இந்து புராணங்களின்படி, பிரம்மா கரூரில்தான் தனது படைப்பின் வேலையைத் தொடங்கினார் என்றும், கரூர் “புனிதமான பசு இருக்கும் இடம்” என்று குறிப்பிடப்படுகிறது. முதலில் கோவை, பின்னர் திருச்சி மாவட்டமாக இருந்தது. 1995 செப்.30 அன்று, திருச்சியிலிருந்து கரூர் மாவட்டம் பிரிக்கப்பட்டது.
மாயனூர் கதவணைக்கு இன்றைய நிலவரப்படி 5359 கனஅடி நீர் காவிரியில் வந்து கொண்டிருக்கிறது. காவிரி ஆற்றில் 4509 கன அடி நீரும், தென்கரை பாசன வாய்க்காலில் 400 கன அடி நீரும், கட்டளைமேட்டு வாய்க்காலில் 200 கன அடி நீரும், புதிய கட்டளைமேட்டு வாய்க்காலில் 250 கன அடி நீரும் விவசாயத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில நாட்களாகவே தண்ணீர் வரத்து அதிகமாக வருகிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் திருச்சி மண்டல செயலாளர் ராஜா குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில்,.இவரது கூட்டாளி கடவூர் இடையபட்டியைச் சார்ந்த கார்த்திகேயன் என்பவரை பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட வந்த நிலையில் வழிப்பறி வழக்கில் இன்று கரூர் மாவட்ட காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இதனால் கட்சி நிர்வாகிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் கலைஞர் அறிவாலயத்தில் கரூர் மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் மாநில வழக்கறிஞர் மாநாட்டில் கலந்துகொள்வது குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி கலந்துகொண்டார். மேலும் இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள், செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 48வது பிறந்த தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் மற்றும் முப்பெரும் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்பாட்டில் மாபெரும் விளையாட்டுப் போட்டிகள் கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கரூர் மாவட்டத்தில் ஆர்டிஓ தலைமையில் மாதம் ஒருமுறை மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம் 2வது செவ்வாய்க்கிழமை குளித்தலை சப் கலெக்டர் அலுவலகத்திலும், மாதத்தில் 4ஆம் புதன்கிழமை கரூர் ஆடிஓ அலுவலகத்திலும் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி வரும் 22ஆம் தேதி கரூர் ஆர்டிஓ அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெறும் என கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
அரவக்குறிச்சி காவல் நிலைய சரகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேவல் சண்டை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என சமூக வலைதளங்களில் பொய்யான தகவல் பகிரப்பட்டுவருகிறது. இவ்வாறு பொய்யான தகவல் பரப்புவோரின் மீதும் தடையை மீறி சேவல் சண்டை நடத்துபவரின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா எச்சரித்துள்ளார்கள்.
கலைஞர் கைவினை திட்டத்தின் கீழ் மானியத்துடன் 3 லட்சம் கடன் பெறக்கூடிய 25க்கும் மேற்பட்ட வணிகத்திற்கு பஞ்சப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் இ சேவை மற்றும் பொது சேவை மையங்களில் பதிவு செய்து வருகின்றனர். மரவேலைப்பாடு, சிகை அலங்காரம், நகை, கட்டிட வேலை, சிற்பம், மண்பாண்ட வேலைகள், தையல் என 25-க்கும் மேற்பட்ட வணிகம் செய்வோர் ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.
லால் பகதூர் சாஸ்திரி நினைவு தினமான இன்று கரூர் எம்பி ஜோதிமணி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :சுதந்திரப் போராட்ட தியாகி ஜெய் ஜவான், ஜெய் கிஷான் என்று முழங்கிய விவசாயிகளின் பிரதமர். எளிமை ,நேர்மையின் சின்னம். முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி எனக் குறிப்பிட்டுள்ளார்.
கரூர் கலெக்டர் தகவல்: படித்து முடித்து மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்து வேலையின்றி 5 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள இளைஞர்களுக்கு 3 ஆண்டு காலத்திற்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதன் கீழ் பயன்பெற குறிப்பிட்ட கல்வித் தகுதிகளுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடர்ச்சியாக பதிவை புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும். மேற்கண்ட தகுதி உடையோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.