Kanyakumari

News December 29, 2024

ஆட்டோ டிரைவர் கொலை: கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்

image

நாகர்கோவில் வடசேரியை சேர்ந்தவர் மோகன். ஆட்டோ டிரைவரான இவரை ஷாஜி கத்தியால் குத்தி கொலை செய்தார். ஷாஜி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை செய்தபோது, மோகனுக்கும் பெண் ஒருவருக்கும் பழக்கம் இருந்து வந்ததாகவும், தற்போது அந்தப் பெண் ஷாஜியுடன் பழகி வந்துள்ளார். இதனால் மோகன் அந்தப் பெண்ணுக்கு கொடுத்த பணத்தை கேட்டதால், மோகனை ஷாஜி கத்தியால் குத்தி கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

News December 29, 2024

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா: குமரி பிரதிநிதிகள் புறக்கணிப்பு?

image

குமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நாளை (டிச.30) முதல் 3 நாட்கள் நடக்கிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் கலந்து கொள்கிறார். இந்த விழா அழைப்பிதழில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை எனக்கூறப்படுகிறது. இந்த செயல் குமரி மாவட்டத்தில் பேசு பொருளாகியுள்ளது. இதுகுறித்த உங்கள் கருத்து என்ன மக்களே?

News December 29, 2024

மல்லிகை பூ விலை ஒரே நாளில் ரூ.600 உயர்வு

image

தோவாளை மலர் சந்தையில் மல்லிகை பூ விலை இன்று ரூ.2600 ஆக  உள்ளது. நேற்று மல்லிகை பூ விலை கிலோ ரூ.2000 க்கு விற்ற நிலையில் இன்று ரூ.600உயர்ந்துள்ளது. மலர் சந்தைக்கு மல்லிகை பூ வரத்து குறைவு காரணமாகவும், பனிப்பொழிவு காரணமாக பூ உற்பத்தி குறைந்துள்ளதாலும் மல்லிகை பூ தேவை அதிகமாக உள்ளதாலும் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரி மகேஷ் இன்று தெரிவித்தார்.

News December 29, 2024

4 எஸ்.பி தலைமையில் 1500 போலீசார் குவிப்பு 

image

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நாளை தொடங்கி ஒன்றாம் தேதி வரை நடைபெறுகிறது. இவ்விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதில் 4 மாவட்ட எஸ்பிக்கள் உட்பட 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News December 29, 2024

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சைக்கிள் போட்டி

image

முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வண்ணம் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் மாவட்ட அளவிலான விரைவு சைக்கிள் போட்டிகள் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இவ்வாண்டும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக 4.1.25 அன்று காலை 8 மணிக்கு புத்தேரி அப்டா சந்தை அணுகு சாலையில் நடைபெறவுள்ளது. *ஷேர்*

News December 29, 2024

புத்தாண்டு விழாவில் கடலில் இறங்க அனுமதி மறுப்பு

image

புத்தாண்டு விழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா மையங்களில் கடலில் இறங்குவதற்கு காவல்துறை தடை விதித்துள்ளது. டிச.31 அன்று மாலை முதல் ஒன்றாம் தேதி வரையிலும் சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக இந்த நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

News December 29, 2024

குமரிக்கு 2 புதிய ஏ.டி.எஸ்.பி-கள் நியமனம்

image

நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி நாகசங்கர் குமரி மாவட்ட சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதை போன்று சென்னை பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி கலையரசன் குமரி மாவட்ட தலைமை இடத்து ஏ.டி.எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. இவர்கள் விரைவில் கன்னியாகுமரி மாவட்ட ஏடிஎஸ்பிகளாக பதவி ஏற்க உள்ளனர்.

News December 29, 2024

நாகர்கோவில் சென்னை இடையே 2 ரயில்கள் இயக்க பரிந்துரை

image

பொங்கல் பண்டிகை முன்னிட்டு தாம்பரம் – கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயிலும் சென்னை சென்ட்ரல் நாகர்கோவில் இடையே மற்றொரு சிறப்பு ரயிலும் இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் – கன்னியாகுமரி ரயில் விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி, விருதுநகர் வழியாகவும், சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் ரயில் ஜோலார்பேட்டை, சேலம், கரூர், திண்டுக்கல், விருதுநகர் வழியாகவும் இயக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

News December 28, 2024

குமரி ஆர்ப்பாட்டத்திற்கு எம்.எல்.ஏ அழைப்பு

image

அண்ணா பல்கலைக்கழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்தும், வதிமுக அரசின் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அஇஅதிமுக சார்பில் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே (30.12.2024) அன்று காலை 10 அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில், கட்சி நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு தளவாய்சுந்தரம் அழைப்பு விடுத்துள்ளார்

News December 28, 2024

ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்டது ஏன்? புதிய தகவல்

image

நாகர்கோவில் வடசேரியைச் சேர்ந்தவர் மோகன். ஆட்டோ டிரைவரான இவர் ஈசாந்திமங்கலம் பகுதியைச் சேர்ந்த சாஜி (29) என்பவரிடம் சுமார் 45 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இந்த கடனை அவர் கொடுக்கவில்லை. இன்று மோகன் ஒழுகினசேரியில் உள்ள கடை ஒன்றிற்கு வந்தார். அப்போது சாஜி அங்கு வந்து அவரிடம் பணம் கேட்டார். இதில் ஏற்பட்ட தகராறில் சாஜி கத்தியால் மோகனை குத்தவே அவர் இறந்து போனார். 

error: Content is protected !!