India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர் மாவட்டத்தில் கோடை மழை பரவலாக பெய்து வருவதால், நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக குளங்கள், குட்டைகள் மற்றும் ஓடைகளின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகள் தண்ணீரால் நிரம்பியுள்ளது. பொதுமக்களும் மற்றும் தங்களது குழந்தைகளையும் குளம் மற்றும் குட்டைகளில் யாரையும் குளிக்க அனுமதிக்க வேண்டாமென அந்த இடத்தில் எச்சரிக்கை பலகைகள் வைக்கவும் கலெக்டர் தங்கவேல் அறிவுறுத்தியுள்ளார்.
கரூர் மாவட்டத்தில் இன்று (மே.24) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கரூரில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே கருப்பத்தூரில் நேற்று(மே 23) இரவு 9 மணி அளவில் பஸ் மீது, எதிரே வாழைக்காய் லோடு ஏற்றி வந்த மினி சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கேரளத்தை சேர்ந்த மினி சரக்கு வாகன டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பஸ்ஸில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து லாலாபேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் ஏழை, எளியோரின் இல்லம் தேடிச்சென்று முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், நோயாளிகள் ஆகியோர் இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினால் 1 கோடியே 70 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இதில் கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை மருத்துவம் திட்டத்தின் மூலம் 3 லட்சத்து 22 ஆயிரத்து 587 பேர் பயன் பெற்றுள்ளதாக கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணிவரை மிதமான மழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கரூரில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வேட்பாளர் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர் முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில், மாவட்ட எஸ்பி பிரபாகர் உள்ளிட்ட வேட்பாளர் முகவர்கள் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்ட தலைமை நீதிபதி சண்முக சுந்தரம் வெளியிட்ட அறிக்கையில், தேசிய மக்கள் நீதிமன்றம் கரூர் ,குளித்தலை நீதிமன்றங்களில் ஜூன், 8ல் நடக்கிறது. அதில், அனைத்து வகையான உரிமையியல் வழக்கு, தொழிலாளர் நல வழக்கு, இதர குடும்ப நல வழக்குகள் தீர்வு காணப்படுகிறது.எனவே வக்கீல்கள்,பொதுமக்கள், வங்கிகள் மற்றும் வழக்காடிகள் தங்கள் வழக்குகளை, தேசிய மக்கள் நீதிமன்றத்தில் எடுத்து கொள்ள முன்வந்து தீர்வு காணலாம்.
கரூர் கூடைப்பந்து குழு சார்பில் எல்ஆர்ஜி நாயுடு நினைவு சுழற்கோப்பைக்கான 64- ஆம் ஆண்டு ஆண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி மற்றும் கேவிபி சுழற்கோப்பைக்கான 10-ஆம் ஆண்டு பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியை நேற்று மாநகராட்சி ஆணையர் சுதா, துணை மேயர் தாரணி சரவணன் ஆகியோர் தொடக்கிவைத்தனர் . முன்னதாக கூடைப்பந்து குழு தலைவர் வி.என்.சி.பாஸ்கர், செயலர் முகமது கமாலுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்
கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், டென்சிங் நார்கே தேசிய சாகச விருது 2023ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மே.30ஆம் தேதி மாலை 5 மணிக்குள் https://awards.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 7401703493 என்ற மாவட்ட விளையாட்டு அரங்க எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.
கரூர் மாவட்டத்திற்கு இன்று (மே.22) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கரூரில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.