India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்ட கடலோர காவல் படையின் சார்பில் மீனவ இளைஞர்களுக்கான 60 நாள் பயிற்சி முகாம் இன்று(ஜன.31) காலை 11 மணிக்கு கன்னியாகுமரி அரசு தொடக்கப்பள்ளி பின்புறம் உள்ள பேரிடர் மேலாண்மை மையத்தில் நடைபெறுகிறது.இந்த பயிற்சி முகாமை குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார்.இந்த தகவலை குமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 83 இன்ஸ்பெக்டர்கள் டிஎஸ்பி களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதில் கொல்லங்கோடு இன்ஸ்பெக்டர் கனகராஜ் சிவகங்கை மாவட்ட நில மோசடி தடுப்பு பிரிவு டிஎஸ்பியாகவும், நாகர்கோவில் கியூ பிராஞ்ச் சிஐடி இன்ஸ்பெக்டர் பால்ராஜ் ராமநாதபுரம் கியூ பிரிவு டிஎஸ்பியாகவும், பூதப்பாண்டி இன்ஸ்பெக்டர் முத்துராஜ் ராமநாதபுரம் நில மோசடி தடுப்பு பிரிவு டிஎஸ்பியாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் இன்று இன்ஸ்பெக்டர்களு்கு டி.எஸ்.பிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் ஆய்வாளராக பணியாற்றி வரும் ஜெயச்சந்திரன் குமரி மாவட்ட மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி ஆகவும், திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிச்சையா குமரி மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பி ஆகவும், சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் நில மோசடி பிரிவு டிஎஸ்பி ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
குமரி மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிந்து தற்போது தாலுக்கா காவல் நிலையத்திற்கு பணி மாறுதலில் செல்ல இருக்கும் காவலர்களுக்கு இன்று (30.01.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.ஸ்டாலின் தலைமையில் வெளிப்படை தன்மையுடன் கலந்தாய்வு நடைபெற்றது. இதில், அவர்கள் கேட்ட காவல் நிலையங்கள் வழங்கப்பட்டது.
கன்னியா குமரி மாவட்ட திருமண மண்டப உரிமையாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் நியமனம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . அதில், தலைவராக .D.ரவீந்திரன், பொதுச்செயலாளராக B. சிதம்பரதாணு, பொருளாளராக வெங்கட சுப்பிரமணியன், அமைப்புச் செயலாளாரக K.பகவதி பெருமாள் பிள்ளை, சங்க ஆலோசகராக கீழப்பாவூர் த ஆ. சண்முகையா, மேலும் நிர்வாகிகள் பலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களின் நினைவு நாளில் அவரது தியாகத்தினை நினைவு கூர்ந்து போற்றுவோம். தேசத்தின் விடுதலைக்காகவும் நமது நாட்டை ஒருங்கிணைக்கவும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் என்றும் சரித்திர தாளில் பதிக்கப்பட்டிருக்கும் என காந்தியடிகள் நினைவு நாளான இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கன்னியாகுமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் குறிப்பிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று கூறியதாவது, குமரி மாவட்டம் சிற்றாறு அணை-2 மீன் வளர்ப்பு மேம்பாட்டு முகமை மீன் பண்ணையை புதுப்பித்து உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளது. இதில் ஒரே நேரத்தில் 25 லட்சம் மீன் குஞ்சுகள் வளர்த்து, அவை அணைகள் மற்றும் குளங்களில் வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவ இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் நாளை(ஜன.31) தொடங்குகிறது. இந்த பயிற்சி முகாமை கன்னியாகுமரியில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார். 90 நாட்களுக்கு மீனவர் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. கடற் படையில் சேருதல் உள்ளிட்ட வேலை வாய்ப்புக்கான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
#இன்று(ஜன.30) காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான மருத்துவமனையில் மருத்துவர் நியமிக்க கேட்டும், மத்திய அரசின் இஎஸ்ஐ காப்பீடு திட்டத்தில் தொழிலாளர்களை சேர்க்க கேட்டும் 57வது நாளாக கீரிப்பாறை ரப்பர் தொழிற்சாலை முன்பு உண்ணாவிரத போராட்டம்.#காலை 10:30 மணிக்கு திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை பிரச்சனை தொடர்பாக ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்து மகாசபை ஆர்ப்பாட்டம்.
டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5 அன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று(29/01/25) டெல்லியில் உள்ள மங்கல்புரி பகுதியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் வீடு வீடாக சென்று பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக, தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். இந்த நிகழ்ச்சியில் அவருடன் குமரி மாவட்ட பாஜக மகளிர் அணி தலைவர் சத்யா ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.