Karur

News January 24, 2025

மக்களுடன் முதல்வர் திட்டம்: அமைச்சர் பங்கேற்பு

image

கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் இன்று மக்களுடன் முதல்வர் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி பில்லாபாளையம், மாவத்தூர், பால விடுதி, சந்துவார் பட்டி, கடவூர், ஆகிய பகுதிகளில் காலை 10.00 மணி நடைபெற இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்றார்.

News January 24, 2025

அனுமதியின்றி கருச்சிதைவு மாத்திரை விற்பனை: வலைவீச்சு

image

தோகைமலை நாகனூரைச் சேர்ந்த கனகவல்லி வயிற்று வலியால் திருச்சியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள் டாக்டரின் ஆலோசனையின்றி கருச்சிதைவு மாத்திரை வழங்கப்பட்டு கருச்சிதைவு ஏற்பட்டது தெரியவந்தது. மருத்துவ குழுவினர் ஆய்வு செய்ததில், மருந்து கடை பணியாளர்கள் அனுமதியின்றி கருச்சிதைவு மாத்திரை வழங்கியது தெரியவந்தது. தோகைமலை போலீசார் வழக்கு பதிந்து மாத்திரை வழங்கியோரை தேடிவருகின்றனர்.

News January 24, 2025

கரூர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை

image

கரூர் உழவர் சந்தையில் இன்றைய (ஜன.24) காய்கறி விலை நிலவரம்: தக்காளி ரூ.24, கத்தரி ரூ.20, வெங்காயம் ரூ.50, பச்சை மிளகாய் ரூ.40, இஞ்சி ரூ.50, சுரைக்காய் ரூ.15, வெண்டை ரூ.40, பச்சை அவரை ரூ.50, பீன்ஸ் ரூ.50, கேரட் ரூ.60, புடலங்காய் ரூ.40, உருளைக்கிழங்கு ரூ.50, முள்ளங்கி ரூ.40, பீர்க்கங்காய் ரூ.60, முட்டைக்கோஸ் ரூ.40, புதினா ரூ.60, கொத்தமல்லி ரூ.40, கருவேப்பிலை ரூ.100-க்கு விற்பனை ஆகிறது.

News January 24, 2025

வழக்குகளை கண்டு அஞ்ச மாட்டோம்: முன்னாள் அமைச்சர்

image

புகழுரை அடுத்த வேலாயுதம்பாளையத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக Ex அமைச்சர் M.R.விஜயபாஸ்கர் நேற்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,  கரூர் மாவட்டத்தில் அதிமுகவினர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகிறார்கள் என்பதை கண்டு அதிமுகவினர் அஞ்சமாட்டோம் என்றார். புகழூர் கதவணை அதிமுக ஆட்சி அமைந்தவுடன் திறக்கப்படும் என தெரிவித்தார்.

News January 23, 2025

“நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடு” போஸ்டரால் பரபரப்பு

image

குளித்தலை கடம்பவனீஸ்வரர் கோவில் சுற்றி தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு சாலை அமைத்திட வேண்டுமென கடம்பர் கோவில் ஊர் பொதுமக்கள், பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக அறநிலையத்துறை நிர்வாகம் மற்றும் குளித்தலை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாநகர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. 

News January 23, 2025

கரூரில் திமுக நிர்வாகி அதிமுகவில் ஐக்கியம்

image

இன்று கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகர் மேற்கு பகுதி 27 வது வட்டத்தை சார்ந்த திமுக கட்சியைச் சேர்ந்த செக்கர் மகாலிங்கம் அக்கட்சியிலிருந்து விலகி மாநகர் மேற்கு பகுதி செயலாளர் சக்திவேல் தலைமையில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுக கட்சியில் தங்களை அடிப்படை உறுப்பினராக இணைத்து கொண்டனர். உடன் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

News January 23, 2025

ஆத்துப்பாளையம் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு

image

கரூர் மாவட்டம் புகழூர் தாலுகா நொய்யல் ஆத்துப்பாளையம் அணையில் இருந்து நொய்யல் கால்வாய்க்கு உட்பட்ட பாசன நிலங்களுக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் பிப்ரவரி 28-ந் தேதி வரை 196 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன்மூலம் புகழூர், மண்மங்கலம் தாலுகாவில் உள்ள 19 ஆயிரத்து 480 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

News January 23, 2025

கரூர் மாவட்டத்தில் ரேஷன் குறைதீர் கூட்டம்

image

கரூர் மாவட்டத்தில் வரும் 25ம் தேதி காலை 10:00 முதல், 1:00 மணி வரை அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகளூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் ஆகிய பகுதிகளில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் ரேஷன் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. பொது வினியோக திட்டத்தில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், புதிய ரேஷன் கோருதல், ஆகியவை குறித்து தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 22, 2025

கரூர் போலீசார் முக்கிய அறிவிப்பு 

image

கரூர் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கவும், அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, மாவட்டத்தில் உள்ள தனியார் விடுதிகளில், அறை எடுத்து தங்குவோரின் ஆவணங்களை சரிபார்க்க வேண்டும், தங்குவோரின் நடவடிக்கையில், சந்தேகம் ஏற்பட்டால் உரிமையாளர் அல்லது மேலாளர்கள், போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் அளிக்க வேண்டும் மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

News January 22, 2025

நொய்யல் பகுதியில் வாழைத்தார் விலை வீழ்ச்சி 

image

கரூர் மாவட்டம் நொய்யல், தவுட்டுப்பாளையம், நஞ்சை புகலூர், தோட்டக்குறிச்சி பகுதிகளில் அறுவடை செய்யும் வாழைத்தார்கள் தினசரி ஏல மார்க்கெட்டில் விற்க்கப்படுகிறது. பூவன் வாழைத்தார் ரூ.500, ரஸ்தாலி ரூ.400, பச்சை நாடான் ரூ.350, மொந்தன் ஒரு காய் ரூ. 6க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை விட தார் ஒன்றிற்க்கு ரூ.50 முதல் ரூ.100 வரை விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

error: Content is protected !!