Karur

News February 6, 2025

கரூரில் மாணவிக்கு பாலியல் தொல்லை

image

கரூர் மாவட்டம், ஏமூர் கொங்கு நகர் பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவரது மகன் அரவிந்த் (23) இவர் பசுபதிபாளையத்தில், தனியார் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வரும், 16 வயது சிறுமிக்கு, காதலிக்க சொல்லி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து, பள்ளி சிறுமியின் உறவினர்கள் கொடுத்த புகார்படி, அரவிந்தை போக்சோ சட்டத்தின் கீழ், பசுபதிபாளையம் போலீசார் நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News February 5, 2025

எஸ்பி அலுவலகத்தில் குறைதீர்ப்பு கூட்டம்

image

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (05.02.25 ) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில், மனு கொடுக்க வந்த பொதுமக்களிடமிருந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா, 34 மனுக்களை பெற்று மனு மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அப்போது, மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News February 5, 2025

கரூர்ல நாளை இங்கெல்லாம் கரண்ட் இருக்காதுங்க!

image

கரூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கே.வி.பி., நகர் மின் பாதையில் நாளை (ஜனவரி.6) மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் பெரியார் நகர், காந்திபுரம், வையாபுரி நகர் 2வது தெரு, KVB நகர், M.G.ரோடு, கணேசன் நகர் விஜயநகர் ஆகிய பகுதிகளில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். தேவையான முன்னேற்பாடுகள் செய்துகொள்ளுங்கள் மக்களே!

News February 5, 2025

TMB வேலைவாய்ப்பு அப்ளை பண்ண மிஸ் பண்ணிடாதீங்க

image

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் Deputy Chief Financial Officer, Agricultural Officer, Global NRI Center Head பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு இந்த<> லிங்க்<<>> க்ளிக் செய்யவும். இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

News February 5, 2025

பிப்.07 விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 

image

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 07.02.25 வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற உள்ளது. கரூர் மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தவறாது விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் குறைகளை வாயிலாகவும் மனுக்கள் மூலமாகவும் தெரிவிக்கலாம்.

News February 5, 2025

இதை செய்தால்10 ஆண்டுகள் சிறை: ஆட்சியர் எச்சரிக்கை

image

கரூரில் மருத்துவர்கள் அனுமதியின்றி கருக்கலைப்பு மற்றும் மாத்திரை விற்பவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இலவசமாக, பாதுகாப்பான கருக்கலைப்பு மற்றும் குடும்ப நல அறுவை சிகிச்சை நல சேவைகள் வழங்கப்படுவதால் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

News February 4, 2025

கரூர்- சென்னை ரயில்: மத்திய பட்ஜெட்டில் ஏமாற்றம்?

image

தமிழகத்தில் 10 புதிய ரயில் பாதை திட்டங்கள், 3 அகல பாதை திட்டங்கள், 9 இரட்டை வழி பாதை திட்டங்களுக்கு 6,626 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். ஆனால் கரூரிலிருந்து சென்னைக்கு பகல் நேர ரயில் நீண்ட கால கோரிக்கையாக உள்ள நிலையில் வழக்கம்போல நடப்பு பட்ஜெட்டிலும் ஏமாற்றம் தந்துள்ளது என கரூர் மக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து உங்கள் கருத்து என்ன?

News February 4, 2025

பிரதமர் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கலெக்டர் தகவல்

image

கரூர் கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழில் கல்லூரிகளில் பயிலும் BC, MBC மாணவ மாணவிகளுக்கு மேற்படிப்புக்கு பிரதமர் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். நிபந்தனைகளின்படி பெற்றோர் ஆண்டு வருமானம் 2.50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். பிப்ரவரி 28-க்குள் https.umiss.tn.gov.in என்ற வெப்சைட்டில் விண்ணப்பிக்கலாம்.

News February 4, 2025

வினா விடை வங்கி புத்தகம் அமைச்சர் வழங்கும் நிகழ்ச்சி

image

கரூர் மாவட்டம் குளித்தலை தோகைமலை கிருஷ்ணராயபுரம் கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வினா விடை வங்கி புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இதில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு மாணவர்களுக்கு வங்கி புத்தகம் வழங்க உள்ளார்.

News February 4, 2025

வட்டார வளர்ச்சி அலுவலர் உடல் நல குறைவால் உயிரிழப்பு

image

கரூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) சரவணன் நேற்று இரவு உடல்நலக்குறைவால் காலமானார். கரூர் மாவட்ட நிர்வாகம், குளித்தலை, கடவூர், தோகைமலை மற்றும் கிருஷ்ணராயபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பணியாளர்கள் என பலரும் இன்று அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

error: Content is protected !!