Karur

News February 19, 2025

கரூரில் நாளை மறுநாள் 200 பேருக்கு வேலை காத்திருக்கு

image

கரூர் வெண்ணைமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 21ம் தேதி காலை 10 – 2 வரை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. 25க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 200க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளனர். எட்டாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு டிப்ளமோ, ஐடிஐ, பொறியியல் பட்டதாரிகள் என அனைவரும் கலந்து கொண்டு பயனடையலாம். கூடுதல் விவரங்களுக்கு 94990 55912 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News February 19, 2025

18 லட்சம் பரிசு: மஞ்சப்பை விருது பெற கலெக்டர் அழைப்பு

image

கரூர் கலெக்டர் தங்கவேல் அறிக்கை: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் மாற்றாக பொருட்களை பயன்படுத்த பங்களிப்பு செய்த பள்ளி கல்லூரி வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருது வழங்கப்படுகிறது. 3 பள்ளிகள், 3 கல்லூரிகள், 3 வணிக நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு மொத்தம் 18 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும். இதன் விண்ணப்பத்தை கலெக்டர் அலுவலக இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

News February 18, 2025

கரூர் எம்பி ஜோதிமணி வேதனை!

image

கோவையில் 17 வயது சிறுமி 7 கல்லூரி மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. மாணவர்கள் கைது செய்யப்பட்டாலும் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வேதனையும், கவலையும் தருகின்றன. எந்தவொரு தொழில்நுட்பமும் முற்போக்கானதாக இருந்தாலும் பெண்களுக்கு எதிராக எப்படி பயன்படுத்துவது என்பதை வக்கிரம் மிகுந்த கூட்டம் கண்டறிந்து விடுகிறது என வேதனை தெரிவித்துள்ளார்.

News February 18, 2025

நகை கடன் பெற்ற விவசாயிகள் சிக்கல்? 

image

ஆர்பிஐ உத்தரவின்படி அனைத்து வங்கிகளிலும் நகைக்கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் முழு தொகையுடன் பணத்தை கட்டி தான் நகையை மாற்றி வைக்க முடியும். இந்த நடவடிக்கையால் விவசாயிகள், ஏழை குடும்பத்தினர் பெரும் அவதிக்கு உள்ளாகினர். மேலும் தனியார் வங்கிகள் இதுபோன்ற வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே பணம் வழங்கி நகையை தனியார் வங்கிகளுக்கு மாற்ற வழிவகை செய்து வருவதால், அரசு வங்கிகளுக்கு இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

News February 18, 2025

மாவட்ட சுகாதாரத் துறையில் 276 காலியிடங்கள்

image

காரப்பேட்டையில் உள்ள அரசு புற்றுநோய் மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளில் உள்ள 276 காலிப்பணியிடங்களை மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8th, Any Degree முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு இந்த <>லிங்கை<<>> க்ளிக் செய்யவும். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.

News February 17, 2025

கரூரில் நல திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

image

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்து, பிறகு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

News February 17, 2025

கரூரில் செல்வ வளம் தரும் கோயில்

image

செல்வத்தை அள்ளித்தரும் மகாலட்சுமிக்கு, கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் உள்ள மேட்டு மகாதானபுரத்தில் கோவில் அமைந்துள்ளது. மகாலட்சுமி அம்மன் பள்ளத்தில் இருந்து கிடைத்ததாக கூறப்படுகிறது. பக்தர்கள் இந்த கோயிலுக்கு ஒரு முறை சென்று வந்தால் செல்வம் பெருகும் என்று கூறப்படுகிறது. இந்த கோயிலை அனைவருக்கும் சென்று வாருங்கள். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் ஷேர் செய்யவும்.

News February 17, 2025

எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்

News February 17, 2025

சின்னதாராபுரம் கடைவீதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

image

சின்னதாராபுரம் பஸ் ஸ்டாண்ட் செல்லும் கரூர், தாராபுரம் சாலையில் வங்கி, போலீஸ் ஸ்டேஷன் உள்பட பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால் இதற்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் தங்கள் வண்டிகளை பார்க்கிங் இல்லாததால் அப்படி நிறுத்தி விட்டு செல்வதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து போலீசாரை அமர்த்தி கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தனர்.

News February 16, 2025

பத்திரப்பதிவு அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன்கள்

image

நாளை முகூர்த்தநாள் என்பதால் பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1 சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 முன்பதிவு வில்லைகளும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதில் 300 முன்பதிவு வில்லைகளும் வழங்க பத்திரப் பதிவுத்துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே தைப்பூசம், விடுமுறை நாளில் அலுவலகம் திறப்பு அறிவிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!