Karur

News February 15, 2025

32,000 காலியிடங்கள் 10 வகுப்பு போதும் முழு விவரம் இதோ

image

இந்திய ரயில்வே துறையில் 32,438 காலிப்பணியிடங்கள் நிரப்பபடள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு,ஐடிஐ முடித்திருக்க வேண்டும். அல்லது NCVT மூலம் வழங்கப்படும் தேசிய தொழிற்பயிற்சிக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.18,000வரை வழங்கப்பட இருக்கின்றது. மேலும் விவரங்களுக்கு இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்யவும். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.

News February 15, 2025

கரூரில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய நபர் குண்டாஸில் கைது

image

கருப்பகவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது  மல்லிகை கடையில் மண்ணெண்ணெய் நிரப்பி தீ பற்ற வைத்தது தொடர்பான வழக்கில்  முகமது அன்சாரி என்பர் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரை பேரில் ஆட்சித் தலைவர் தங்கவேல் உத்தரவின்படி இன்று முகமது அன்சாரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

News February 15, 2025

கரூரில் கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயில்

image

கரூரில் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் என்பது, தமிழ்நாட்டில் கரூர் மாநகரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம், காமதேனு வழிபட்ட தலமாகும், திருஞானசம்பந்தர், சித்தர் கருவூரார், அருணகிரிநாதர் போன்றோர் பாடியுள்ளனர். சித்தர் கருவூராருக்கு, தனி ஆலயம் உள்ளது. இங்கு வந்து திருமண ஆகாதவர்கள் சாமி தரிசனம் செய்தால் திருமணம் ஆகும்.

News February 15, 2025

கரூரில் நேருக்கு நேர் மோதி விபத்து: டாஸ்மாக் ஊழியர் பலி

image

திருச்சி விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார் (55), டாஸ்மாக் தொழில்பேட்டை குடோன் கிளார்க். நேற்று பைக்கில் கரூர் சென்று கொண்டிருந்தார். கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது இவரது பைக்கும் மாயனூர் பகுதி பிரபாகர் என்பவர் ஓட்டி வந்த பைக்கும் நேருக்கு நேர் மோதின. படுகாயமடைந்த செல்வகுமார் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

News February 15, 2025

கரூரில் இன்று மின்தடை அறிவிப்பு

image

கருர் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (15.02.25) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை பின்வரும் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அவை:
1) தாளப்பட்டி துணை மின் நிலையம்
2) ஆண்டி செட்டிபாளையம் துணை மின் நிலையம்
3) தென்னிலை ராஜபுரம் துணை மின் நிலையம்
4) தாந்தோன்றிமலை துணை மின் நிலையம்
ஷேர் பண்ணுங்க!

News February 14, 2025

அஞ்சல் துறையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். கரூர் மாவட்டத்தில் மட்டும் 38 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <>விண்ணப்பிக்க வேண்டும்.<<>> ஷேர் பண்ணுங்க

News February 14, 2025

விண்ணப்பிக்க கரூர் கலெக்டர் அழைப்பு

image

ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவை வழங்க மினிபஸ் இயக்க விரிவான திட்டம் வெளியிட்டப்பட்டுள்ளது. தடாகோவில் பைபாஸ் – ஈசநத்தம், கரடிபட்டி – அருங்கரை அம்மன் கல்லூரி, ஈசநத்தம்-வேலஞ்செட்டியூர், பள்ளபட்டி – குரும்பபட்டி உள்ளிட்ட கரூர், புலியூர், புகலூர், மண்மங்கலம் என 29 வழித்தடங்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பிப்.24-க்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தங்கவேல் அறிவித்துள்ளார்.

News February 14, 2025

கரூர்: புதிய அரசு கலைக்கல்லூரி: முதலமைச்சர் திறப்பு

image

உயர்கல்வித்துறை சார்பில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி தரகம்பட்டியில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு கலை அறிவியல் கல்லூரியினை இன்று (14.02.2025) காலை 11 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்கின்றனர்.

News February 13, 2025

பெண்கள், குழந்தை, முதியோருக்கு உதவும் வரப்பிரசாதம்: சகி சேவை

image

குழந்தை,பெண்கள், முதியோருக்கு உதவ அவர்கள் துயரம் களைய சகி சேவை மையம் கரூர் அரசு தலைமை மருத்துவமனையில் இயங்கி வருகிறது. மத்திய அரசின் நிர்பயா நிதியில் இது செயல்படுகிறது. பெண்களின் குடும்ப பிரச்சினை,கட்டாய திருமணம்,குழந்தை திருமணம், பாலியல்தொல்லை, பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு ஏற்படும் தொல்லை பிரச்சனைக்கு தீர்வு காண இம்மையத்தை அணுகலாம். 6 ஆண்டுகளில் 1888 பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ளது. 9150057308

News February 13, 2025

434 காலிப்பணியிடங்கள்: ரூ.50,000 சம்பளத்தில் வேலை

image

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) இங்கு க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

error: Content is protected !!