India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
“முன்னாள் பாரத பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நினைவு தினத்தில் நமது தேசத்திற்காக அவர் ஆற்றிய சேவைகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவோம்” என கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்தியா தன்னிறைவு அடைவதற்கு திட்டங்கள் வகுத்து வழிநடத்திய தலைவருக்கு அஞ்சலி என கூறியுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 2,600 டன் ரேஷன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது. அந்த அரிசி சரக்கு ரெயில் வேகன்கள் மூலமாக கொண்டு வரப்பட்டன. மொத்தம் 42 வேகன்களில் வந்த அரிசி மூடைகள் நேற்று நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் அந்த வேகன்களில் இருந்து லாரிகளில் மூடைகள் ஏற்றப்பட்டு உணவு கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை 520 கன அடியும் பெருஞ்சாணி அணைக்கு 135 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 690 பெருஞ்சாணி அணையில் இருந்து 360 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 339 கன அடியும் பெருஞ்சாணி அணைக்கு 125 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருந்தது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின்கீழ் 35 % அல்லது ரூ.3.50 லட்சம் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கப்படுகிறது. புதிரை வண்ணார் சமூகத்தினர் குமரி தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலத்தை அணுகி உரிய ஆவணங்கள் சமர்பித்து தொழில் கடன் பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இம் மாதம் 13, 14, 15, 16 தேதிகளில் கடலுக்குள் மீன்பிடிக்க போவதை தவிர்ப்பது நல்லது ,
கடல் பகுதியில் சூறைக்காற்று கிழக்கில் இருந்து தெற்கு ,தென்மேற்கு திசையை நோக்கி மணிக்கு 35 முதல் 45 km வேகத்தில் வீசும் வாய்ப்பு உள்ளது எனவே மீனவர்கள் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது நல்லது என்று கன்னியாகுமரி மாவட்ட தனியார் வானிலை ஆய்வு மைய தெரிவித்து
#சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் மார்கழித்திருவிழாவில் மாலை 4 மணிக்கு அஷ்டாபிஷேகம், இரவு 8 மணிக்கு சிதம்பரேஸ்வரர் பவனி, # குருசடி கோடி அற்புதர் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் காலை 10 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, #இந்திய பாரம்பரிய கலை இலக்கிய பேரவை சார்பில் மாலை 5 மணிக்கு தக்கலை அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் “அண்டியாபீசு” நாவல் அறிமுக விழா ஆகியன நடைபெறும்
# காலை 9 மணி – கீரிப்பாறையில் அரசு தோட்ட தொழிலாளர்கள்கோரிக்கைகளை வலியுறுத்தி 41 வது நாளாக போராட்டம் நடக்கிறது. காலை 10 மணி பரக்குன்று சந்திப்பில் நியாய விலை கடையை திறக்க கேட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. காலை 10 மணி அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் விவேகானந்த கேந்திராவில் கருத்தரங்கம் நடக்கிறது
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தலைமையில் இன்று (11.01.2025) காலை 9.30 மணிக்கு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில், மாவட்ட சுற்றுலா துறை சார்பில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அனைவரும் வருகை தந்து நிகழ்ச்சியினை சிறப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், கொலைமிரட்டல் விடும் நோக்கத்துடனோ அல்லது இரு பிரிவினர் இடையே பிரச்சனையை தூண்டும் நோக்கத்துடனோ சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். தனது நண்பரை கொலை செய்தவர்களுக்கு மிரட்டல் விடுத்து பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேற்று (ஜன.10) வெளியிட்டுள்ள
செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் திருவள்ளுவர் தினத்தையொட்டி வருகிற 15ம் தேதி, குடியரசு தினமான வருகிற 26ம் தேதி ஆகிய 2 நாட்களும் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுபானக் கூடங்களும் செயல்படாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.