Karur

News August 20, 2024

முதலமைச்சர் கோப்பை: பதிவு செய்ய கடைசி நாள்

image

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் – கரூர் மாவட்டம் சார்பாக தமிழ்நாடு அரசு நடத்தும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கு www.sdat.tn.gov.in என்ற இணையம் மூலம் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விளையாட்டு போட்டியில் அனைவரும் கலந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான இறுதி நாள் 25.8.2024.

News August 20, 2024

கரூரில் அரசு வேலை: தேர்வானவர்கள் விவரம்

image

கரூர் தபால் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகியிருக்கிறது. கரூர் தபால் துறையில் கிளை அஞ்சலக அலுவலர், கிளை உதவி அஞ்சலக அலுவலர், தபால்காரர் ஆகிய 114 பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது என்பதால், ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். <>தேர்வானவர்கள் விவரங்கள்<<>>

News August 20, 2024

கரூரில் இரண்டு வாலிபர்கள் கைது

image

கரூர்: பள்ளப்பட்டி அருகே மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில், உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் பள்ளபட்டி பஸ் நிறுத்தத்தில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சரக்கு வேன் ஒன்றில், 12 மூட்டைகளில் 600 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்ததாக சதாம் உசேன், கவியரசு ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், வேனையும் பறிமுதல் செய்தனர்.

News August 19, 2024

கரூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட்

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் இரவு 7 மணி வரை கரூர் மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.

News August 19, 2024

சிறு, நடுத்தர தொழில்களுக்கான கடன் விழா

image

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது. இதில், கரூர் செங்குந்தபுரம், 5வது கிராஸ், செயல்பட்டு வரும் கிளை அலுவலகத்தில், சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன் விழா, இன்று முதல் சேப்.6 வரை நடக்கிறது. நாளை காலை 11 மணியளவில் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு தொழில் கடன் முகாம் நடக்கிறது. தகவல்களுக்கு 04324 235581, 04324 232299 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News August 19, 2024

மணல் கடத்தல், லாட்டரி விற்பனையை தடுக்க கோரிக்கை

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் காவிரி ஆற்று பகுதியில் இரவு நேரங்களில் வாகனங்களில் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், குளித்தலை சுங்ககேட், பெரிய பாலம், பேருந்து நிலையம், தண்ணீர் பள்ளி உள்ளிட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி விற்பனை நடக்கிறது. எனவே, கரூர் புதிய காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News August 19, 2024

கரூர்: ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

image

குளித்தலை அடுத்த அக்ரஹாரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது அக்கா புஷ்பா சேப்பளப்பட்டியில் வசித்து வருகிறார். புஷ்பா நேற்று தனது 2 குழந்தைகள் மற்றும் கொழுந்தனாரின் மகன் சஞ்சித் (9) ஆகியோருடன் பெற்றோர் வீட்டுக்கு வந்தார். பின்னர் ராஜேந்திரம் காவிரி ஆற்றுக்கு சென்று குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது சஞ்சித் தண்ணீரில் மூழ்கி உயிரிசந்துள்ளார். இதுகுறித்து குளித்தலை போலீசார் விசாரிக்கின்றனர்.

News August 19, 2024

கரூர்: அதிக வட்டி கேட்டு மிரட்டியவர் கைது

image

கரூர்: முள்ளிப்பாடி ஊராட்சி சேர்வைகாரன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் திருவேங்கடம் என்பவரிடம் ரூ.3.50 லட்சம் வட்டிக்கு வாங்கியுள்ளார். ஆனால், திருவேங்கடம் அதிக வட்டி கேட்டு மிரட்டி வந்துள்ளார். இதுவரை ரூ.28 லட்சம் வரை செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பாலவிடுதடி போலீசில் ரவி அளித்த புகாரின் பேரில், போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து திருவேங்கடத்தை கைது செய்துள்ளனர்.

News August 18, 2024

கரூர் மாவட்ட தலைப்பு செய்திகள்

image

1-கரூர் மாநகராட்சி வசூல் என்ற பெயரில் சுங்க கட்டணம் வசூல்
2-கரூரில் ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம்
3-குளித்தலை அருகே 9 வயது சிறுவன் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு
4-கரூர் டைமண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் அகடாமி சார்பில் மரம் வளர்ப்பு விழிப்புணர்வு குறித்து மாராத்தான் போட்டி

News August 18, 2024

கரூர் மாநகராட்சியில் வசூல் வேட்டை

image

கரூர் மாநகராட்சி வசூல் என்ற பெயரில் சுங்க கட்டணம் வசூல் ராயனூர் பகுதியில் உள்ள வாடகை கடையில் இறைச்சிக்கடை வைத்திருக்கும் கடைகளுக்கு ரூ.50 கட்டாயமாக வசூலிக்கின்றனர். மேலும், இது நகராட்சி மூலமாக டெண்டர் விடப்பட்டு வசூலிக்கப்படுகிறதா அல்லது தனிப்பட்ட நபர் இத்தகைய செயல்களை செய்து வருகின்றனரா என்று வணிகர்களும் பொதுமக்களும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

error: Content is protected !!