India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரியில் சமுத்திர ஆரத்தி அறக்கட்டளை சார்பில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு திரிவேணி சங்கமம் பகுதியில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி இன்று (ஜன.13) நடைபெறுகிறது. அறக்கட்டளை தலைவர் ராஜகோபாலன் தலைமையில் நடைபெறும், இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சரும் நடிகருமான சுரேஷ்கோபி கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
குமரி, குருவியோடு பகுதியை சேர்ந்த சஜின்மோன் – ராஜிகா தம்பதியரின் குழந்தை சாய் ரியாஸ். தற்போது 2 வயது 8 மாதமான இக்குழந்தை 3 மாதங்களுக்கு முன் 50 மீட்டர் தூரத்தை 18 விநாடிகளில் ஓடி வேர்ல்டு வைடு ரெக்கார்டு(World Wide Book Of Record) புக்கிலும், 100 மீட்டர் தூரத்தை 40 விநாடிகளில் ஓடி இந்திய சாதனை புத்தகத்திலும்(India Book Of Records) இடம் பிடித்துள்ளார். சாயை பலரும் பாராட்டி வருகின்றனர்.
குமரி ஆட்சியர் அழகுமீனா இன்று செய்தி வெளியிட்டுள்ளார். அதில்,“குமரி மாவட்டத்தில் அனைத்து அரசு துறை வாரியங்கள், கழகங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஜன. 22, 23 ஆம் தேதிகளில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெற உள்ளது” என தெரிவித்துள்ளார
(ஜன12)
தன்னுடைய ஆழ்ந்த ஆன்மீகம் மற்றும் தேசபக்தி உரைகள் மூலம் இளைஞர்களை ஊக்கப்படுத்தி, அவர்களைச் சிறந்த சிந்தனையாளர்களாகவும், தலைவர்களாகவும் உருவாக்கிய வீரத் துறவி சுவாமி விவேகானந்தர் அவர்கள் பிறந்த தினம் இன்று.
பாரதத்தின் ஆன்மீகம் மற்றும் கலாச்சாரத்தின் பெருமையை, உலக அரங்கிற்குக் கொண்டு சென்றவர். ஒட்டு மொத்த தேசத்திற்கும் ஆன்மீக வழிகாட்டியாக, கலங்கரை விளக்கமாக வெளிச்சம் தந்தவர்.
கன்னியாகுமரி மாவட்ட SP-யாக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், மாவட்டத்தில் சீருடை அணிந்து செல்லும் காவலர்கள் ‘HELMET’ அணியாமல் சென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்து பிரிவு போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்ததோடு, நடவடிக்கை குறித்த விவரங்களை தனக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று(ஜன.11) போலீசாரின் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. அப்போது பேசிய SP ஸ்டாலின், “போலீசாருக்கு வார விடுமுறை கட்டாயம் ஆகும். எனவே வார விடுமுறை அளிக்க வேண்டும். இதில் ஏதாவது குறைபாடு இருந்தால் என்னிடம் தகவல் தெரிவிக்கலாம். மன அழுத்தத்தை போக்க வாரம் ஒருமுறை யோகா நடத்தப்படும். போலீசார் காவல்துறையின் மாண்பை காப்பாற்ற வேண்டும்” என்றார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய(IS.RO) தலைவராக ஜன.14 அன்று பொறுப்பேற்க உள்ள விஞ்ஞானி நாராயணன், இன்று(ஜன.12) தனது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். #மாலை 4 மணிக்கு நாகர்கோவில் காட்டுவிளையில் உள்ள அவரது பெற்றோரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். #மாலை 6.30 மணி அளவில் அவரது ஊரில் உள்ள கோவிலில் சாமிதரிசனம் செய்கிறார்.
#இன்று(ஜன.11) காலை 10:30 மணிக்கு தடிக்காரன் கோணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவர் பணியில் இருப்பதை உறுதி செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் தடிக்காரன் கோணம் சந்தை அருகே ஆர்ப்பாட்டம் நடக்கிறது.#காலை 9 மணிக்கு விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர் தின வழக்கறிஞர்கள் கருத்தரங்கம் விவேகானந்தா கேந்திர வளாகத்தில் நடைபெறுகிறது.
குமரி SP ஸ்டாலின் நேற்று(ஜன.11) கூறியதாவது, “மாவட்டத்தில் குற்றங்களைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இரவு 11 மணிக்குமேல் கடைகளை திறக்கக்கூடாது என கூறப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே சமயம் பஸ் நிலையங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் இரவு நேரம் கடைகள் செயல்பட தடை விதிக்கப்படவில்லை” என்றார்.
நாகர்கோவிலில் இருந்து கட்சிக்குடா ரயில் நள்ளிரவு 12.30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு கட்சிக்குடா செல்வது வழக்கம். இன்று(ஜன.12) நள்ளிரவு புறப்பட வேண்டிய ரயில் அதிகாலை 4.15 மணிக்கு மூன்று மணி நேரம் 45 நிமிடம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. கட்சிக்குடாவில் இருந்து நாகர்கோவில் வரும் ரயில் தாமதமாக வருவதை தொடர்ந்து தாமதமாக செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Sorry, no posts matched your criteria.