Kanyakumari

News July 7, 2025

குமரியில் இடைநிலை ஆசிரியர் இடம் மாறுதல் கலந்தாய்வு

image

குமரி மாவட்டத்தில் அரசு பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு பெறுவதற்கான கலந்தாய்வு கடந்த மூன்றாம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் இடம் மாறுதல் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. 11-ம் தேதி வரை இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது. இடம் மாறுதல் கூறி விண்ணப்பித்தவர்கள் வரிசைப்படி கலந்தாய்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News July 7, 2025

குமரியில் இ- ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

image

தமிழக இணையம் சார்ந்த தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இ-ஸ்கூட்டர் வாங்க ஆர்வமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு குமரி மாவட்ட தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தை நேரடியாக அணுகலாம். இ- ஸ்கூட்டர் வாங்க உதவும் உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News July 6, 2025

கணவரை கத்தியால் குத்தியதாக மனைவி மீது வழக்கு

image

அஞ்சுகிராமத்தை சேர்ந்த துரைராஜிடம் அவரது மனைவி சம்பள பணத்தை கேட்டுள்ளார். இதில், அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் கணவர் துரைராஜை அவரது மனைவி நெஞ்சில் கத்தியால் குத்தினாராம். இதில் துரைராஜ் படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக அஞ்சுகிராமம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News July 6, 2025

வேண்டிய பலன் அருளும் ஆதிகேசவ பெருமாள் கோயில்

image

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில் 87ஆவது திவ்யதேசம். 16,008 சாளக்கிராமத்தால் ஆன பெருமாள், மேற்கு நோக்கி 22 அடியில் அருள்பாலிக்கிறார். இங்கு 12 சிவன் கோயில்களையும் தரிசித்து, பெருமாளையும் வணங்கினால் மறுபிறப்பு கிடையாது. வேண்டிய பலன்களைத் தரும் பெருமாள். புரட்டாசி, பங்குனி மாதங்களில் சூரிய ஒளி மூலவர் மீது படுவது சிறப்பு. இதை *SHARE* பண்ணுங்க.

News July 6, 2025

புதிய 25 வழித்தட பேருந்துகள் விவரம்

image

புதிய வழித்தட பேருந்துகள் விவரம்:
38A நாகர்கோவில்-புத்தன்துறை, 15L நாகர்கோவில்-யாக்கோபுரம், 15V நாகர்கோவில்-வடக்கன்குளம், 4BV நாகர்கோவில்-காற்றாடிவிளை, 38P நாகர்கோவில்-பிலாவிளை, 14E/V நாகர்கோவில்-முட்டம், 4H நாகர்கோவில்-திடல், 33C நாகர்கோவில்-கண்ணன்பதி, 4N நாகர்கோவில்-சுருளகோடு, 5/A நாகர்கோவில்-குளச்சல், 5D/PHS நாகர்கோவில்-வாணியாகுடி, 3 நாகர்கோவில்- கண்ணன்குளம்.

News July 6, 2025

ஆதார் மூகாமில் 9000 பேர் பயன் – ஆட்சியர்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக அகஸ்தீஸ்வரம் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் முகாம்கள் நடைபெற்றது. இதில் ஒன்பதாயிரத்திற்கும் மேலான பயனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்துள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார். தொடர்ந்து முகாம்கள் நடைபெற இருப்பதாகவும் அவர் கூறினார்.

News July 6, 2025

கைவினை தொழிலாளர்களுக்கு மானியத்துடன் ரூ.3 லட்சம் கடன்

image

குமரி மாவட்ட தொழில் மையம் சார்பில் கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் கடன் உதவி வழங்குவது தொடர்பாக வங்கியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நாகர்கோவிலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழில் ஆணையர் நிர்மல் ராஜ் பேசும் போது கைவினை தொழிலாளர்களுக்கு மானியத்துடன் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்படுகிறது என்றார். இதில் அதிகபட்சம் ரூ.50,000 வரை மானியம் வழங்கப்படும் என்றார்.

News July 6, 2025

பி.எஸ்.என்.எல் தரை வழி மறு இணைப்பு மேளா

image

பி.எஸ்.என்.எல் தரைவழி இணைப்பு பெற்று பணம் செலுத்தாததால் துண்டிக்கப்பட்டவர்களுக்கு மறு இணைப்பு வழங்குவதற்கான  மேளா  ஜூலை.9 அன்று நாகர்கோவில் கோர்ட் ரோடு பி.எஸ்.என்.எல் பொதுமேலாளர் அலுவலகத்தில் காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற உள்ளது. இணைப்பு துண்டிக்கப்பட்டவர்கள் பாக்கியை தள்ளுபடியுடன் செலுத்தி மறு இணைப்பு பெற்றுக் கொள்ளலாம் என பி.எஸ்.என்.எல். நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

News July 6, 2025

நாகர்கோவில் எம்எல்ஏ கோரிக்கை நிறைவேறியது

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் “மினி டைடல் பார்க்” அமைப்பதற்காக
நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் MR காந்தி தமிழக சட்டமன்றத்தில்
21-03-2025 அன்று கோரிக்கை வைத்தார். அதை தமிழக அரசு பரிசீலனை செய்து அதற்கான ஒப்புதல்களை இன்று வழங்கி இருக்கிறது. இதைஅடுத்து எம்.ஆர்.காந்திக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

News July 5, 2025

குமரியில் 7 வருவாய் ஆய்வாளர்கள் துணை தாசில்தாராக பதவி உயர்வு

image

திருவட்டார் முதுநிலை ஆய்வாளர் சாந்தி தேர்தல் பிரிவு துணை தாசில்தாராகவும் நாகர்கோவில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் அருள் கல்குளம் தாலுகா மண்டல துணை தாசில்தாராகவும் ஆட்சியர் அலுவலக ஐ பிரிவு முதுநிலை வருவாய் ஆய்வாளர் பிரபா இ பிரிவு தலைமை உதவியாளராகவும் இன்று நியமிக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் 7 பேர் வருவாய் ஆய்வாளர்கள் துணை தாசில்தாராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

error: Content is protected !!