Karur

News February 5, 2025

இதை செய்தால்10 ஆண்டுகள் சிறை: ஆட்சியர் எச்சரிக்கை

image

கரூரில் மருத்துவர்கள் அனுமதியின்றி கருக்கலைப்பு மற்றும் மாத்திரை விற்பவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இலவசமாக, பாதுகாப்பான கருக்கலைப்பு மற்றும் குடும்ப நல அறுவை சிகிச்சை நல சேவைகள் வழங்கப்படுவதால் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

News February 4, 2025

கரூர்- சென்னை ரயில்: மத்திய பட்ஜெட்டில் ஏமாற்றம்?

image

தமிழகத்தில் 10 புதிய ரயில் பாதை திட்டங்கள், 3 அகல பாதை திட்டங்கள், 9 இரட்டை வழி பாதை திட்டங்களுக்கு 6,626 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். ஆனால் கரூரிலிருந்து சென்னைக்கு பகல் நேர ரயில் நீண்ட கால கோரிக்கையாக உள்ள நிலையில் வழக்கம்போல நடப்பு பட்ஜெட்டிலும் ஏமாற்றம் தந்துள்ளது என கரூர் மக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து உங்கள் கருத்து என்ன?

News February 4, 2025

பிரதமர் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கலெக்டர் தகவல்

image

கரூர் கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழில் கல்லூரிகளில் பயிலும் BC, MBC மாணவ மாணவிகளுக்கு மேற்படிப்புக்கு பிரதமர் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். நிபந்தனைகளின்படி பெற்றோர் ஆண்டு வருமானம் 2.50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். பிப்ரவரி 28-க்குள் https.umiss.tn.gov.in என்ற வெப்சைட்டில் விண்ணப்பிக்கலாம்.

News February 4, 2025

வினா விடை வங்கி புத்தகம் அமைச்சர் வழங்கும் நிகழ்ச்சி

image

கரூர் மாவட்டம் குளித்தலை தோகைமலை கிருஷ்ணராயபுரம் கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வினா விடை வங்கி புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இதில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு மாணவர்களுக்கு வங்கி புத்தகம் வழங்க உள்ளார்.

News February 4, 2025

வட்டார வளர்ச்சி அலுவலர் உடல் நல குறைவால் உயிரிழப்பு

image

கரூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) சரவணன் நேற்று இரவு உடல்நலக்குறைவால் காலமானார். கரூர் மாவட்ட நிர்வாகம், குளித்தலை, கடவூர், தோகைமலை மற்றும் கிருஷ்ணராயபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பணியாளர்கள் என பலரும் இன்று அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

News February 3, 2025

இருதரப்பினரிடையே தகராறு: 7 பேர் மீது வழக்கு பதிவு

image

கடவூர் தாலுகா சிந்தாமணிப்பட்டி பெட்ரோல் பங்க் முன்பு தங்கராசு மகள் மகிமாவை பார்க்க வந்த தாந்தோணி மலையைச் சேர்ந்த துளசிசுதர்சன், விஷால் ஆகிய இருவரும் கடந்த 24 ஆம் தேதி வந்துள்ளனர். அங்கு இருதரப்பிலும் தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இருதரப்பை சேர்ந்த தங்கராசு மற்றும் துளசி சுதர்சன் அளித்த புகாரின் பேரில் 7 பேர் மீது சிந்தாமணிப்பட்டி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.

News February 3, 2025

கரூரில் திறக்கப்பட்ட பத்திரப் பதிவு அலுவலகம்

image

கரூரில் பழைய அரசு தலைமை மருத்துவமனையைச் சாலையில் செயல்படும் மேலக்கரூர் பத்திரப்பதிவு அலுவலகம் நேற்று திறந்திருந்தது, ஊழியர்கள் மட்டுமே இருந்தனர். மேலும் அலுவலக நுழைவு வாயில் மூடப்பட்டிருந்தது. ஆனால், பத்திரப்பதிவுக்கு பொதுமக்கள் யாரும் வராததால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் இணைப்பதிவாளர் அலுவலகம் பூட்டுப் போடப்பட்டிருந்தது.

News February 2, 2025

குற்றப்பிரிவு- சட்ட ஆலோசகர்கள் விண்ணப்பிக்கலாம்!

image

குற்றப்புலனாய்வுத் துறை சரகங்களுக்கு விருப்பமுள்ள சட்ட ஆலோசகர்கள் விண்ணப்பிக்கலாம்;ஆலோசகர் காலியிடங்கள்
ஒப்பந்த அடிப்படையில் 5 சட்ட ஆலோசகர்களை நியமிக்க குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை திட்டம். விருப்பமுள்ளவர்கள் <>www.tnpolice.gov.in<<>> தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

News February 2, 2025

கரூர் மாவட்ட தவெக செயலாளர்கள் நியமனம்!

image

தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மேற்கு மாவட்ட (கரூர், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகள்) செயலாளராக V.P. மதியழகனையும், மாவட்ட இணைச்செயலாளராக K.R.விக்னேஷ்வரன், பொருளாளராக G.ஆறுமுகம் ஆகியோரை அக்கட்சியின் தலைவர் விஜய் நியமித்துள்ளார். அதேபோல், கரூர் கிழக்கு மாவட்ட (குளித்தலை, கிருஷ்ணராயபுரம்) செயலாளராக G.பாலசுப்ரமணி, இணைச்செயலாளராக A.சதாசிவம் பொருளாளராக P.வினோத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News February 1, 2025

கரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

கரூர் மாவட்டத்தில் உள்ள ,குளித்தலை, இரும்பூதிபட்டி, சின்னதாராபுரம் ஆகிய நான்கு ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மக்காச்சோளத்தை விற்று பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு வேளாண் விற்பனை மற்றும் வேளான் வணிகத் துறை அலுவலகத்தை அணுகலாம் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!