India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர்: வெள்ளியணை அருகே சூர்யா நகர் பகுதியில் சிமெண்ட் சாலை அமைப்பதற்காக பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், திமுக நிர்வாகி லோகநாதன் தனக்கு சொந்தமான பட்டா நிலம் இருப்பதால் சாலை போட வேண்டாம் என ஒப்பந்ததாரரிடம் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது வெள்ளியணை ஊராட்சி து.தலைவர் சிவக்குமார், லோகநாதனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டதில், லோகநாதனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிவக்குமாரை கைது செய்தனர்.
கரூரில் ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான்சந்தின் பிறந்தநாளான ஆக.29ஆம் தேதி தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுவதை சிறப்பிக்கும் வகையில் பள்ளி, கல்லூரி (ம) பொதுப்பிரிவு ஆண், பெண்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்க இன்று 29ஆம் தேதி காலை 8 மணிக்கு ஆதார் போன்ற ஆவணங்களுடன் மாவட்ட விளையாட்டரங்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
கரூரில் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின் படி (www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இன்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
கரூர், அரவக்குறிச்சி தாலுகா கூடலூர் கிராமத்தில் உள்ள செல்வக்குமார் திருமண மண்டபத்தில் இன்று மாலை 4 மணி அளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இதையொட்டி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த குறித்த தகவலை கரூர் மாவட்ட நிர்வாகம் இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் இந்த மாதத்திற்கான மாதாந்திர விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் வரும் (30-08-2024) அன்று வெள்ளிக்கிழமை 11 மணியளவில் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் முன்னிலையில் நடைபெறும் என்பதை தெரிவித்துள்ளனர். இதில் விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்து தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என அறிவித்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் இந்த மாதத்திற்கான மாதாந்திர விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் வரும் (30-08-2024) அன்று வெள்ளிக்கிழமை 11 மணியளவில் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் முன்னிலையில் நடைபெறும் என்பதை தெரிவித்துள்ளனர். இதில் விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்து தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என அறிவித்துள்ளனர்.
கரூர் கலெக்டர் தங்கவேல் செய்திக்குறிப்பு வெளியிட்டார். அதில், ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான்சந்தின் பிறந்தநாளான ஆக.29ஆம் நாளை தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுவதை சிறப்பிக்கும் வகையில் பள்ளி, கல்லூரி (ம) பொதுப்பிரிவு ஆண், பெண்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்க நாளை 29ஆம் தேதி காலை 8 மணிக்கு ஆதார் போன்ற ஆவணங்களுடன் மாவட்ட விளையாட்டரங்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
அரவக்குறிச்சி அரசு கலைக் கல்லூரி மாணவிகளான ஆதீஸ்வரி,யுவஸ்ரீ, ஆகியோர் தமிழ்நாடு கோ-கோ சங்கம் அனுமதியுடன், தேனி மாவட்டத்தில் பெண்களுக்கான மாநில அளவிலான ஜூனியர் கோ-கோ போட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர், உடற்கல்வித்துறை இயக்குனர், பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
கரூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று கலை பண்பாட்டு துறையின் சார்பாக கலைஞர்களுக்கு விருதுகளை கலெக்டர் தங்கவேல் வழங்கினார். இதில் கராத்தே, பரதநாட்டியம், நாடகம் தவில், ஓவியம் உள்ளிட்ட பல்வேறு துறையில் சிறந்து விளங்கிய 30 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இதில் கலை பண்பாட்டு துறை உதவி இயக்குனர் செந்தில்குமார், அரசு இசைப்பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
கரூர், குளித்தலை வட்டம் தோகைமலை ஒன்றியம் நாடக்காப்பட்டி கருப்பசாமி மகள் புனிதலட்சுமி தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் 627 மதிப்பெண் பெற்று 7.5% இட ஒதுக்கீட்டில் நீட் தேர்வில் மாநில அளவில் 14 வது இடமும் கரூர் மாவட்டம் அளவில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்று சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.