Karur

News February 3, 2026

கரூர்: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

கரூர் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News February 3, 2026

கரூரில் நிகழ்ந்த மர்ம மரணம்!

image

கரூர் வெங்கமேடு கொங்கு நகரைச் சேர்ந்த பாலகுரு (56), செம்மடை பிரிண்டிங் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். நேற்று நிறுவனத்தின் அறையில் சுயநினைவின்றி இருந்த அவரை மீட்டு GHக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து அவரது சகோதரர் ராமநாதன் அளித்த புகாரின் பேரில், வாங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 3, 2026

கரூரில் வசமாக சிக்கிய பெண்: அதிரடி கைது!

image

வேலாயுதம்பாளையம் எஸ்.ஐ கண்ணன் உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம், பெரிய ரங்கப்பாளையம் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் உள்ள வீட்டில், மதுபாட்டில்களை விற்றதாக திருமூர்த்தி என்பவரது மனைவி வசந்தா, 67; என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 145 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

News February 3, 2026

கரூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

கரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் இரவு நேர ரோந்துப் பணிக்குச் சிறப்பு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்ட ஒழுங்கைப் பராமரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரக் காலங்களில் பொதுமக்கள் தங்கள் பகுதி காவல் அதிகாரிகளை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News February 2, 2026

கரூர்: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

image

கரூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <>இங்கே கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 2, 2026

கரூர்: உங்கள் போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

▶️ மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, ▶️ அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 5991500, ▶️ ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, ▶️ குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, ▶️ முதியோருக்கான அவசர உதவி -1253, ▶️தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, ▶️ பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!

News February 2, 2026

கரூர்: ரேஷன் அட்டை இருக்கா? உடனே CHECK செய்யவும்!

image

கரூர் மக்களே ரேஷன் அட்டை தொடர்பான சேவைகள் பெற அரசு அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த லிங்கை<> கிளிக்<<>> செய்து புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க, விண்ணப்பத்தின் நிலை, மறுபரிசீலனை விண்ணப்பம், நகல் குடும்ப அட்டை பெற, அட்டையில் உறுப்பினரை சேர்க்க, முகவரி மாற்றம் செய்ய, குடும்பத் தலைவர் மாற்றம் செய்ய, குடும்ப உறுப்பினர் நீக்க உட்பட பல்வேறு சேவைகளை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 2, 2026

கரூர்: ரூ.1,05,280 சம்பளத்தில்.. வங்கி வேலை!

image

கரூர் மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 418 Specialist Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 22-37 வயதுகுட்பட்ட B.E/B.Tech, M.E/M.Tech, MCA படித்தவர்கள் பிப்.19-க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.48,480 – 1,05,280 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News February 2, 2026

தோகைமலை அருகே விபத்து! கணவன், மனைவி படுகாயம்

image

திருச்சி முசிறியைச் சேர்ந்த ஹரிஹரன் (27) மற்றும் அவர் மனைவி யசோதா பைக் விபத்தில் படுகாயமடைந்தனர். சின்னரெட்டிபட்டி பஸ் ஸ்டாப் அருகே இவர்கள் சென்றபோது, கொல்லிநாயக்கர் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஹரிஹரன் அளித்த புகாரின் பேரில், தோகைமலை போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News February 2, 2026

கரூரில் வசமாக சிக்கிய பெண்கள் உட்பட 5 பேர்: அதிரடி கைது

image

கரூர் மாவட்டம் லாலாபேட்டை, வெங்கமேடு, சின்னதாராபுரம் மற்றும் மாயனூர் காவல் நிலைய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் நடவடிக்கை எடுத்து நதியா (38), பாலசுப்பிரமணியன் (33), செந்தில்குமார் (40), தண்டபாணி (45), பூமா (48) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 120 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

error: Content is protected !!