India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி பேசும் போது தமிழ்நாடு முழுவதும்100 அமுதம் அங்காடிகள் சீரமைக்கும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1500 வரை சேமிப்பு ஏற்படும் என்று தகவல் அளித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் 100 நாட்கள் காசநோய் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகின்றது. இதன் அடிப்படையில் நிக் ஷய் திட்டத்தின் கீழ் காசநோய் நோயாளிகளுக்கான மாதாந்திர ஊட்டச்சத்து ஆதரவு ரூ.500 -லிருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊட்டச்சத்து ஆதரவு கரூர் மாவட்டத்தில் உள்ள காசநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில், ஜவுளி தொழில் முனைவோர்களுக்கு தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் மூலமாக, கோவையில் உள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக் கழகத்தில், தொழில்நுட்ப ஜவுளிகள் தொடர்பான டெக்ஸ்டைல்ஸ், அக்ரோ ஜியோ மொபைல் டெக்ஸ்டைல்ஸ் ஆகிய பிரிவுகளில் குறுகிய கால பயிற்சி 4 நாட்கள் நடைபெறுகிறது. மேலும் மண்டல துணை இயக்குனர் தான்தோன்றிமலை முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் (04324 298588) என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
கரூர் உழவர் சந்தையில் இன்றைய (ஜன.28) காய்கறி விலை நிலவரம்: தக்காளி ரூ.20, கத்தரி ரூ.25, வெங்காயம் ரூ.50, பச்சை மிளகாய் ரூ.40, இஞ்சி ரூ.50, சுரைக்காய் ரூ.15, வெண்டை ரூ.40, பச்சை அவரை ரூ.50, பீன்ஸ் ரூ.50, கேரட் ரூ.55, புடலங்காய் ரூ.40, உருளைக்கிழங்கு ரூ.50, முள்ளங்கி ரூ.40, பீர்க்கங்காய் ரூ.60, முட்டைக்கோஸ் ரூ.40, புதினா ரூ.60, கொத்தமல்லி ரூ.40, கருவேப்பிலை ரூ.90-க்கு விற்பனை ஆகிறது.
நாளை (28.01.2025) காலை 10.30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் உணவு, உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, முத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் பொது விநியோக திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்த உள்ளனர். மதியம் 12.30 மணிக்கு கிருஷ்ணராயபுரம் சிவாயம் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக பெட்ரோல் டீசல் விற்பனை நிலையத்தை திறந்து வைக்க உள்ளார்கள்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நாளை (28.01.2025) காலை 09.30 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் மீ. தங்கவேல் அவர்களின் தலைமையில் போதைப் எதிரான விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைக்க உள்ளார்கள். அதுசமயம் அது சமயம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில்,மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் எதிர்வரும் 30.01.2025 ஆம் தேதியன்று பிற்பகல் 4.00 மணியளவில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொண்டு எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல்,தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில்,மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் எதிர்வரும் 30.01.2025 ஆம் தேதியன்று பிற்பகல் 4.00 மணியளவில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொண்டு எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல்,தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் நாளை (ஜன.28) காலை 9 முதல் மாலை 5 மணி வரை பின்வரும் மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவை:
1) நச்சலூர் துணை மின் நிலையம்
2) வல்லம் துணை மின் நிலையம்
3) பணிக்கம்பட்டி துணை மின் நிலையம்
4) பாலவிடுதி துணை மின் நிலையம்.
மக்களே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
குளித்தலை அடுத்த அய்யர்மலையில் ரெத்தின கிரீஸ்வரர் கோவில் உள்ளது. 1017 செங்குத்தான படிகளைக் கொண்ட இக்கோவிலில், முதியோர், மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக, பொதுமக்கள் பக்களிப்பு தொகையுடன் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்த அய்யர் மலை, ரோப் கார் மாதாந்திர பணிக்காக இன்றும், நாளையும் செயல்படாது என கோவில் அலுவலர் தங்கராஜீ கூறினர். பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.
Sorry, no posts matched your criteria.