Kanyakumari

News July 5, 2025

குமரி அணைகளில் இன்றைய நீர்மட்டம் விபரம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஜூலை.5) நீர்மட்ட விவரம்; பேச்சிப்பாறை அணை 43.05 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை 71.65 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை 13.42 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை 13.51அடி (18 அடி) நீர் உள்ளது. பேச்சிப்பாறைக்கு 482 கனஅடி, பெருஞ்சாணிக்கு 187 கன அடி நீர்வரத்தும் உள்ளது.

News July 5, 2025

நாகர்கோவில் ரயில் 1 மணி நேரம் தாமதம்

image

திண்டுக்கல்லில் இருந்து நாகர்கோவில் வரை வாரம் 4 நாட்கள் மட்டும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் இரவு 9 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும். ஆனால் நேற்று ஒரு மணி நேரம் தாமதமாக வந்தது. இதனால் ரயில் பயணிகள் அவதி அடைந்தனர். இந்நிலையில் ரெயில் பணிகள் சிலர் ரயில்வே மேலாளர் அலுவலகம் சென்று அங்கிருந்த பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

News July 5, 2025

குமரியில் 120 கிமீ தேசிய நெடுஞ்சாலை அமைக்க நடவடிக்கை

image

தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரி வரை சுமார் 120 கி.மீ தூரத்திற்கு NH 32 அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை தற்போது உள்ள சாலையில் இருந்து தனியாக அமைக்கப்படுவதால், சுமார் 600 எக்டேர் வரை நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக தாசில்தார்கள் நியமிக்கப்பட்டு, எந்தெந்த சர்வே எண்களில் உள்ள நிலங்கள் வழியாக சாலை அமைய உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

News July 5, 2025

குமரி மாவட்ட மின்சார வாரியம் அதிகாரிகள் எண்கள்

image

▶️தக்கலை – 9445854517
▶️மூலச்சல் – 9445854518
▶️வெள்ளிச்சந்தை – 9445854519
▶️திக்கனம்கோடு – 9445854520
▶️இரணியல் -9445854521
▶️குளச்சல் – 9445854523
▶️செம்பொன்விளை – 9445854524
▶️மணவாளக்குறிச்சி -9445854525
▶️பரசேரி – 9445854526
இதர பகுதி எண்களை இங்கே <>கிளிக்<<>> செய்து தெரிந்து கொள்ளலாம்.

News July 5, 2025

மானியத்தில் காய்கறி விதைகள், பல செடி விநியோகம்

image

குமரி மக்களின் அன்றாட காய்கறி தேவைகளை நிறைவு செய்யவும், வீட்டுத்தோட்டங்களில் காய்கறிகள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் விதமாக தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை மற்றும் கீரை போன்ற 6 வகையான காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு 100% அரசு மானியத்தில் வழங்கப்படுகிறது. இந்த தொகுப்புகளை பெற அந்தந்த வட்டார தோட்டக்கலை, வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 5, 2025

ஆட்சியரிடம் மனு வழங்கிய நாம் தமிழர் கட்சியினர்

image

குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மீனவர்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமில் அனைத்து மீனவ பிரதிநிதிகள், மீனவ தொழிற்சங்கங்கள் ,  உள்நாட்டு மீனவ அமைப்புகள் கலந்து கொண்டனர். ONGC நிறுவனம் கன்னியாகுமரி கடல் பரப்பில் அமைக்க திட்டமிட்டிருக்கும் ஹைட்ரோகார்பன் எரிகாற்று மற்றும் கச்சா எண்ணெய் திட்டத்தை கைவிட கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆட்சியரிடம் வலியுறுத்தபட்டது.

News July 4, 2025

நாகர்கோவில் – தாம்பரம் ரயில் ஜூலை 14 வரை நீடிப்பு

image

ஞாயிறு தோறும் நாகர்கோவிலில் இருந்தும் திங்கட்கிழமை தோறும் தாம்பரத்தில் இருந்தும் இயங்கும் நாகர்கோவில் தாம்பரம், தாம்பரம் நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் ஜூலை 6 முதல் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் – தாம்பரம் ரயில் நெல்லை, மதுரை, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி வழியாக நேர் பாதையில் செல்லும் தாம்பரம் – நாகர்கோவில் ரயில் சிதம்பரம் மயிலாடுதுறை தஞ்சாவூர் வழியாக இயக்கப்படும். *ஷேர்

News July 4, 2025

சுற்றுலா பயணிகளுக்கு உதவ செயற்கை நுண்ணறிவு ரோபோ

image

கன்னியாகுமரியில் புறக்கவல் நிலையம் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சுற்றுலா பயணிகளுக்கு உதவுவதற்காக அனைத்து மொழிகளும் பேசும் வகையில் செயற்கை நுண்ணறிவு ரோபோ ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காதல் ஜோடிகளின் அத்துமீறலை தடுக்க சாதாரண உடையில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொள்வார்கள் என கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

News May 7, 2025

மே தின பேரணியில் கலந்து கொண்ட குமரி எம்எல்ஏ

image

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு குமரி மேற்கு மாவட்ட ஐஎன்டியுசி தொழிற்சங்கம் சார்பில் குலசேகரத்தில் மே தின விழா பேரணி மற்றும் பொதுக்கூட்டம் இன்று (மே 1) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் நடைபெற்ற பேரணியிலும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

News May 7, 2025

குமரி விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் நாற்றங்கால் பணிகளை தொடங்காமல் உள்ள விவசாயிகள் அதற்கான பணிகளை உடனடியாக மேற்கொண்டு மே மாத இறுதிக்குள் பணிகளை முடித்து ஜூன் மாத தொடக்கத்தில் அணையில் இருந்து தண்ணீர் திறந்தவுடன் வயல்களில் நெல் நாற்று நடவு பணிகளை மேற்கொள்ள முன் ஏற்பாடுகளை செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

error: Content is protected !!