Karur

News July 12, 2024

கரூரில் மழைக்கு வாய்ப்பு

image

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி கரூர் மாவட்டத்தில் இன்று அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 12, 2024

கரூர் மாவட்டத்திற்கு மழைக்கு வாய்ப்பு

image

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (மாலை 5 மணி வரை ) கரூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 12, 2024

கூட்டுறவுத்துறை பணியாளர் நாள் கூட்டம்

image

கரூர் மண்டலத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவுரைப்படி இரு மாதங்களுக்கு ஒருமுறை கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் பணியாளர்கள் அனைவருக்கும் பணியாளர் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும். அந்த வகையில் கரூர் மாவட்ட அலுவலக கூட்டரங்கில் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் கூட்டுறவு பணியாளர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்குமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News July 11, 2024

கரூர் மாவட்டத்தில் வெப்ப நிலை நிலவரம்

image

தமிழ்நாட்டில் கோடை காலம் முடிந்து சில இடங்களில் மழை பெய்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவினாலும் சில இடங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது.அந்த வகையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,கரூர் மாவட்டத்தில் உள்ள பரமத்தியில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.மேலும் கரூர் மாவட்டத்தில் உள்ள மற்ற பகுதியிலும் கடும் வெயிலால் மக்கள் அவதியுற்றனர்.

News July 11, 2024

முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர் வீட்டில் சிபிசிஐடி ரெய்டு

image

கரூா் ஆண்டாங்கோவில் பகுதியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆதரவாளரான கவின் என்பவர் வீட்டில் இன்று காலை முதல் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கரூா் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான நிலத்தை மிரட்டி எழுதி வாங்கியதாக முன்னாள் அமைச்சர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிபிசிஐடி விசாரணை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News July 10, 2024

கரூர் போலீசார் சவுக்கு சங்கரிடம் விசாரணை

image

கரூர் காந்திகிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (43).கரூர் டவுன் காவல் நிலையத்தில்,சென்னையை சேர்ந்த விக்னேஷ் 7 லட்சம் மோசடி செய்ததாக வந்த புகாரில் கைது செய்யப்பட விக்னேஷ்,சவுக்கு சங்கரின் இணையதளத்தில் வேலை பார்த்ததாகவும்,கிருஷ்ணனிடம் வாங்கிய பணத்தை சங்கரிடம் கொடுத்ததாக கூறினார்.நேற்று சவுக்கு சங்கரை கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.போலீசார் நான்கு நாட்கள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்தது

News July 7, 2024

M.R.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை: போலீசார் குவிப்பு

image

ரூ.100 கோடி நிலமோசடி வழக்கு தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளின் கீழ் வாங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சூழலில், அவருக்கு சொந்தமான வீடு மற்றும் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட 9 இடங்களில் சிபிசிஜடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே அவரது ஆதரவாளர்கள் வீட்டில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. சோதனையை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

News July 7, 2024

சிக்கலில் கரூர் மாஜி அமைச்சர்..!

image

நிலமோசடி தொடர்பாக அ.தி.மு.க மாஜி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வாங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சூழலில், கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2வது முறையாக முன்ஜாமின் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News July 6, 2024

நீதிமன்றத்தில் வீடியோ எடுத்த நபர் கைது

image

கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இந்த விவாதத்தை செல்போன் மூலம் வீடியோ எடுத்த தமிழினியன் என்ற இளைஞர் லைவாக வீடியோ அனுப்பி கொண்டிருந்ததை கண்டறியப்பட்டது. இதையடுத்து தமிழினியனை பிடித்து மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் முன்பு ஆஜர் படுத்தினர்.

News July 5, 2024

குரூப்.1 தேர்வை 2,850 பேர் எழுதுகின்றனர்

image

குரூப்.1 தேர்வில் காலியாகவுள்ள 90 துணைக் காவல் கண்காணிப்பாளர், துணை ஆட்சியர் உள்ளிட்ட பதவிகளுக்களுக்கு விண்ணப்பிக்க மார்ச்.28 இல் அறிவிப்பு வெளியானது. கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வணையத்தால் நடத்தப்படும் குரூப்.1 பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத்தேர்வு ஜூலை.13 இல் நடைபெற உள்ளது. இதற்காக மாவட்டத்தில் 11 மையங்கள் அமைக்கப்பட்டு அதில் 2,850 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

error: Content is protected !!