India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர், கடவூர் மலைப்பகுதியில் அமைந்துள்ளது பொன்னணியார் அணைக்கட்டு. இந்த அணை செம்மலையின் அடிவாரத்தில் பெருமாள் மலைகளுக்கு இடையில், தும்பச்சி, மாமுண்டி, அறியாறு போன்ற ஆறுகளில் வெள்ளக்காலத்தில் ஏற்படும் நீர்ப்பெருக்கைத் தடுக்க 1975-ஆம் ஆண்டு இந்த அணை கட்டப்பட்டது. பாசன வசதிக்காக கட்டப்பட்ட இந்த அணை, பொதுப்பணித்துறையால் பாதுகாக்கப்படுகிறது. 313 ஏக்கர் பரபபளவில் அமைந்துள்ள அணையின் உயரம் 51அடிகள் ஆகும்.
கரூர் நகர போலீசார் கோதை நகரில் நேற்று(மே 26) ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் வெங்கமேட்டை சேர்ந்த பரணிபாண்டி, மோத்தீஸ் என்பதும், இருவரும் முதியவரை தாக்கி பைக்கை பறித்தும், பெண்களிடம் நகை பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்ய முயன்றபோது தப்பித்து செல்ல பாலத்திலிருந்து குதித்ததில் கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரூரில் தனியார் திருமண சேவை மையம் நடத்தி வரும் சரவணன்-மோனிகா தம்பதியரின் 2 வயது குழந்தை பெரிஸ் பிளாசா வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். இதில் குழந்தை தனியாக கோவை சாலையில் வந்ததை கண்ட போக்குவரத்து காவலர்கள் மீட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது குழந்தையை தேடிக் கொண்டிருந்த அவர்களை மகளிர் காவல் நிலையத்துக்கு வரவழைத்து அறிவுரை வழங்கி குழந்தையை பெற்றோரிடம் நேற்று ஒப்படைத்தனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா துளிப்பட்டியில் உள்ள நாடக மேடையில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட மணிகண்டன், கருப்பையா, காளியப்பன், இளங்கோவன், சக்திவேல், கைலாசம் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் 52 சீட்டுகள், ரூ.150 பறிமுதல் செய்தனர்.
கரூர் அதிமுக அலுவலகத்தில், 6 வது வார்டு, வெங்கமேடு OPS அணியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளராக இருந்த எ.செந்தில் குமார் OPS அணியில் இருந்து விலகி, நேற்று முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இந்நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் பசுவை சிவசாமி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வளாகத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மாவட்ட முழுவதும் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது 20 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து, விற்பனைக்கு வைத்திருந்த 240 மது பாட்டில்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். காவல்துறையினர் இதுகுறித்து தகவலை இன்று வெளியிட்டுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் கோடை மழை பரவலாக பெய்து வருவதால், நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக குளங்கள், குட்டைகள் மற்றும் ஓடைகளின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகள் தண்ணீரால் நிரம்பியுள்ளது. பொதுமக்களும் மற்றும் தங்களது குழந்தைகளையும் குளம் மற்றும் குட்டைகளில் யாரையும் குளிக்க அனுமதிக்க வேண்டாமென அந்த இடத்தில் எச்சரிக்கை பலகைகள் வைக்கவும் கலெக்டர் தங்கவேல் அறிவுறுத்தியுள்ளார்.
கரூர் மாவட்டத்தில் இன்று (மே.24) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கரூரில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே கருப்பத்தூரில் நேற்று(மே 23) இரவு 9 மணி அளவில் பஸ் மீது, எதிரே வாழைக்காய் லோடு ஏற்றி வந்த மினி சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கேரளத்தை சேர்ந்த மினி சரக்கு வாகன டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பஸ்ஸில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து லாலாபேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் ஏழை, எளியோரின் இல்லம் தேடிச்சென்று முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், நோயாளிகள் ஆகியோர் இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினால் 1 கோடியே 70 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இதில் கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை மருத்துவம் திட்டத்தின் மூலம் 3 லட்சத்து 22 ஆயிரத்து 587 பேர் பயன் பெற்றுள்ளதாக கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.