India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா காணியாளம்பட்டி பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் மக்கள் தொடர்பு திட்ட நாள் முகாம் நிறைவு விழா நாளை நடைபெறுகிறது. முகாமில் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு, அவர்களது துறை சார்பான நலத்திட்ட உதவிகள் பற்றி, பொதுமக்களிடம் கூறுவர். பின், மருத்துவ முகாம், அரசுத் துறைகள் சார்பில் கண்காட்சி நடைபெறும் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
கரூர் வைஸ்யா வங்கியில் காலியாகவுள்ள பல்வேறு Relationship Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். ஊதியமாக மாதம் ரூ.30,000/- வழங்கப்படும். விண்ணபிக்க <
செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்யக் கோரி வித்யாகுமார் என்பவர் உச்சநீதிமன்றம் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்,”அமைச்சராக தொடர விரும்புகிறீர்களா? என்பதை தெரிவிக்க கூறியிருந்தும் பதில் கூறாதது ஏற்புடையதல்ல;10 நாட்களுக்குள் செந்தில் பாலாஜி பதிலளிக்க வேண்டும். மேற்கொண்டு கால அவகாசம் வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளனர்.
கரூர் மாவட்டம், தென்னிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு விவசாய கூலித் தொழிலாளி பொன்னம்மாள் என்கிற தனலட்சுமி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த தென்னிலை போலீசார் நடராஜ் என்பவர் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளை நடைபெற்று வந்தநிலையில் நடராஜ் என்பவருக்கு 5 வருடம் சிறை தண்டனையும், மற்றும் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கரூர்,அரவக்குறிச்சி மற்றும் குளித்தலை கிளைகளில் உள்ள பழைய நகரப் பேருந்துகளுக்கு பதிலாக 7 புதிய பேரூந்துகளை கரூர்-கரிக்காலி, கரூர்-கோட்டநத்தம், கரூர்-மாணிக்கபும், கரூர்-கூனம்பட்டி, கரூர்-மூலனூர், குளித்தலை-நெய்தலூர் காலணி, குளித்தலை-தோகைமலை ஆகிய வழித்தடங்களுக்கான பேருந்துகளை, கலெக்டர் தங்கவேல் தலைமையில், அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கரூர் மாவட்ட சுகாதார துறையின் கீழ் சுகாதாரம், ஆரோக்கிய திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் 16 பணியிடங்கள் நேர்முக தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க <
கரூர் மணல்மேடு அருகே ரெங்கம்பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (41). இவர் கடந்த 22 ஆம் தேதி ஆட்டையம்பரப்பு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னாள் சென்ற டிராக்டர் டிப்பர் திடீரென பிரேக் போட்டதில் பின்னால் பைக் மோதி சிவக்குமார் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவரின் சகோதரி சரஸ்வதி புகாரின் பேரில் தாந்தோணிமலை போலீசார் நேற்று வழக்குபதிவு.
கரூரில் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள 16 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 8th, B.Com, B.Sc, BA, Diploma, ITI, M.Sc, MA, MBBS, Nursing, PG Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை வரை வழங்கப்படும். விண்ணப்பிங்க இங்கு <
▶️அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் ▶️அருள்மிகு மாரியம்மன் கோயில்▶️அருள்மிகு கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில், தாந்தோணிமலை▶️வெண்ணெய்மலை முருகன் கோயில்▶️பொன்னணியாறு அணை▶️மாயனூர் கதவணை▶️ திருக்காம்புலியூர் அம்மா பூங்கா▶️அய்யர்மலை ▶️கரூரின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை அறிந்து கொள்ள கரூர் அரசு அருங்காட்சியகம் . இதை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி ஒரு சின்ன ட்ரிப் பிளான் பண்ணுங்க.
தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர்,நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதில் கரூரில் மட்டும் 48 ஓட்டுநர், நடத்துநர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம். இங்கு <
Sorry, no posts matched your criteria.