Kanyakumari

News January 10, 2025

குமரியில் கழிவுகள் ஏற்றி வந்த வாகனங்கள் பறிமுதல்

image

குமரி, பூசப்பட்டு பகுதியில் உணவு கழிவுகள் ஏற்றி வந்த 5 வாகனங்களை பறிமுதல் 6 செய்து, 9 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கைதான 9 பேரும் அசாம், கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் குறித்து முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News January 10, 2025

பெட்ரோல் பங்கில் ரூ 1 கோடி மோசடி – 2 பேர் கைது

image

வேர்க்கிளம்பி சசிராஜின் பெட்ரோல் பங்கில் மேலாளராக செம்பருத்திவிளை அனீஷ், பணியாளர்களாக அனீஷின் தம்பி அஸ்வின், குட்டைக்குழி ஆகாஷ் ஆகியோர் இருந்தனர். இவர்கள் பெட்ரோல் வரவு செல்வுகணக்குகளில் ரூ.1 கோடி 9 லட்சம் அளவில் மோசடி செய்ததை அறிந்த சசிராஜ், அவர்களிடம் பணத்தைகேட்டபோது கொலைமிரட்டல் விடுத்ததையடுத்து குமரி எஸ்.பியிடம் புகார் அளித்தார். இதையடுத்து அனீஷ், ஆகாஷ் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

News January 9, 2025

குமரி மாவட்ட அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவsம்

image

18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1,2 அணைகளில் முறையே 12.53மற்றும் 12.63அடி நீரும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 41. 14அடி நீரும், 77அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணியில் 55.9அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில் 17.அடி நீரும், 54.12அடி கொள்ளளவு கொண்ட மாம்பழத்துறையாறில் 50.03அடி நீரும் 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 15.6 அடி நீரும் இருப்பு உள்ளது.

News January 9, 2025

குமரியில் படகு போக்குவரத்து ரத்து

image

குமரியில் இன்று திடீரென்று பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. கடலில் ராட்சதலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசின10அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக வீசின. இதை தொடர்ந்து கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

News January 9, 2025

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

இன்று காலை 9 மணிக்கு அரசு ரப்பர் கழக மருத்துவமனையில் மருத்துவர் நியமிக்க கேட்டு அரசு ரப்பர் தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கீரிப்பாறை ரப்பர் தொழிற்சாலை முன்பு 39 வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம். காலை 11 மணிக்கு ஆரல்வாய்மொழி பூங்கா முன்பு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் காத்திருப்பு போராட்டம்.மாலை 5.30 மணிக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த கோரி CPS ஒழிப்பு இயக்கம் நாகர்கோவிலில் பேரணி.

News January 9, 2025

குமரி போலீஸ் ஸ்டேஷன்களில் ஒரே நாளில் 61 வழக்குகள் பதிவு

image

குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் கடந்த 3ம் தேதி பதவி ஏற்றபின் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு பல்வேறு அதிரடி உத்தரவுகளை போலீசாருக்கு பிறப்பித்துள்ளார். போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது 15 நாட்களுக்குள் தீர்வு காணவேண்டும் என உத்தரவிட்டுள்ளார். நேற்று மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் திருட்டு, அடிதடி உட்பட 61 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News January 8, 2025

கோழிக்கழிவுகளை ஏற்றி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை 

image

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கன்னியாகுமரி மாவட்ட எல்லைக்குள் வரும் கோழிக்கழிவு மற்றும் மருத்துவக் கழிவு கொண்டு வரும் வாகனங்களை கண்காணித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோழிக்கழிவு மற்றும் மருத்துவ கழிவு கொண்டு வரும் வாகனங்களின் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர்கள் மீது இந்த நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

News January 8, 2025

குமரியின் மைந்தனை எண்ணி வியக்கிறேன் : முதல்வர்

image

தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தில் எளிய பின்னணியில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து, உதவியாளர் நிலையில் ISRO – வில் பணிக்குச் சேர்ந்த நாராயணன் இன்று அதன் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்திருக்கிறார் எனில், அதன் பின் எத்தகைய ஆர்வமும், கடின உழைப்பும் இருக்கும் என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News January 8, 2025

குமரியின் பெருமை தலை நிமிர்ந்து நிற்கிறது: சுரேஷ் ராஜன்

image

இஸ்ரோவின் புதிய தலைவராக நமது குமரி மாவட்டத்தை சேர்ந்த முனைவர் வி.நாராயணன் நியமிக்கப்பட்டிருக்கும் செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அரசுப் பள்ளியில் படித்து இன்று இஸ்ரோவின் தலைவராக உயர்வு பெற்றதை எண்ணி உலக அரங்கில் குமரி மாவட்டத்தின் பெருமையும், தமிழ்நாட்டின் பெருமையையும் தலைநிமிர்ந்து நிற்கிறது என முன்னாள் எம்.எல்.ஏ சுரேஷ் ராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

News January 8, 2025

‘ISRO’ புதிய தலைவருக்கு குமரி எம்பி வாழ்த்து

image

‘ISRO’ புதிய தலைவராக மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்டிருக்கும் வி.நாராயணனை மனதார வாழ்த்துகிறேன். அவரது தலைமையில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி இன்னும் பல சாதனைகளை படைக்கும் என நம்புகிறேன். நாராயணன் நமது கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது நம் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் செய்தி என்று குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!