India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் நாளை மறுநாள் (ஜன. 4) மார்கழி பெரும் திருவிழா நடைபெற உள்ளது. ஜன-4 திருக்கொடியேற்றம், ஜன-6 இரவு மக்கள்மார் சந்திப்பு மற்றும் மக்கள்மார் சுற்று, ஜன-8 பஞ்ச மூர்த்தி தரிசனம், ஜன-10 கைலாச பர்வத தரிசனம், ஜன-12 திருத்தேர் வடம் தொட்டு இழுத்தல், சப்த வர்ண காட்சி, ஜன-13 ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.
குமரி மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் அழகு மீனா தலைமையில் நியாய விலை கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் இன்று (ஜன.2) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினைக்குமார் மீனா, உதவி ஆட்சியர் சுஷ்ஸ்ரீ குந்தியா உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவது குறித்து பேசப்பட்டது.
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவினை முன்னிட்டு குமரி சுற்றுலாதளத்தினை உலகதரத்திற்கு உயர்த்தும் வகையில் குமரியில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குமரிக்கு வரும் வெளிநாடு, வெளிமாநிலம், வெளிமாவட்டம் மற்றும் உள்ளூர் சுற்றுலா பயணிகள் காலை சூரிய உதயம், சூரியன் மறைவு ஆகியவற்றை கண்டுகளிப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வைத்து நாளை (3ம் தேதி ) அன்று முற்பகல் 10.30 மணிக்கு மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் இதர அரசுத்துறைகளால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவர்களின் குறைகள், கோரிக்கைகள் அன்று கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சமீபத்தில் வருகை தந்த கவிஞர் வைரமுத்து கலைவாணர் என் எஸ் கிருஷ்ணனின் வீட்டை சென்று பார்வையிட்டு அது சிதலமடைந்து இருப்பதை கண்டு அவரது முகநூல் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.1941இல் கட்டப்பட்ட ‘மதுரபவனம்’ மாளிகை ஓர் உயரமான நோயாளியாக உருமாறிக் கிடந்தது என்று குறிப்பிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து வீட்டை சீரமைக்க கோரிக்கைகள் எழுந்து வருகின்றது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. இதனை அடுத்து ரேஷன் கடைகள் மூலம் இதற்கான டோக்கன் நாளை(டிச.3) முதல் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து குமரி மாவட்டத்திலும் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வீடு வீடாக நாளை முதல் வழங்கப்பட இருக்கிறது.
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குமரி விவேகானந்தர் பாறைக்கு அருகில் வள்ளுவருக்கு சிலை அமைக்க 1979-ல் எம்ஜிஆர் ஆட்சியில் அடிக்கல் நாட்டிய வரலாறை திமுக மறைக்கிறது. குமரி கண்ணாடி பாலத்தில் வள்ளுவரை தரிசிக்க கட்டணம் வசூலிக்கும் எண்ணம் வியாபாரத்தனம் மட்டுமல்ல, திருவள்ளுவரை இழிவுபடுத்தும் செயல், விவேகானந்தரை நேசிக்கும் மக்களை அவமதிக்கும் செயல்” என்றுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தெற்கே பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மன்னார் வளைகுடா வழியாக வடக்கில் இருந்து பலத்த சூறைக்காற்று கடல் பகுதியில் வரும் 5ம் தேதி வரை மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் கடலுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என கன்னியாகுமரி தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
#இன்று(ஜன.,2) காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிற்சாலைகளுக்கான மருத்துவமனையில் மருத்துவர் நியமிக்க வலியுறுத்தி அரசு ரப்பர் கழகத் தொட்ட தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் கீரிப்பாறை தொழிற்சாலை முன்பு 33வது நாளாக உண்ணாவிரத போராட்டம்.#காலை 10:30 மணிக்கு உடை அடி ஆதிதிராவிடர் நல பள்ளியில் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக காத்திருப்பு போராட்டம்.
குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக உள்ள சுந்தர வதனம் சென்னை கியூ பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட புதிய காவல்துறை கண்காணிப்பாளராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வரும் 6ம் தேதி(திங்கட்கிழமை) கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை புதிய கண்காணிப்பாளராக பொறுப்பேற்க இருக்கிறார். SHARE IT.
Sorry, no posts matched your criteria.