Karur

News February 3, 2025

இருதரப்பினரிடையே தகராறு: 7 பேர் மீது வழக்கு பதிவு

image

கடவூர் தாலுகா சிந்தாமணிப்பட்டி பெட்ரோல் பங்க் முன்பு தங்கராசு மகள் மகிமாவை பார்க்க வந்த தாந்தோணி மலையைச் சேர்ந்த துளசிசுதர்சன், விஷால் ஆகிய இருவரும் கடந்த 24 ஆம் தேதி வந்துள்ளனர். அங்கு இருதரப்பிலும் தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இருதரப்பை சேர்ந்த தங்கராசு மற்றும் துளசி சுதர்சன் அளித்த புகாரின் பேரில் 7 பேர் மீது சிந்தாமணிப்பட்டி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.

News February 3, 2025

கரூரில் திறக்கப்பட்ட பத்திரப் பதிவு அலுவலகம்

image

கரூரில் பழைய அரசு தலைமை மருத்துவமனையைச் சாலையில் செயல்படும் மேலக்கரூர் பத்திரப்பதிவு அலுவலகம் நேற்று திறந்திருந்தது, ஊழியர்கள் மட்டுமே இருந்தனர். மேலும் அலுவலக நுழைவு வாயில் மூடப்பட்டிருந்தது. ஆனால், பத்திரப்பதிவுக்கு பொதுமக்கள் யாரும் வராததால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் இணைப்பதிவாளர் அலுவலகம் பூட்டுப் போடப்பட்டிருந்தது.

News February 2, 2025

குற்றப்பிரிவு- சட்ட ஆலோசகர்கள் விண்ணப்பிக்கலாம்!

image

குற்றப்புலனாய்வுத் துறை சரகங்களுக்கு விருப்பமுள்ள சட்ட ஆலோசகர்கள் விண்ணப்பிக்கலாம்;ஆலோசகர் காலியிடங்கள்
ஒப்பந்த அடிப்படையில் 5 சட்ட ஆலோசகர்களை நியமிக்க குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை திட்டம். விருப்பமுள்ளவர்கள் <>www.tnpolice.gov.in<<>> தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

News February 2, 2025

கரூர் மாவட்ட தவெக செயலாளர்கள் நியமனம்!

image

தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மேற்கு மாவட்ட (கரூர், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகள்) செயலாளராக V.P. மதியழகனையும், மாவட்ட இணைச்செயலாளராக K.R.விக்னேஷ்வரன், பொருளாளராக G.ஆறுமுகம் ஆகியோரை அக்கட்சியின் தலைவர் விஜய் நியமித்துள்ளார். அதேபோல், கரூர் கிழக்கு மாவட்ட (குளித்தலை, கிருஷ்ணராயபுரம்) செயலாளராக G.பாலசுப்ரமணி, இணைச்செயலாளராக A.சதாசிவம் பொருளாளராக P.வினோத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News February 1, 2025

கரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

கரூர் மாவட்டத்தில் உள்ள ,குளித்தலை, இரும்பூதிபட்டி, சின்னதாராபுரம் ஆகிய நான்கு ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மக்காச்சோளத்தை விற்று பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு வேளாண் விற்பனை மற்றும் வேளான் வணிகத் துறை அலுவலகத்தை அணுகலாம் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று தெரிவித்துள்ளார்.

News February 1, 2025

கைநிறைய சம்பளம் – கரூரில் பணி நியமனம்

image

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் நிறுவனத்தில் மருத்துவ அதிகாரி காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. MBBS / MD முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து தகுதியானவர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என கருதப்படுகிறது.விண்ணப்பிக்க இந்த லிங்கை க்ளிக் பண்ணுங்க.

News February 1, 2025

மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

image

கரூர் ராமானுஜம் நகர் தெற்கு பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (55). இவர் அதே பகுதியில் புதிதாக கட்டடம் கட்டி வந்தார். இந்நிலையில் புதிய சுவருக்கு பைப் மூலம் தண்ணீர் அடிக்கும் பணியில் இருந்தார். அப்போது பைப் எதிர்பாராத விதமாக மின் கம்பியில் உரசியது. அதில் மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News January 31, 2025

தேசிய அளவில் சாதனை படைத்த கரூர் மாணவி

image

புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கட்டுரைப் போட்டியில் முதலிடம் பிடித்து ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இடம் பரிசு தொகை ரூ 10000 பதக்கமும் பெற்று தமிழ்நாட்டிற்கும், கரூர் மாவட்டம் குளித்தலை தொகுதிக்கும் பெருமை சேர்த்த புனித டோமினி மெட்ரிகுலேஷன் பள்ளி 9 -ம் வகுப்பு மாணவி கே.சத்யாவை குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

News January 31, 2025

துணை ராணுவத்தில் டிரைவர் வேலை

image

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிரைவர், ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10 வகுப்பு தேர்ச்சி தகுதி போதும். ரூ.21,700- ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். உடற்தகுதி தேர்வு, திறன் தேர்வு, எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படும். <>விண்ணப்பிக்க கிளிக்<<>>, SHARE பண்ணுங்க

News January 31, 2025

கரூரில் குட்கா பொருள் கடத்திய மூவர் கைது

image

பெங்களுரூவிலிருந்து மதுரைக்கு கார் மூலம் குட்கா பொருள் கடத்துவதாக வெங்கமேடு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் டிஎஸ்பி செல்வராஜ் தலைமையில் தனிப்படை குளத்துப்பாளையம் மேம்பாலத்தில் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது காருக்குள் 168 கிலோ எடைகொண்ட ரூ.1.32 லட்சம் மதிப்புள்ள குட்கா இருப்பது தெரியவந்தது. இதில் ராஜஸ்தான் மாநிலம் கேவர்சன்(40), ஹரிராம்(27), சுரேஷ்(19) ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.

error: Content is protected !!