India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி மாவட்ட புதிய எஸ்பியாக ஸ்டாலின் நியமிக்கப்பட்டு பதவி பொறுப்பேற்றுள்ளார். அவர் பதவி பொறுப்பேற்ற பின்னர், இரவு நேரத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சாதாரண உடையில் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ரவுடிகள் நடமாட்டம், தேவை இல்லாமல் இரவு நேரங்களில் பொது இடங்களில் உலாவுவோர் போன்றவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, மாவட்டத்தில் 15 லட்சத்து 84 ஆயிரத்து 362 வாக்காளர்கள் உள்ளனர்.வாக்காளர் பட்டியலில் இருந்து 9,102 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு, 28,882 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 12,808 பேர். பெண் வாக்காளர்கள் 17,072 பேர். இதர வாக்காளர்கள் 2 பேர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று(ஜன.6) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி, மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். கன்னியாகுமரி, நாகர்கோவில், பத்மநாபபுரம், விளவங்கோடு ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். குளச்சல் மற்றும் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.
தமிழக ஆளுநரின் நடவடிக்கைகளை கண்டித்து, குமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதில், “தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநர், அவரைக் காப்பாற்ற அதிமுக-பாஜக கள்ளக் கூட்டணி” என நாகர்கோவில் உட்பட பல்வேறு பகுதிகளில் #GetoutRavi என்று சுவரொட்டிகள் அச்சிட்டு ஒட்டியுள்ளனர். இவை அப்பகுதியில் பேசுபொருளாகி உள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது ‘டீ’ கடைகள் இரவு 11 மணிக்குமேல் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகள் இரவு 11 மணிக்கு மேல் செயல்படக்கூடாது என்று மாவட்ட காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1,2 அணைகளில் முறையே 12.86 மற்றும் 12.96 அடி நீரும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 41.63 அடி நீரும், 77அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணியில் 56.6 அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில் 17.4 அடி நீரும், 54.12 அடி கொள்ளளவு கொண்ட மாம்பழத்துறையாறில் 50.36 அடி நீரும் 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 15.6 அடி நீரும் இருப்பு உள்ளது.
“தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இடையூறு ஏற்படுத்தும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, இனி தமிழ்நாட்டில் இருப்பதில் நியாயம் இல்லை..#Get out Ravi” என்று சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த திமுக தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த சுதன் மணி இதனை ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தக்கலை அருகே பறைக்கோடு கோவில்விளை பகுதியை சேர்ந்தவர் அமுதலதா(55), இவரது மகன் மெல்பின் ராஜ்(24) இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடு கட்டியது, மகள் திருமண செலவு என ரூ.20 லட்சம் கடன் உள்ளதாக கூறப்படுகிறது. இதை கட்ட முடியாததால், நேற்று(ஜன.6) விஷம் குடித்த இருவரும் இன்று அதிகாலை மருத்துவமனை கொண்டுபோகும் வழியில் உயிரிழந்துள்ளனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
#குமரியில் இன்று(ஜனவரி 7) காலை 10 மணிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து திமுக சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.#காலை 11 மணிக்கு ஊராட்சி செயலர்களுக்கு சிறப்பு நிலை தேர்வு நிலை வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் மறியல் போராட்டம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் விலை நிலையற்ற நிலையில் ஏறி இறங்கி வருகிறது. கடந்த 31ஆம் தேதி 100 கிலோ ரப்பர் 19 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில், கடந்த 3ஆம் தேதி 19,200 ரூபாயாக உயர்ந்தது. இந்த நிலையில் இன்று ரப்பர் விலை 19,000 ரூபாயாக குறைந்துள்ளது. ரப்பர் விலை நிலையற்ற நிலையில் இருந்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.