India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மாவட்ட இளைஞர்களே வேலை வாய்ப்பு கிடைக்காமல் ஏங்கி தவிக்கிறீர்களா? உங்களுக்காக அருமையான ஒரு யோசனை. அரசு வேலைவாய்ப்புத்துறை சார்பில் கரூர் மாவட்டத்தில் இயங்கும் பல்வேறு தனியார் நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இங்கே <

கரூர் மாவட்டம், சுற்றுவட்டார பகுதியில் அமைந்துள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கு, கிராமப்புற பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கவும், இடை நிற்றலை குறைக்கவும் தமிழக அரசால் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மேலும் தொடர்புக்கு அந்தந்த தலைமை பள்ளி ஆசிரியர் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

கரூர் மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இங்கு <

கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். கரூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04324-296570, தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, Toll Free -1800 4252 441, சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756.(ஷேர் பண்ணுங்க)

கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே அழகாபூரியனூரில் உள்ள தோட்டத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற வெள்ளியணை போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட தேவசிகவுண்டன் புதூரைச் சேர்ந்த ரவி 51 மற்றும் அழகா பூரியனூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் 65 ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் 52 சீட்டுகள், ரூபாய் 100 பறிமுதல் செய்தனர்.

கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணமில்லாப் பேருந்து பயணச்சலுகையைப் பெற, முதன்முறையாக ஆன்லைன் பஸ்பாஸ் (Online Bus Pass) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இ-சேவை மையங்கள் வாயிலாகப் பதிவு செய்து இந்தச் சலுகையைப் பெற்றுக்கொள்ளலாம். இதற்காகக் கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சிறப்பு முகாம்கள் வரும் ஜன.30 வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

குளித்தலை அடுத்த எருமைகாரனூரைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளி கனகராஜ் (33), கடந்த 17-ம் தேதி பொங்கல் பொருட்கள் வாங்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். பஞ்சப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே சாலையோரக் குழிக்குள் பைக்குடன் விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து லாலாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் 2.Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377. 2. அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500. 3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090. 4. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098. 5. முதியோருக்கான அவசர உதவி -1253. 6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033. 7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE பண்ணுங்க. அவரச காலத்தில் உதவும்!

கரூர் மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பிளாக்கில் விற்பனை நடப்பது, குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விற்பனை, விலைக்கு மேல் ரூ.10 கேட்பது, மேலும் எந்த வித மோசடி செயல்கள் நடந்து வந்தாலும், அதுகுறித்து உடனடியாக 04324-225100 என்ற லஞ்ச ஒழிப்புத் துறை எண்ணிற்கு புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.