India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மாவட்டம், சின்னாண்டாங்கோவில் சாலையில் உள்ள, சங்கரா வித்யாலயா பள்ளியில், நேற்று ஆண்டு விழா நடைபெற்று முடிந்த நிலையில், அங்கு பத்து வருடங்களுக்கு மேல் பணியாற்றிய ஊழியர்களுக்கு, 1800 சதுர அடி முதல் 2800 சதுர அடி வரை, நிலங்கள் வழங்கப்பட்டது. பத்திர செலவையும் பள்ளி நிர்வாகமே ஏற்று கொள்வதாக கூறியுள்ளது. 6.5 கோடி மதிப்புள்ள நிலங்களை பள்ளி நிர்வாகம் 11 ஊழியர்களுக்கு வழங்கியது.

கரூர் காந்திகிராமம், சணப்பிரட்டி மற்றும் தான்தோன்றிமலை, ராயனூர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் குடிநீர் குழாய்கள்புலியூர் பகுதியில் ஏர்டெல் நிறுவனம் Trenchless method முறையில் கேபிள் பதிக்கும் பணிகள் மேற்கொண்ட பொழுது 8க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் குழாய்கள் பழுது அடைந்துள்ளதால் பிரதான குடிநீர் குழாய்களை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாக கரூர் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

குளித்தலை அடுத்த அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த மலைக்கோவில் செங்குத்தாக 1,017 படிகளை கொண்டது. ரோப்கார் சேவை வசதியை மூன்று மாதங்களுக்கு மேலாக பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப்கார் சேவை வரும் 28,29 /12/2024 ஆகிய இரண்டு நாட்கள் நிறுத்தப்படுகிறது என கோவில் செயல் அலுவலர் தங்கராஜீ கூறியுள்ளார்.

கரூர் எம்.பி ஜோதிமணி இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. கல்வி பயிலும் இடங்களிலே மாணவிகளுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிச்சயம் அச்சுறுத்த கூடியது . பாலியல் குற்றவாளியின் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும், அப்பொழுதுதான் பெண்கள் பாதுகாப்பு உணர முடியும் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பள்ளபட்டியில் மாவட்ட அளவிலான இறகுபந்துப் போட்டி நடைபெற்றது. இரண்டு பிரிவுகளாக நடந்த போட்டியில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட அணிகள் விளையாடின. குளித்தலையைச் சேர்ந்த ஹரி நவீன் ஆகியோர் முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பை ரொக்க பணம் பரிசாக வழங்கப்பட்டது. மற்ற அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் பதக்கம் வழங்கப்பட்டது.

புஞ்சை காலக்குறிச்சியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கும் கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த ரேணுகா என்பவருக்கும் டிச.12ம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில் ரேணுகாவிற்கு ஏற்கனவே புதுக்கோட்டையைச் சேர்ந்த மெய்யர், கோவையைச் சேர்ந்த லோகநாதன் ஆகியோருடன் திருமணம் நடந்திருப்பது தெரிய வந்தது. உடனடியாக ரமேஷ் அனைத்து மகளிர போலீசில் புகாரளித்தார். இதன்பேரில் ரேணுகாவை போலீசார் கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.

➤ திருச்சி – கரூர் இடையே புதிய முன்பதிவில்லா சிறப்பு ரயில் ➤ தந்தையுடன் சென்ற சிறுமி விபத்தில் உயிரிழப்பு ➤ குளித்தலை அருகே செம்மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் ➤ கரூரில் அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் ➤ அமராவதி தடுப்பணைக்கு 361 கன அடி நீர் வரத்து ➤ கரூரில் வாஜ்பாய் பிறந்த நாள் கொண்டாட்டம் ➤ தவெக சார்பில் வேலு நாச்சியாருக்கு நினைவஞ்சலி ➤ இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் உயிரிழப்பு ➤

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்கள் தனது தொகுதிக்குட்பட்ட பொதுமக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை இன்று தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களில் “அன்பு, கருணை, மன்னிப்பை போதித்த இயேசு கிறிஸ்துவின் பிறந்ததினமான இன்று (25/12/2024) அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவரான வீரமங்கை வேலு நாச்சியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு வீரமங்கையின் திருஉருவப்படத்திற்கு கரூர் மாவட்ட தமிழக வெற்றிக்கழகம் சார்பாக கரூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் இன்று மதியழகனால் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழ்நாட்டின் மதுவிலக்கு, ஆயத்தீர்வை, மின்சாரத்துறை அமைச்சர் மற்றும் கரூர் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகர செயலாளர் செந்தில் பாலாஜி தமிழகத்தில் வாழும் மக்களும் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்துவ மக்களுக்கு இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். மேலும் என்றென்றும் ஒற்றை தோழனாய் இருப்பேன் எனவும் கூறினார்.
Sorry, no posts matched your criteria.